புதன், 29 செப்டம்பர், 2010

suttathu thenila

கேபி துரோகியா யதார்த்தவாதியா  
(பகுதி-3)
-மேதகு பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் (தாயகம்)
குளிர் ஜுரம் பிடித்த தமிழ் அரசியல்வாதிகள்
kp -1திடீரென்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு குளிர்காய்ச்சல் பிடித்து கேபியின் மீது பாய்கிறார்கள்; அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தங்களை விட்டு. புலிகளின் பிரதிநிதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களுக்கு கசப்பானதாக இருக்கலாம் ஆனால். புலிகளே ஏகபிரதிநிதிகள் என்று வேட்புமனுக் கிடைப்பதற்காக வன்னிக்கு காவடி எடுத்த கூட்டமைப்பும் புலிகளை வைத்து வியாபாரம் நடத்தும் தங்களின் முயற்சியில் பங்குபோட வந்தது அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால். இலங்கை அரசியலில் புலி என்ற பெயரை வைத்து எந்தப் பிழைப்பும் நடத்த முடியாது இன்னொரு தடவை புலி யாவாரம் செய்ய ஊருக்குள் நுழைந்தால். விளக்குமாறையும் மிளகாய்த்தூளையும் இவர்கள் சந்ததிக்க நேரிடும். இந்த நேரத்தில் கேபிக்கு எந்த நம்பகத் தன்மையும் இல்லாத நிலையில் வடக்கில் அரசியலில் நிறுத்தும் அளவில் அரசு இல்லை.
மற்ற அரசியல்வாதிகள் கேபி மீதான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது. ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். தாங்கள் ஒருவருமே தமிழ் மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றவர்கள் இல்லை என்பதையும். மகேஸ்வரனின் மனைவியும் தாங்களும் இலங்கை அரசியலில் ஒரே தட்டில் வைத்து அளக்கப்படுபவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கேபியை வைத்து உள்ளுர்த் தமிழர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டிய தேவை அரசுக்கு இல்லை அரசின் நோக்கம் முழுக்க முழுக்க தனக்கு தலையிடியைத் தரும் புலன் பெயர்ந்த கூட்டத்தை அடக்குவதற்கு கேபியைப் பயன்படுத்துவது தான் இந்த திட்டத்தின் கீழ்த் தான் கேபி தனக்கு நெருக்கமான சிலரை நிலைமையை நேரடியாகக் கண்டுகொள்வதற்காக அழைத்து அரச தரப்பினருடன் புரரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சித்தார் வழமை போல இதுவும் கேபியின் துரோகமாகவே நெடியவன் உட்பட்ட மற்றக் கூட்டத்தினரால் பிரசாரிக்கப்பட்டது சென்றவர்களும் அரச தரப்பின் வழிகாட்டலுடன் முகாம்களையும் பார்வையிட்டு மீண்டனர் .
இதில் திடீரென்று ஒரு திருப்பம் கேபியின் விருந்தினரான மருத்துவர் ஒருவர் குத்துக்கரணம் அடித்து. கேபி புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாயும் கேபிக்கும் அரச தரப்;பினருக்குமான தொடர்பு 2006 இலேயே இருந்ததாகவும் கூறிய. வெட்டிப் பொருத்திய வீடியோ ஒன்று தமிழ் நெற்றில் வெளியானது.
உடனேயே வானலையில் புயல் மையம் கொண்டது புலி ஆதரவாளர்கள் எல்லாரும் வரிந்து கட்டிக் கொண்டு ஐயோ. தலைவர் இருந்திருந்தால் இந்த துரோகிக்கு மண்டையில் போட்டு ஈழத்தை வெண்டிருப்பாரே? என்ற ஆதங்கத்துடன். ஈழம் கிடைக்காமல் போனதுக்கு ஆர் காரணம் எண்டு இப்ப எங்களுக்குத் தெரியும் என்று. என்றுமே முடியாத துரோகி பட்டியலில் உத்தியோகபூர்வமாக கேபியின் பெயரையும் இணைத்துக் கொண்டனர். கேபி தலைவரைச் சுத்தி. காசைச் சுவடி. வெறும் கப்பல்களை அனுப்பி கடலில் ஆழ்த்த தகவலும் கொடு;த்ததாக ஆய்வாளர்கள் புதைபொருள் ஆய்ந்து இந்தக் கூட்டத்தை மேலும் குசிப்படுத்தினர்.
சென்று மீண்ட இன்னொருவர் வழங்கிய தகவல்கள்படி. இந்த டாக்குத்தர் அங்கே இருக்கும் வரைக்கும் இந்த முரண்பாடுகள் பற்றி தெரிவிக்கவில்லை என்றும் கேபியை பாங்கொக்கில் புலனாய்வாளர்கள் சந்தித்தது பற்றிய உரையாடலின் போது அவர் இருக்கவில்லை என்றும். அந்த உரையாடலின் சாராம்சமே வேறு என்பதும் இணையத்தளங்களின் வெளியான போதும். இந்த புலன் பெயர் கூட்டத்தின் உண்மைக்கான தேடல் காரணமாக. அதன் காதிற்கு இந்த விபரங்கள் எட்டவேயில்லை. இப்படியாகத்தானே புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் கேபியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது
கேபியும் தன் புதிய ஞானோதயத்தின் அடிப்படையில் எதிர்ப்பு அரசியலில் பயனில்லை. அரசுடன் ஒத்துழைத்து மட்டுமே எதையாவது சாதிக்க முடியும் என்று. புலிகளின் சர்வதேச வலையமைப்பை செயலிழக்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு உறுதுணையாக வெளிநாட்டுப் புலிகளின் வர்த்தக தொடர்புகள் பற்றிய விபரங்களை வழங்குவதை அரசு உறுதிப்படுத்துகிறதுஇ கேபியை இது சம்பந்தமாய் குறை சொல்வதில் பயனில்லை தன்னைக் கைவிட்டு தன்னை துரோகியாக அடையாளம் காட்டும் கும்பலைப் பழி வாங்குவதற்கு இதை விட வேறு சந்தர்ப்பம் எங்கே கிடைக்கும்?
கேபி இல்லாத நாடு கடந்த ஈழமும் தேர்தல் நடத்தி பாராளுமன்றம் அமைத்தாலும். கேபிக்கும் அந்த அமைப்புடனான கேபியின் தொடர்புகள் அறுந்ததாகத் தெரியவில்லை இன்று நெடியவன் அணிக்கு எதிராக களத்தில் நிற்பது நாடு கடந்த ஈழக் கும்பல் இன்று காங்கிரஸ் புலிவாலுப்பிள்ளைகளும் இன்னும் பலருமாய் புலிசார் சுத்திஜீவிகள் அணி திரண்டிருப்பது நாடு கடந்த கூட்டத்திற்குப் பின்னால் தான் வெள்ளைப்புலி ஆலோசகர்கள் மதியுரை வழங்கும் போது. இந்தக் கூட்டம் யாரின் நலனுக்காகச் செயற்படும் என்பதை ஊகிப்பதில் பெரும் சிரமமில்லை இதில் வெள்ளைத் தோல் புலிகள் என்று இவர்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.
லிபரல் கட்சியின் பொப் ரே. பேராசிரியர் டேவிட் கம்ரன் போன்றவர்கள் வன்னி வரைக்கும் சென்று புலிகளுக்கு ஜனநாயகம் கற்பிக்க முயன்று தோற்றவர்கள். இவர்களைப் பொறுத்தவரைக்கும் சர்வதேச மனித உரிமைகளின் அடிப்படையிலான தமிழ் மக்களுக்கான தீர்வு ஜனநாயக அடிப்படையிலானதாய் இருக்க வேண்டும் இதனால் புலிகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க இவர்கள் பின்நின்றதில்லை ஆனால். புலிகளோடு ஒட்டிக் கொண்ட சட்டத்தரணிகள். பேராசிரியர்களான வெள்ளைத்தோலர்கள் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கற்பித்ததுடன் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று அழைப்பதில் பெருமை கொள்பவர்கள். இவர்களில் சிலர் புலிகளின் சம்பளப்பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் சிலர் வேறு சக்திகளின் நலன்களுக்காக புலி வேடம் போட்டு ஒட்டிக் கொண்டவர்கள்.
இவர்களின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்ட நாடு கடந்த ஈழம் என்ன செய்கிறது என்ற கேள்விக்கு முன்னால். அதற்கும் கேபிக்குமான உறவு என்பது இன்று பெரிய கேள்வி. கேபி இலங்கைக்கு உண்மை காணழூ அழைத்த பிரமுக விருந்தினர்கள். நாடு கடந்த ஈழத்துடன் தொடர்புகளைப் பேணுபவர்கள். இதன் அடிப்படையில் தான் நாடு கடந்த தமிழீழம் அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கிறது போலும்.
தலைவரின் முடிவின் மர்மம்
கேபியின் தற்போதைய பேட்டியில் அடுத்த சர்ச்சைக்குரிய விடயம். பிரபாகரனின் முடிவு பற்றியது பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கியமான மூலங்களின் தகவல்படி (கோத்தபாயா) தலைவர் விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்ததாகவும் தலைவரின் வீரம் குறித்து எதிரிகளே சிலாகித்ததாகவும் குறிப்பிடுகிறார் வெறுமனே என் தலைவன் இறந்து விட்டான் என்று அழுததற்கே இந்த மொத்து மொத்தியவர்களுக்கு இல்லை. தலைவர் சரணடைந்து சித்திரவதைக்குள்ளாகி இறந்தார் என்றா சொல்ல முடியும்? பிரபாகரனின் இறுதிக்கணங்கள் பற்றி சரியான சாட்சியங்கள் பகிரங்கமாக இதுவரையும் வராத வரைக்கும். சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் வைத்தே நாங்கள் முடிவுகளுக்கு வர முடியும். தலைவருக்குப் பின்னால் பெற்றோல் டின்னோடு அலைவதற்கு தமிழ்ச்செல்வன் இல்லாததால். தலைவரின் உடல் கூட எதிரிக்கு கிட்டாது என்று மார் தட்டியவர்கள் அவமானத்தால் கூனிக்குறுக நேரிட்டது. வெறும் தர்க்க ரீதியான நியாயப்படியே. இந்த பெட்ரோல் டின் கயிறு திரிப்பின் சாத்தியக்கூறுகள் பற்றி கியூறியஸ் முன்பு பல தடவை குதறியிருக்கிறான் மாயைகளின் மேல் கட்டப்பட்ட ஆகாய மாளிகைக்கு வைக்கப்பட்ட ஒரு செங்கல் இது சமீபத்திய பேட்டியிலும் கேபி இந்த மாயையை தொடரும் முயற்சியில் ஈடுபட்டு பெட்ரோல் டின் கடலில் விழுந்திருக்கலாம். அல்லது அதைக் கொண்டிருந்த போராளி முதலில் இறந்திருக்கலாம் என்கிறார்.
மறுதரப்பில். அரசு யுத்தக் குற்ற விசாரணைப் பயமுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது அத்துடன் கேபியை யுத்தக் குற்ற விசாரணையில் அரசு தரப்பில் பயன்படுத்த முயற்சி என்று செய்தி வருகிறது இந்த நிலையில். பிரபாகரன் சரணடைந்த பின்னால் கொல்லப்பட்டார் என்று கேபி சொல்லி விட்டு. எப்படி அரச விருந்தாளியாக இருக்க முடியும் அதிலும் கோத்தபாயா மீதே குற்றச்சாட்டுப் பலமாய் இருக்கும் போது. அவருடன் புரிந்துணர்வு கொண்ட நெருக்கமான நண்பரான கேபி அவரை எப்படி மாட்டி விடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியும்?
இன்னொரு கோணத்தில். கேபிக்கு உண்மை சொல்ல வேண்டும் என்ற தேவை அரசுக்கு ஏன் இருக்கிறது சொல்லும் உண்மையை அரசுக்கு எதிராக சந்தர்ப்பம் கிடைத்தால் கேபி பயன்படுத்த மாட்டார் என்று என்ன உத்தரவாதம் அரசுக்கு இருக்கிறது.
தலைவர் இறக்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் வருவார் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது இது கேபி எதைச் சொன்னாலும் நம்பத் தயாரில்லை இன்னும் ஒரு கூட்டம் தலைவரின் மணியான திட்டப்படி கேபி உள்ளுக்க போய் வேலையைக் குடுக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தலைவர் இறந்து விட்டார் என்பதை நம்பும் இன்னொரு கூட்டமோ. தலைவர் விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்தார் என்பதை நம்ப விரும்புகிறது அது கேட்க விரும்புவதை கேபி சொல்கிறார்இ இதன் மூலம் தனக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த கேபி விரும்புகிறார்.
கேபி சொல்வது உண்மையாயின். பிரபாகரனின் வீரத்திற்கு எதிரிகள் தலைவணங்கினார்கள் என்று கூறினால். தலைவரின் உடலை நிர்வாணமாக்கி; படையினர் மத்தியில் ஊர்வலமாய் கொண்டு திரிய வேண்டிய காரணம் என்ன? துட்டகைமுனு எல்லாளனுக்கு கொடுத்த மரியாதையை நவீன கைமுனு இந்த வரலாற்று எல்லாளனுக்கு கொடுக்காதன் காரணம் என்ன? பிரபாகரனின் உடல் காண்பிக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களைப் பார்வையிட்ட எவருக்கும் பல்வேறு நியாயமான கேள்விகள் உள்ளன. புலி ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்கும் பிரபாகரனின் இறப்புச் சாட்சிப் பத்திரத்தை அரசு கொடுக்காத கேள்வி போன்றவை அல்ல இவை புலிகள் போட்டுத் தள்ளும்போது அதற்கெல்லாம் சத்தியக்கடதாசி கொடுத்த மாதிரி. இவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் பிரபாகரன் உயிர் தப்பி எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கையை பலப்படுத்த கேட்கப்படுபவை. நியாயமான கேள்விகள் எல்லாம் விழுப்புண் பட்டதற்கான சான்றுகள் இல்லாத காரணத்தினால் எழுந்தவையே புலிகள் எதிரியின் கையில் சிக்க மாட்டார்கள் என்று புலிகள் வளர்த்த மாயை காரணமாக எழுந்த கேள்விகள் பல காணப்பட்ட காயங்கள் மட்டுமே பல்வேறு கேள்விகளை எழுப்பக் கூடியன அந்தக் கேள்விகள் கேபிக்கும் எழுந்திருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வீரமரணக் கதை மட்டும் பதிலாகி விட முடியாது.
கேபி பிரபாகரனின் மரணம் பற்றிய தகவல்களை மேலிடத் தொடர்பு மூலம் பெற்று நம்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். சரி. இறந்தவர் போகட்டும். இன்றும் உயிரோடு இருக்கிறார்களா என்ற எந்தத் தகவலும் இல்லாத பாலகுமார். பேபி சுப்பிரமணியம். யோகி. புதுவை போன்றவர்களின் நிலை பற்றி ஏன் இன்னமும் அறிய முயற்சிக்கவில்லை. புலி ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த தகவல்களைப் பெற்று ஏன் இன்னமும் தெரியப்படுத்தவில்லை.
இதைவிட. முக்கியமான ஒரு கேள்வி ஒன்றுண்டு. பிரபாகரனின் கடைசி மகன் தன்னுடன் கொண்டிருந்த நெருக்கம் பற்றி மனவேதனையுடன் குறிப்பிடும் கேபி அந்தச் சிறுவன் இறந்த விதம் பற்றி தெரிந்து தான் இருக்கிறார். தாயுடன் மகனும் குண்டில்; விழுந்து இறந்ததாக முதலில் நம்பினாலும் பின்னர் இணையத்தில் வந்த படங்கள் பற்றி குறிப்பிடுகிறார் இந்த அப்பாவிக் குழந்தையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது. அதன் தே;திரதாரிகள் யார் என்பதை இன்னமும் அறிய முடியாமலா இருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் எழுகிறதே?
அடுத்து முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. தலைவரைக் காப்பாற்றுவதற்கான கெலிகொப்டர் முயற்சிக்கு 3,5 மில்லியன் டொலர்களை நெடியவன் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். சமாதான முயற்சிகளை தான் மேற்கொண்டிருக்கையில் ஆயுதங்களைக் கடத்துவதை வெளிநாடுகள் அறிந்தால் தன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்பதால். தான் மீண்டும் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடவில்லை என்று கூறும் கேபி. பிரபாகரனைக் காப்பாற்ற கெலிகொப்டர் வாங்க முயற்சித்த விடயம் அந்த வெளிநாடுகளுக்குத் தெரிந்தால் தன் நம்பகத்தன்மைக்கு என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லையா அல்லது அந்த முயற்சிக்கு வெளிநாடுகளின் ஆசீர் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும். அவற்றிடமே அதற்கான உதவியைப் பெறுவதில் தடை இருந்திருக்குமா
அதையும் விட. இன்று போராட்டத்திற்கான பணத்தை போராளிகளின் நன்மைக்காக செலவிட என்று தொண்டு நிறுவனத்தை உருவாக்கிய கேபிக்கு இந்தப் பணம் தற்போது எப்படிக் கிடைத்தது? தொண்டு நிறுவனம் வெறும் சில மில்லியன் டொலர்களுடன் மட்டுமே வேகமாக ஆரம்பிக்கப்பட்டிருக்க நியாயமில்லை புலிகளின் அழிவின் போது. நெடியவன் கூட்டத்தின் கையில் பணம் முழுவதும் இருந்ததால். பிரபாகரனைக் காப்பாற்ற பணம் கிடைக்கவில்லை இப்போது கேபியின் கையில் புழங்கும் பணம் குறுகிய காலத்திற்குள் எப்படிக் கிடைத்தது? கேபியின் பின்னால் அணி திரண்ட கூட்டத்தினர் தான் இந்தப் பணத்தை தற்போது வழங்கியிருந்தாலும். அவர்களிடம் இந்த பணத்தை யுத்த காலத்தில் பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்திருக்குமா.
எனவே. கெலிகொப்டர் கதை கூட நம்பத் தகுந்ததாய் தென்படவில்லை. தன்நிலை விளக்கம் அளித்து. புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் தன் துரோக முத்திரையை அழித்து. மாவீரனாக ஞானஸ்நானம் பெறும் கேபியின் முயற்சி இந்த முரண்பாடுகளால் அடிபட்டுப் போகிறது
கேபியை நாங்களும் குற்றம் சாட்டவேண்டுமா?
இந்தக் கூட்டம் கண் மூடித்தனமாக துரோகிப் பட்டம் சூட்டுவதைப் போல. கேபியை நாங்களும் ஒதுக்கிப் புறந்தள்ள முடியாது. இந்தக் கூட்டம் வாயில் வரும் எவரையும் துரோகியாக்குவதன் காரணம். இந்தத் துரோகிகள் சதி செய்யாவிட்டால் தலைவர் ஏதோ வெட்டிப் புடுங்கியிருப்பார் என்ற எண்ணத்தில் தான் நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்து. சமாந்தர அரசை நிர்வகித்து வெதுப்பகம். வைப்பகம் வைத்திருந்த போது சாதிக்க முடியாததை. முள்ளிவாய்க்காலில் கௌபீனதாரியாக நின்ற போது எப்படிச் சாதித்திருக்க முடியும்? தலைவரின் முட்டாள்தனத்திற்கு யார் மீதாவது பழி போட்டே ஆக வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்களின் வரிசையில் கேபியும் ஒருவர். இன்று நெடியவனின் மாதாந்தக் கொடுப்பனவுகளுக்காக நோர்வேத் தலைவர் என்கிறார்கள் தொடர்ச்சியான வருமானம் இல்லாமல் இந்த ஜால்ராக் கூட்டத்திற்கு கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஒருநாள் கஜானா காலியாகும். அப்போது அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்போது. உவன் போராட்டத்துக்கு சேர்த்த காசைச் சுத்தி. தான் மடக்கிப் n;பாட்டு. கேபிக்கு காசு கொடுக்காததால் தான் தலைவருக்கு கெலிகொப்டர் கிடைக்கவில்லை என்று பிளேட்டை மாற்றி நெடியவனையும் இவர்கள் துரோகியாக்கினாலும் நாங்கள் ஆச்சரியப்படப் போவதில்லை.
கேபி இன்று ஆயுதப் போராட்டம் தவறு என்பது உண்மையிலேயே மனம் நொந்து. மனம் திரும்பிய ஒருவர் கூறும் உண்மையாகக் கூட இருக்கலாம். பிரபாகரன். பொட்டம்மான் போன்ற அரக்க இயல்பு கொண்டவர்கள் இறுதி நேரத்தில் கூட தங்கள் தவறுகளுக்கு மனம் வருந்தியிருப்பார்கள் என்பது சந்தேகமே மற்றவர்களின் உயிரைக் கொல்வதில் மகிழ்ச்சி காஹம் குருர இயல்பு படைத்த கோழைகளான இவர்கள் எதிரியின் கையில் அகப்பட்டதும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு நடித்திருக்கக் கூடும். தங்கள் உயிர் மீதான ஆசை எந்த வழியிலும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழிகோலும் காலில் விழுந்து கூட உயிர்ப்பிச்சை கேட்டிருக்கக் கூடும்.
ஆனால் எங்களுக்குத் தெரிந்தவரையிலும் கேபி பல்வேறு கொலைகளுக்கு உடந்தையாகவும். சாட்சியாகவும் நியாயப்படுத்துபவராகவும் இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் கொலை செய்ததாகவோ. அதில் இன்பம் காண்பவராகவோ இருந்ததாக அறியப்படவில்லை. போரின் போது ஏற்பட்ட அழிவின் கோரத்தை நேரில் கண்ட அசோகச் சக்கரவர்த்தி மனம் வருந்தி திருந்தியது போல. கேபியும் திருந்தியிருக்கக் கூடும். தவறு செய்த மனிதர்கள் தவறை உணர்ந்து அதற்கு பரிகாரம் தேட முயலும் போது அதற்கான மன்னிப்பை வழங்குவது மானிடத்தின் கடமை.
தன்னுடைய மனைவியின் புத்த மதம் தன்னில் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றிக் குறிப்பிடும் கோத்தபாயாவின் வீட்டு வாசல் புத்தர் சிலையைப் பார்த்து உண்மையிலேயே நிர்வாணம் அடைந்திருக்கக் கூடும். முகாம்களில் அல்லல்படும் போராளிகளின் நிலை கண்டு அழுததாக குறிப்பிடப்படும் போது. போரின் கொடுரத்தை கேபி கண் முன்னால் கண்டதன் பாதிப்பாகவே கருத முடியும்.
புலன் பெயர்ந்தவர்கள் இன்றைக்கும் புலிகளின் கொடுரங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில். கேபி முகாம்களில் உள்ள பல போராளிகள் கடைசி நேரத்தில் கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என்ற உண்மையை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கிறார். இன்றைக்கும் ஈழக்கனவில் இன்னும் ஆயிரக்கணக்கில் பலி கொடுக்க புலன் பெயர்ந்தவர்கள் தயாராகியிருக்கும் நிலையில். ஆயுதப் போராட்டம் தவறு என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறார். எதிர்ப்பு அரசியலால் நாங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறார்
தன்னுடைய விசுவாசம் காரணமாக பிரபாகரனின் முட்டாள்த்தனம் தான் இத்தனை அழிவுக்கு காரணம் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். பேட்டியின் வரிகளுக்கு இடையில் தேடினால். பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரத்தில் ஏற வேண்டிய கேபியின் அவலத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால் தான் கடைசி நேரத்தில் மக்களை வெளியேற விடாமல் மனிதக்கவசமாகப் பயன்படுத்திய புலிகளின் செயலை இன்றும் நியாயப்படுத்த முடிகிறது. மக்களை வெளியேற விட்டிருந்தால் புலிகள் தனித்துப் போய் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். இன்று கவசமாக வைத்திருந்து இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்த பின்னாலும் எந்த புலித்தலைவராலும் உயிர் தப்ப முடிந்ததா
இன்று திறந்த சிறைச்சாலைக் கைதியாக இருக்கும் கேபியால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் கேபியால் சில விடயங்களைச் சாதிக்க முடிந்திருக்கிறது. இதுவரையும் ஈழக்கனவை விற்று அரசியல் நடத்தி. புலன் பெயர்ந்த ரசிகர்களை குசிப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் கவலைப்படாத விடயங்கள் பற்றி கேபி அக்கறை கொண்டிருக்கிறார்.

தங்களை முகாம்களுக்கு அரசு விடவில்லை என்று குற்றம் சாட்டும் கூட்டமைப்பு. தங்கள் உறுப்பினர்கள் யாராவது முகாமுக்கு போய் வந்து முகாம் நிலை நன்றாக இருக்கிறது என்றவுடன் முட்டி மோதுகிறது. அரசு தடுக்க வேண்டும் என்பதற்காக அனுமதி பெறாமல் போக முயற்சித்தது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல். இப்படி எதிர்ப்பு அரசியல் நடத்தி புலன் பெயர்ந்தவர்களை குசிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அரசியல் செய்தவர்கள் இன்று வரைக்கும் அரசைக் குற்றம் சாட்டுவதை தவிர வேறெதையும் செய்ததில்லை. ஆனால் முகாம்களுக்கு நேரில் சென்று உரையாடிய கேபி அவர்கள் வெளியில் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதிகள் இல்லை என்ற சாதாரண விடயத்தை உடனடியாகவே தன் தொடர்பு மூலமாக நிவர்த்தி செய்கிறார் பரீட்சைக்கு தோற்றும் போராளிகளுக்கு வகுப்புகளுக்கும் உபகரணங்களுக்கும் வழி செய்கிறார். இங்கே கொடி தூக்குபவர்களோ. போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட மில்லியன்களை விழுங்கி ஏப்பம் விடும் கூட்டமோ இன்று வரைக்கும் எதையும் செய்ததாக இல்லை கேட்டால். அது அரசாங்கத்தின் கடமை என்று கையை விரிக்கிறது.
போராட்டத்திற்கு எனச் சேர்த்து தனது கையில் இருக்கும் பணத்தை மகிந்த சகோதரர்களின் காலடியில் ஒப்படைத்ததாகத் தான் யுஎன்பியும் புலன் பெயர்ந்த தமிழ்;க்கூட்டமும் குற்றம் சாட்டிய நிலையில் அந்தப் பணத்தை ஒரு தொண்டர் அமைப்பை உருவாக்கி அந்தப் போராளிகளினதும் மக்களதும் புனர்வாழ்வுக்காக கொடுப்பதை. துரோகம் என்ற ஒரே வார்த்தை மூலம் தடுத்து நிறுத்த வேண்டுமா.
ஆனால் இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால். கே.பியின் இன்றைய நடவடிக்கைகளுக்கு பின்னால் நிற்கும் அவரது வெளிநாட்டு ஆதரவாளர்கள் இன்றைக்கும் டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் துரோகி என்று கருதுவது தான் கேபி தற்போது மனம் மாறிச் செய்வதைத் தான் அவர்கள் முன்பே செய்தார்கள். அதைத் துரோகம் என்பதற்கு இன்றைக்கும் இவர்கள் தயங்குவதில்லை புலிகள் அரசின் காலில் விழுந்தால் அதை ராஜதந்திர நகர்வு என்றது போலத் தான் இதுவம்.
தங்களுடைய வங்குரோத்து அரசியலைக் கொண்டு நடத்த புலிகளின் பணத்தையும். பிரபாகரன் என்ற பிம்பத்தையும் நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் செல்லாக்காசு அரசியல்வாதிகளான வைகோவும் நெடுமாறனும். புதிதாய் தோன்றிய அரசியல் கோமாளி சீமானும் நெடியவனின் எலும்புத்துண்டுகளுக்காக கேபியைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரபாகரனின் படத்தைக் காட்டி பிழைப்பு நடத்தும் இந்த பிழைப்பு வாதிகளால் தான் புலிகள் கருவறுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மறைக்க இன்றைக்கும் கண்ணீர் நிறைந்த சோகக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று காது குத்தி இந்த முட்டாள்கூட்டத்தை வடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை நம்பி புலன் பெயர்ந்த கூட்டமும் நம்பி விசிலடிக்கிறது.
அரசுடன் சேர்ந்து எந்த அபிவிருத்தியையும். தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை தரக் கூடிய எதையும் செய்யும் போது. அதை ஆதரிக்கின்ற நன்மையைச் செய்யாவிட்டாலும். அதைச் செய்பவர்களைத் துரோகி என்று பட்டம் டே;டும் தீமையையாவது நிறுத்த வேண்டும்.
கேபி எங்களுக்குத் தலைவரும் இல்லை. கேபியின் செயற்பாட்டை நியாயப்படுத்துவதை மகிந்தவுக்கான அங்கீகாரமாக யாரும் திரிக்கவும் தேவையில்லை
கேபி துரோகியா யதார்த்தவாதியா என்ற கேள்விக்கு விடை தான் என்ன?
துரோகி என்பதற்கு சமுக நீதியின்படியிலான வரையறைகள் இல்லை. தன்னுடைய கருத்தோடு முரண்டுபடும் எவரையும் எவரும் துரோகி என்று குற்றம் சாட்டலாம் கொலைகாரக் கும்பல் கூட. மனம் திரும்பியவனைத் துரோகி என்று தான் கூறுகிறது தியாகம். துரோகம். மாவீரன் துரோகி என்ற சகதி அரசியலுக்குள் அமிழ்ந்திக் கிடந்ததால் தான் தமிழினம் இன்று நாறிப் போய் கிடக்கிறது
இளம்பரிதி போன்று. இந்த புலன் பெயர் கூட்டம் பூசித்து தொழுத புனிதப் போராளிகளே பதுங்கிய புலிகளைக் காட்டிக் கொடுத்து செய்து வரும் துரோகத்தை விட கேபியின் துரோகம் பெரிதில்லை
போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை சுத்தி தலை மறைவாகியுள்ள கூட்டமும். தொடர்ந்தும் சுத்த இன்றும் ஈழக்கனவை விற்கும் கூட்டமும் செய்யும் துரோகத்தை விட கேபியின் துரோகம் பாரதூரமானதில்லை
தீர்வுகளை உதறித் தள்ளி. அரசியல் சிந்தனையுள்ளவர்களை ஒழித்துக் கட்டி. தமிழ் அரசியலுக்கு நலம் எடுத்து. அடுத்த இரண்டு தலைமுறைக்கு தலை எடுக்க முடியாதபடி பிரபாகரன் செய்த துரோகத்தை விட கேபி ஒன்றும் பெரிதாக துரோகம் செய்யவில்லை
புலன் பெயர்ந்தவர்கள் துரோகி என்பதைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை போராட்டத்திற்கு கொடுத்த பணத்தை ஏப்பம் விடுபவர்களை தலைவர்கள் என்று ஜால்ராப் போடுபவர்களுக்கு. கேபியைத் துரோகி என்று சொல்லத் தகுதியில்லை
கேபி பலம் வாய்ந்த உளவு அமைப்பின் பிடிக்குள் இருந்து புலிகள் என்ற அமைப்பு அழிக்கப்படுவதற்கு துணை நின்றார் என்ற துரோகக் குற்றச்சாட்டு பற்றிய பிரச்சனை கேபிக்கும் புலி ஆதரவாளர்களுக்குமானது நாங்கள் அது குறித்து அக்கறை கொள்ளத் தேவையில்லை.
புலிகள் என்ற அரக்கர் கூட்டம் கூண்டோடு கைலாயம் போன பின்னாலும் அதன் பின்னால் வால் பிடித்த கூட்டம் ஒரு துளி கண்ணீர் கூட விடாத நிலையில். அந்தக் கூட்டம் அழிந்து போவதற்கு யார் துணை நின்றால் தான் என்ன? மகிந்த இந்தியாவின் துணையைப் பெற்றால் என்ன உளவு நிறுவனம் கேபியின் உதவியைப் பெற்றால் தான் என்ன? புலிகள் இன்று இருந்திருந்தாலும் எதையும் சாதிக்கப் போவதில்லை.  இருந்தாலும் ஒன்று தான் அழிந்தாலும் ஒன்று தான்
யதார்த்தவாதியா என்றாலும் கேபி இன்று கூறும் தன் மனமாற்றம் எவ்வளவு தூரம் உளச்சுத்தியானது என்பதைப் பொறுத்தது யேசு உயிர்த்து விட்டார் என்பதை நம்பாத தோமாஸ்கள் n;பாலத் தான் நாங்களும் கேபி உண்மையாக மனமாற்றம் அடைந்த யதார்த்தவாதி என்பதை. அவரைத் தனியாக வெளிநாடு போக அனுமதித்து. என்ரை வாலைப் பிடி பாப்பம் என்று வறுகி. வெளிநாடுகளில் தஞ்சம் கோராமல். தன் கருத்துக்களை நிறைவேற்றுவதற்காக. சுயமாகவே திரும்பி வருவாராக இருந்தால் நம்பலாம்
குர்திஸ் மக்களின் தலைவனாக. கிரேக்க தேசத்தில் வாழ்ந்து போராட்டம் நடத்திய ஓஜாலான். துருக்கி கிரேக்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்தியதும் அங்கே தஞ்சம் இருக்கப் பயந்து கென்யாவுக்குப் போன போது. விமானத்தில் வைத்து துருக்கியர்களால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். விசாரணையில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை கிடைக்கலாம் என்ற நிலையில். துருக்கிய அரசியலமைப்பின் கீழ் பேச்சுவார்த்தையுடனான தீர்வுக்கு சம்மதம் என்று தெரிவித்தும். தற்போது ஆயுட்தண்டனையில் சிறையில் இருக்கிறார். ஓஜாலான் சுருக்குக் கயிறு தன் கழுத்துக்கு வந்து. தன் உயிருக்கு ஆபத்து என்று வந்தவுடன் பேசித் தீர்க்கலாம் என்றது போல கேபியும் செய்கிறார். பிரபாகரன் செய்ததும் அதுதான் தன் உயிருக்கு பாதுகாப்பு இருக்கும் வரையில் கரும்புலிகளை அனுப்பி அழிவு பண்ணி. மாவீரர் பட்டம் கொடுத்தவர் தன் உயிர் என்றதும் கொடி தூக்கவில்லையா?
இவர்கள் எல்லாம் சிறையில் அடைத்தாலும் இலட்சியத்தை விட்டு விலகாத மகாத்மாவோ மண்டேலாவோ அல்ல தூக்கில் தொங்கி சித்திரவதை செய்யப்பட்ட போதும் சுதந்திரம் வேண்டிக் குரல் கொடுத்த ஸ்கொட்லாந்தின் வீர இதயம் படைத்த வில்லியம் வலஸ{ம் அல்ல
கேபியின் மனமாற்றம் உளச்சுத்தியானதா வெறும் நடிப்பா என்று ஆராய்வதை விட்டு. மாயைகளால் உருவாக்கப்பட்ட இந்த மாவீர மாயாவிகள் எல்லாம் உயிருக்குப் பயந்த வெறும் மனிதர்களே என்று. நாங்கள் தான் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் யதார்த்தவாதிகளாய் இருக்க வேண்டும்.
தற்போது வெறுமனே கோத்தபாயா. மகிந்த போன்ற தனிநபர்கள் சிலரைச் சுற்றித் தான் கேபியின் நம்பிக்கை தான் வாழ்க்கை இருக்கிறது மாறும் அரசியல் நிலைகளில் இது ஆபத்தானது எனினும் மகிந்த தனது நிலையை அரசியலமைப்பு மாற்றங்களால் ஸ்திரப்படுத்திய நிலையில் கொஞ்ச நாளைக்கு கேபியின் காட்டில் மழை பெய்யும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாததை கேபியால் இன்று செய்ய முடிகிறது. அதிலும் தான் நம்பிய கொள்கையில் செயற்படுவதற்கு சில புலன் பெயர்ந்த முக்கிய புள்ளிகளை தன் வழிக்கு வரச் செய்து. பயன்படுத்த முடிகிறது. தன் துரோகப்பட்டத்தையும் மீறி. இன்றும் புலி ஆதரவாளர்கள் மறைக்க முயலும் உண்மைகளை பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. போராட்டத்திற்காக தங்களைத் தியாகம் செய்தவர்களும் கடைசி நேரத்தில் பலி கொடுக்க இழுத்துச் செல்லப்பட்டவர்களும் இன்று தங்கள் வாழ்வையே அதற்கான விலையாகச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஈழக்கனவோடு கனவுலகில் வாழ்பவர்களும் கனவு வியாபாரிகளும் இவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல். அரசைக் குற்றம் சாட்டுவதற்காக முதலைக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அத்துடன் கேபி இதுவரைக்கும் அரசியல் தீர்வு என்பது பற்றி வாயே திறக்கவில்லை. தேவைப்பட்டால் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு உசுப்பேத்த வாய் வீச்சுக் காட்டியிருக்கலாம் தன்னுடைய நிலையை நன்றாக உணர்ந்ததால் அரசியல் தீர்வு பற்றிய கதை இல்லாமல். போராளிகள். இடம் பெயர்ந்தோர் நலன் பற்றி பேசுகிறார்.
கேபி துரோகியும் இல்லை யதார்த்தவாதியும் இல்லாமல் இருக்கலாம்.
அவர் ஒரு ழே;நிலையின் கைதி அந்தக் கைதியிடம் அதிகமாய் எதிர்பார்க்காமல். தன் ழே;நிலைக்கேற்ப. தமிழ் மக்களுக்குச் செய்ய முடிந்ததை செய்வதையாவது பாராட்டுவோம்
இல்லை. கேபி துரோகி தான் என்று வரிந்து கட்டிக் கொண்டு சூளுரைப்பவர்கள் நெடியவன் கூட்டம் தமிழ் ஈழத்தைப் பெறவும் முகாம்களில் அடைபட்டிருக்கும் போராளிகள் விடுதலை பெறவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதையும். இதுவரைக்கும் இந்த போராளிகளுக்கும் இடம் பெயர்ந்தோருக்கும் என்ன செய்தது என்பதையும். நெடியவன் தலைமையிலான வணங்காமண் கப்பல் எப்போது புறப்படும். அதில் தங்களது பிள்ளைகளை வேல் கொண்டு அனுப்ப எத்தனை புலநானூற்று பெற்றோர் தயார். கட்டாக்காலி முரட்டுக்காளைகளாய் திமிறித் திரியும் இளையோர் எத்தனை பேர் களம் செல்லத் தயார் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தால். அவர்கள் போகிற வழிக்குப் புண்ணியம் கிடைக்க. நாங்களும் அவர்களுக்கு ஏதோ நம்மாலானது எதையாவது செய்யலாம்?

1 கருத்து: