கருத்து பகிர்வு
அண்மைக்காலங்களில் எந்த செய்திகளும் சரி வலைப்பதிவுகளும் சரி உள்ளிருந்தே கொல்லும் வியாதி போல எதோ KP துரோகியா?KPரெஜி துரோகி?நெடியவன் துரோகி? விநாயகம் துரோகி? ......................இப்படியே நீண்டு செல்கிறது பட்டியல் ,இதிலே விசேடம் என்னவென்றால் இந்த துரோக பட்டியலை தயாரிப்பவர் கருணாவோ டக்ளஷ் அல்ல .போராட்டம் என்று காவடியாடியவர்கள் .பார்வையாளர்களாக தங்கள் குடும்பநலம் பேணியவர்கள் தான் இந்த தேசப்பற்றாளர்கள் .கேவலம் என்ன என்றால் நெடியவன் ,KP,உருத்திரகுமாரன் ஆகியோரது cappacity என்ன என்பதனை ,அவர்களது ஆசையினை சரியாக புரிந்து கொண்ட சிங்கப்பூர் பேராசிரியர் ,நெடியவனால் தான் இலங்கை அரசுக்கு பங்கம் ஏற்படும் என்ற தொனியில் பெற்றோல் உற்றுகிறார்.
அதனை நம்பி எம்மவர்களும் சொடைபோவது தான் வேதனை தரும் விடயம்.
ஒன்றை நான் அடிக்கடி சொல்கிறேன் ,இனிமேல் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் எதுவும் செய்ய முடியாது .அது உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ சரி.அந்த யதார்த்தத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .இந்தியாவில் அண்மைய நீதிமன்ற தீர்ப்பு இதற்கு உதாரணம் ,அடுத்து விடுதலைப்புலிகளது விருப்பமோ ,தலைவரது தனிப்பட்ட விருப்பல்ல, தமிழீழம் .இதற்கு யாரும் தலைமை தாங்கலாம்....
இப்போ உள்ள நிலைமையில் சரியோ தவறோ புத்திஜீவிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாடுகடந்த அரசை பலப்படுத்தலாம் .
தமிழ் மக்களது விடுதலையினை உண்மையாக்க வெளிநாட்டுவாழ்மக்கள் ,போராளிகள் அனைவரும் இணைந்து தமிழீழ சொத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பகிரங்கமாக நாடுகடந்த அரசிடம் ஒப்படைத்து செயலில் இறங்க வேண்டும் .நாங்கள் வாழவே வழியில்லாமல் இருக்கும் துர்பாக்கிய நிலைமையில், தமிழீழம் தான் தீர்வு என்று சொல்லி உள்ளதையும் கேடுத்துக்கொள்ளக்கூடாது .தமிழீழ கனவு நெஞ்சிலே இருக்கட்டும் .அது அடையக்கூடிய இலக்காக இருக்கட்டும் ,அதல்ல இப்போதைய பிரச்சனை மக்கள் மிகவும் அச்சமடைந்த நிலைமையில் உள்ளனர் வேட்டிக்கு ஆசைப்பட்டு கொமனமும் போனகதைபோல சிங்கள குடியேற்றங்கள் வேகவேகமாக முனைப்பு பெறுகிறது .இங்கே தமிழனுக்கல்ல வடக்கில் வாழும் ஈழத்தமிழன் தனது பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்துபோய் உள்ளான் ,தற்போதுள்ள நிலைமையில் அவ்விட நிலைமைக்கு ஏற்ராட்போல செயல்படவேண்டிய இக்கட்டினை உணராமல் சொத்துக்கு சண்டை பிடிப்பது எந்தவிதத்தில் சரி என எனக்கு புரியவில்லை.இவர்களை பார்க்கும் பொது அந்த மனிதர் எவ்வளவு பாவம் என்பது எமக்கு புரியும் .சொத்துக்களை அடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிச்சுக்கொண்டு பேசாம இருந்தாலே ஒருவேளை இந்த பிரச்சனைகள் முடிந்தாலும் முடியும் .
உலகமே பார்த்து வியந்த கட்டுக்கோப்பான இயக்கத்தில் இருந்தவர்களின் இலட்சணமா ?என நினைக்க தோணும அளவுக்கு நாற்றம் எடுக்குது .தயவு செய்து ஆக்கபூர்வமாக சிந்தித்துக்கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமாக ஈழ மண்ணில் வாழும் மக்களுக்காக ,வாழ்ந்த மக்கள் ,வாழவேண்டும் என மரணித்துப்போனவர்களை மனம் நிறுத்தி செயல்படுங்கள்
நன்றி
கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக