புதன், 29 செப்டம்பர், 2010

suttathu thenila

கேபி துரோகியா யதார்த்தவாதியா  
(பகுதி-3)
-மேதகு பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் (தாயகம்)
குளிர் ஜுரம் பிடித்த தமிழ் அரசியல்வாதிகள்
kp -1திடீரென்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு குளிர்காய்ச்சல் பிடித்து கேபியின் மீது பாய்கிறார்கள்; அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தங்களை விட்டு. புலிகளின் பிரதிநிதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களுக்கு கசப்பானதாக இருக்கலாம் ஆனால். புலிகளே ஏகபிரதிநிதிகள் என்று வேட்புமனுக் கிடைப்பதற்காக வன்னிக்கு காவடி எடுத்த கூட்டமைப்பும் புலிகளை வைத்து வியாபாரம் நடத்தும் தங்களின் முயற்சியில் பங்குபோட வந்தது அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால். இலங்கை அரசியலில் புலி என்ற பெயரை வைத்து எந்தப் பிழைப்பும் நடத்த முடியாது இன்னொரு தடவை புலி யாவாரம் செய்ய ஊருக்குள் நுழைந்தால். விளக்குமாறையும் மிளகாய்த்தூளையும் இவர்கள் சந்ததிக்க நேரிடும். இந்த நேரத்தில் கேபிக்கு எந்த நம்பகத் தன்மையும் இல்லாத நிலையில் வடக்கில் அரசியலில் நிறுத்தும் அளவில் அரசு இல்லை.
மற்ற அரசியல்வாதிகள் கேபி மீதான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது. ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். தாங்கள் ஒருவருமே தமிழ் மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றவர்கள் இல்லை என்பதையும். மகேஸ்வரனின் மனைவியும் தாங்களும் இலங்கை அரசியலில் ஒரே தட்டில் வைத்து அளக்கப்படுபவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கேபியை வைத்து உள்ளுர்த் தமிழர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டிய தேவை அரசுக்கு இல்லை அரசின் நோக்கம் முழுக்க முழுக்க தனக்கு தலையிடியைத் தரும் புலன் பெயர்ந்த கூட்டத்தை அடக்குவதற்கு கேபியைப் பயன்படுத்துவது தான் இந்த திட்டத்தின் கீழ்த் தான் கேபி தனக்கு நெருக்கமான சிலரை நிலைமையை நேரடியாகக் கண்டுகொள்வதற்காக அழைத்து அரச தரப்பினருடன் புரரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சித்தார் வழமை போல இதுவும் கேபியின் துரோகமாகவே நெடியவன் உட்பட்ட மற்றக் கூட்டத்தினரால் பிரசாரிக்கப்பட்டது சென்றவர்களும் அரச தரப்பின் வழிகாட்டலுடன் முகாம்களையும் பார்வையிட்டு மீண்டனர் .
இதில் திடீரென்று ஒரு திருப்பம் கேபியின் விருந்தினரான மருத்துவர் ஒருவர் குத்துக்கரணம் அடித்து. கேபி புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாயும் கேபிக்கும் அரச தரப்;பினருக்குமான தொடர்பு 2006 இலேயே இருந்ததாகவும் கூறிய. வெட்டிப் பொருத்திய வீடியோ ஒன்று தமிழ் நெற்றில் வெளியானது.
உடனேயே வானலையில் புயல் மையம் கொண்டது புலி ஆதரவாளர்கள் எல்லாரும் வரிந்து கட்டிக் கொண்டு ஐயோ. தலைவர் இருந்திருந்தால் இந்த துரோகிக்கு மண்டையில் போட்டு ஈழத்தை வெண்டிருப்பாரே? என்ற ஆதங்கத்துடன். ஈழம் கிடைக்காமல் போனதுக்கு ஆர் காரணம் எண்டு இப்ப எங்களுக்குத் தெரியும் என்று. என்றுமே முடியாத துரோகி பட்டியலில் உத்தியோகபூர்வமாக கேபியின் பெயரையும் இணைத்துக் கொண்டனர். கேபி தலைவரைச் சுத்தி. காசைச் சுவடி. வெறும் கப்பல்களை அனுப்பி கடலில் ஆழ்த்த தகவலும் கொடு;த்ததாக ஆய்வாளர்கள் புதைபொருள் ஆய்ந்து இந்தக் கூட்டத்தை மேலும் குசிப்படுத்தினர்.
சென்று மீண்ட இன்னொருவர் வழங்கிய தகவல்கள்படி. இந்த டாக்குத்தர் அங்கே இருக்கும் வரைக்கும் இந்த முரண்பாடுகள் பற்றி தெரிவிக்கவில்லை என்றும் கேபியை பாங்கொக்கில் புலனாய்வாளர்கள் சந்தித்தது பற்றிய உரையாடலின் போது அவர் இருக்கவில்லை என்றும். அந்த உரையாடலின் சாராம்சமே வேறு என்பதும் இணையத்தளங்களின் வெளியான போதும். இந்த புலன் பெயர் கூட்டத்தின் உண்மைக்கான தேடல் காரணமாக. அதன் காதிற்கு இந்த விபரங்கள் எட்டவேயில்லை. இப்படியாகத்தானே புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் கேபியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது
கேபியும் தன் புதிய ஞானோதயத்தின் அடிப்படையில் எதிர்ப்பு அரசியலில் பயனில்லை. அரசுடன் ஒத்துழைத்து மட்டுமே எதையாவது சாதிக்க முடியும் என்று. புலிகளின் சர்வதேச வலையமைப்பை செயலிழக்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு உறுதுணையாக வெளிநாட்டுப் புலிகளின் வர்த்தக தொடர்புகள் பற்றிய விபரங்களை வழங்குவதை அரசு உறுதிப்படுத்துகிறதுஇ கேபியை இது சம்பந்தமாய் குறை சொல்வதில் பயனில்லை தன்னைக் கைவிட்டு தன்னை துரோகியாக அடையாளம் காட்டும் கும்பலைப் பழி வாங்குவதற்கு இதை விட வேறு சந்தர்ப்பம் எங்கே கிடைக்கும்?
கேபி இல்லாத நாடு கடந்த ஈழமும் தேர்தல் நடத்தி பாராளுமன்றம் அமைத்தாலும். கேபிக்கும் அந்த அமைப்புடனான கேபியின் தொடர்புகள் அறுந்ததாகத் தெரியவில்லை இன்று நெடியவன் அணிக்கு எதிராக களத்தில் நிற்பது நாடு கடந்த ஈழக் கும்பல் இன்று காங்கிரஸ் புலிவாலுப்பிள்ளைகளும் இன்னும் பலருமாய் புலிசார் சுத்திஜீவிகள் அணி திரண்டிருப்பது நாடு கடந்த கூட்டத்திற்குப் பின்னால் தான் வெள்ளைப்புலி ஆலோசகர்கள் மதியுரை வழங்கும் போது. இந்தக் கூட்டம் யாரின் நலனுக்காகச் செயற்படும் என்பதை ஊகிப்பதில் பெரும் சிரமமில்லை இதில் வெள்ளைத் தோல் புலிகள் என்று இவர்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.
லிபரல் கட்சியின் பொப் ரே. பேராசிரியர் டேவிட் கம்ரன் போன்றவர்கள் வன்னி வரைக்கும் சென்று புலிகளுக்கு ஜனநாயகம் கற்பிக்க முயன்று தோற்றவர்கள். இவர்களைப் பொறுத்தவரைக்கும் சர்வதேச மனித உரிமைகளின் அடிப்படையிலான தமிழ் மக்களுக்கான தீர்வு ஜனநாயக அடிப்படையிலானதாய் இருக்க வேண்டும் இதனால் புலிகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க இவர்கள் பின்நின்றதில்லை ஆனால். புலிகளோடு ஒட்டிக் கொண்ட சட்டத்தரணிகள். பேராசிரியர்களான வெள்ளைத்தோலர்கள் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கற்பித்ததுடன் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று அழைப்பதில் பெருமை கொள்பவர்கள். இவர்களில் சிலர் புலிகளின் சம்பளப்பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் சிலர் வேறு சக்திகளின் நலன்களுக்காக புலி வேடம் போட்டு ஒட்டிக் கொண்டவர்கள்.
இவர்களின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்ட நாடு கடந்த ஈழம் என்ன செய்கிறது என்ற கேள்விக்கு முன்னால். அதற்கும் கேபிக்குமான உறவு என்பது இன்று பெரிய கேள்வி. கேபி இலங்கைக்கு உண்மை காணழூ அழைத்த பிரமுக விருந்தினர்கள். நாடு கடந்த ஈழத்துடன் தொடர்புகளைப் பேணுபவர்கள். இதன் அடிப்படையில் தான் நாடு கடந்த தமிழீழம் அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கிறது போலும்.
தலைவரின் முடிவின் மர்மம்
கேபியின் தற்போதைய பேட்டியில் அடுத்த சர்ச்சைக்குரிய விடயம். பிரபாகரனின் முடிவு பற்றியது பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கியமான மூலங்களின் தகவல்படி (கோத்தபாயா) தலைவர் விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்ததாகவும் தலைவரின் வீரம் குறித்து எதிரிகளே சிலாகித்ததாகவும் குறிப்பிடுகிறார் வெறுமனே என் தலைவன் இறந்து விட்டான் என்று அழுததற்கே இந்த மொத்து மொத்தியவர்களுக்கு இல்லை. தலைவர் சரணடைந்து சித்திரவதைக்குள்ளாகி இறந்தார் என்றா சொல்ல முடியும்? பிரபாகரனின் இறுதிக்கணங்கள் பற்றி சரியான சாட்சியங்கள் பகிரங்கமாக இதுவரையும் வராத வரைக்கும். சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் வைத்தே நாங்கள் முடிவுகளுக்கு வர முடியும். தலைவருக்குப் பின்னால் பெற்றோல் டின்னோடு அலைவதற்கு தமிழ்ச்செல்வன் இல்லாததால். தலைவரின் உடல் கூட எதிரிக்கு கிட்டாது என்று மார் தட்டியவர்கள் அவமானத்தால் கூனிக்குறுக நேரிட்டது. வெறும் தர்க்க ரீதியான நியாயப்படியே. இந்த பெட்ரோல் டின் கயிறு திரிப்பின் சாத்தியக்கூறுகள் பற்றி கியூறியஸ் முன்பு பல தடவை குதறியிருக்கிறான் மாயைகளின் மேல் கட்டப்பட்ட ஆகாய மாளிகைக்கு வைக்கப்பட்ட ஒரு செங்கல் இது சமீபத்திய பேட்டியிலும் கேபி இந்த மாயையை தொடரும் முயற்சியில் ஈடுபட்டு பெட்ரோல் டின் கடலில் விழுந்திருக்கலாம். அல்லது அதைக் கொண்டிருந்த போராளி முதலில் இறந்திருக்கலாம் என்கிறார்.
மறுதரப்பில். அரசு யுத்தக் குற்ற விசாரணைப் பயமுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது அத்துடன் கேபியை யுத்தக் குற்ற விசாரணையில் அரசு தரப்பில் பயன்படுத்த முயற்சி என்று செய்தி வருகிறது இந்த நிலையில். பிரபாகரன் சரணடைந்த பின்னால் கொல்லப்பட்டார் என்று கேபி சொல்லி விட்டு. எப்படி அரச விருந்தாளியாக இருக்க முடியும் அதிலும் கோத்தபாயா மீதே குற்றச்சாட்டுப் பலமாய் இருக்கும் போது. அவருடன் புரிந்துணர்வு கொண்ட நெருக்கமான நண்பரான கேபி அவரை எப்படி மாட்டி விடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியும்?
இன்னொரு கோணத்தில். கேபிக்கு உண்மை சொல்ல வேண்டும் என்ற தேவை அரசுக்கு ஏன் இருக்கிறது சொல்லும் உண்மையை அரசுக்கு எதிராக சந்தர்ப்பம் கிடைத்தால் கேபி பயன்படுத்த மாட்டார் என்று என்ன உத்தரவாதம் அரசுக்கு இருக்கிறது.
தலைவர் இறக்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் வருவார் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது இது கேபி எதைச் சொன்னாலும் நம்பத் தயாரில்லை இன்னும் ஒரு கூட்டம் தலைவரின் மணியான திட்டப்படி கேபி உள்ளுக்க போய் வேலையைக் குடுக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தலைவர் இறந்து விட்டார் என்பதை நம்பும் இன்னொரு கூட்டமோ. தலைவர் விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்தார் என்பதை நம்ப விரும்புகிறது அது கேட்க விரும்புவதை கேபி சொல்கிறார்இ இதன் மூலம் தனக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த கேபி விரும்புகிறார்.
கேபி சொல்வது உண்மையாயின். பிரபாகரனின் வீரத்திற்கு எதிரிகள் தலைவணங்கினார்கள் என்று கூறினால். தலைவரின் உடலை நிர்வாணமாக்கி; படையினர் மத்தியில் ஊர்வலமாய் கொண்டு திரிய வேண்டிய காரணம் என்ன? துட்டகைமுனு எல்லாளனுக்கு கொடுத்த மரியாதையை நவீன கைமுனு இந்த வரலாற்று எல்லாளனுக்கு கொடுக்காதன் காரணம் என்ன? பிரபாகரனின் உடல் காண்பிக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களைப் பார்வையிட்ட எவருக்கும் பல்வேறு நியாயமான கேள்விகள் உள்ளன. புலி ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்கும் பிரபாகரனின் இறப்புச் சாட்சிப் பத்திரத்தை அரசு கொடுக்காத கேள்வி போன்றவை அல்ல இவை புலிகள் போட்டுத் தள்ளும்போது அதற்கெல்லாம் சத்தியக்கடதாசி கொடுத்த மாதிரி. இவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் பிரபாகரன் உயிர் தப்பி எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கையை பலப்படுத்த கேட்கப்படுபவை. நியாயமான கேள்விகள் எல்லாம் விழுப்புண் பட்டதற்கான சான்றுகள் இல்லாத காரணத்தினால் எழுந்தவையே புலிகள் எதிரியின் கையில் சிக்க மாட்டார்கள் என்று புலிகள் வளர்த்த மாயை காரணமாக எழுந்த கேள்விகள் பல காணப்பட்ட காயங்கள் மட்டுமே பல்வேறு கேள்விகளை எழுப்பக் கூடியன அந்தக் கேள்விகள் கேபிக்கும் எழுந்திருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வீரமரணக் கதை மட்டும் பதிலாகி விட முடியாது.
கேபி பிரபாகரனின் மரணம் பற்றிய தகவல்களை மேலிடத் தொடர்பு மூலம் பெற்று நம்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். சரி. இறந்தவர் போகட்டும். இன்றும் உயிரோடு இருக்கிறார்களா என்ற எந்தத் தகவலும் இல்லாத பாலகுமார். பேபி சுப்பிரமணியம். யோகி. புதுவை போன்றவர்களின் நிலை பற்றி ஏன் இன்னமும் அறிய முயற்சிக்கவில்லை. புலி ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த தகவல்களைப் பெற்று ஏன் இன்னமும் தெரியப்படுத்தவில்லை.
இதைவிட. முக்கியமான ஒரு கேள்வி ஒன்றுண்டு. பிரபாகரனின் கடைசி மகன் தன்னுடன் கொண்டிருந்த நெருக்கம் பற்றி மனவேதனையுடன் குறிப்பிடும் கேபி அந்தச் சிறுவன் இறந்த விதம் பற்றி தெரிந்து தான் இருக்கிறார். தாயுடன் மகனும் குண்டில்; விழுந்து இறந்ததாக முதலில் நம்பினாலும் பின்னர் இணையத்தில் வந்த படங்கள் பற்றி குறிப்பிடுகிறார் இந்த அப்பாவிக் குழந்தையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது. அதன் தே;திரதாரிகள் யார் என்பதை இன்னமும் அறிய முடியாமலா இருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் எழுகிறதே?
அடுத்து முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. தலைவரைக் காப்பாற்றுவதற்கான கெலிகொப்டர் முயற்சிக்கு 3,5 மில்லியன் டொலர்களை நெடியவன் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். சமாதான முயற்சிகளை தான் மேற்கொண்டிருக்கையில் ஆயுதங்களைக் கடத்துவதை வெளிநாடுகள் அறிந்தால் தன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்பதால். தான் மீண்டும் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடவில்லை என்று கூறும் கேபி. பிரபாகரனைக் காப்பாற்ற கெலிகொப்டர் வாங்க முயற்சித்த விடயம் அந்த வெளிநாடுகளுக்குத் தெரிந்தால் தன் நம்பகத்தன்மைக்கு என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லையா அல்லது அந்த முயற்சிக்கு வெளிநாடுகளின் ஆசீர் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும். அவற்றிடமே அதற்கான உதவியைப் பெறுவதில் தடை இருந்திருக்குமா
அதையும் விட. இன்று போராட்டத்திற்கான பணத்தை போராளிகளின் நன்மைக்காக செலவிட என்று தொண்டு நிறுவனத்தை உருவாக்கிய கேபிக்கு இந்தப் பணம் தற்போது எப்படிக் கிடைத்தது? தொண்டு நிறுவனம் வெறும் சில மில்லியன் டொலர்களுடன் மட்டுமே வேகமாக ஆரம்பிக்கப்பட்டிருக்க நியாயமில்லை புலிகளின் அழிவின் போது. நெடியவன் கூட்டத்தின் கையில் பணம் முழுவதும் இருந்ததால். பிரபாகரனைக் காப்பாற்ற பணம் கிடைக்கவில்லை இப்போது கேபியின் கையில் புழங்கும் பணம் குறுகிய காலத்திற்குள் எப்படிக் கிடைத்தது? கேபியின் பின்னால் அணி திரண்ட கூட்டத்தினர் தான் இந்தப் பணத்தை தற்போது வழங்கியிருந்தாலும். அவர்களிடம் இந்த பணத்தை யுத்த காலத்தில் பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்திருக்குமா.
எனவே. கெலிகொப்டர் கதை கூட நம்பத் தகுந்ததாய் தென்படவில்லை. தன்நிலை விளக்கம் அளித்து. புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் தன் துரோக முத்திரையை அழித்து. மாவீரனாக ஞானஸ்நானம் பெறும் கேபியின் முயற்சி இந்த முரண்பாடுகளால் அடிபட்டுப் போகிறது
கேபியை நாங்களும் குற்றம் சாட்டவேண்டுமா?
இந்தக் கூட்டம் கண் மூடித்தனமாக துரோகிப் பட்டம் சூட்டுவதைப் போல. கேபியை நாங்களும் ஒதுக்கிப் புறந்தள்ள முடியாது. இந்தக் கூட்டம் வாயில் வரும் எவரையும் துரோகியாக்குவதன் காரணம். இந்தத் துரோகிகள் சதி செய்யாவிட்டால் தலைவர் ஏதோ வெட்டிப் புடுங்கியிருப்பார் என்ற எண்ணத்தில் தான் நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்து. சமாந்தர அரசை நிர்வகித்து வெதுப்பகம். வைப்பகம் வைத்திருந்த போது சாதிக்க முடியாததை. முள்ளிவாய்க்காலில் கௌபீனதாரியாக நின்ற போது எப்படிச் சாதித்திருக்க முடியும்? தலைவரின் முட்டாள்தனத்திற்கு யார் மீதாவது பழி போட்டே ஆக வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்களின் வரிசையில் கேபியும் ஒருவர். இன்று நெடியவனின் மாதாந்தக் கொடுப்பனவுகளுக்காக நோர்வேத் தலைவர் என்கிறார்கள் தொடர்ச்சியான வருமானம் இல்லாமல் இந்த ஜால்ராக் கூட்டத்திற்கு கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஒருநாள் கஜானா காலியாகும். அப்போது அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்போது. உவன் போராட்டத்துக்கு சேர்த்த காசைச் சுத்தி. தான் மடக்கிப் n;பாட்டு. கேபிக்கு காசு கொடுக்காததால் தான் தலைவருக்கு கெலிகொப்டர் கிடைக்கவில்லை என்று பிளேட்டை மாற்றி நெடியவனையும் இவர்கள் துரோகியாக்கினாலும் நாங்கள் ஆச்சரியப்படப் போவதில்லை.
கேபி இன்று ஆயுதப் போராட்டம் தவறு என்பது உண்மையிலேயே மனம் நொந்து. மனம் திரும்பிய ஒருவர் கூறும் உண்மையாகக் கூட இருக்கலாம். பிரபாகரன். பொட்டம்மான் போன்ற அரக்க இயல்பு கொண்டவர்கள் இறுதி நேரத்தில் கூட தங்கள் தவறுகளுக்கு மனம் வருந்தியிருப்பார்கள் என்பது சந்தேகமே மற்றவர்களின் உயிரைக் கொல்வதில் மகிழ்ச்சி காஹம் குருர இயல்பு படைத்த கோழைகளான இவர்கள் எதிரியின் கையில் அகப்பட்டதும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு நடித்திருக்கக் கூடும். தங்கள் உயிர் மீதான ஆசை எந்த வழியிலும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழிகோலும் காலில் விழுந்து கூட உயிர்ப்பிச்சை கேட்டிருக்கக் கூடும்.
ஆனால் எங்களுக்குத் தெரிந்தவரையிலும் கேபி பல்வேறு கொலைகளுக்கு உடந்தையாகவும். சாட்சியாகவும் நியாயப்படுத்துபவராகவும் இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் கொலை செய்ததாகவோ. அதில் இன்பம் காண்பவராகவோ இருந்ததாக அறியப்படவில்லை. போரின் போது ஏற்பட்ட அழிவின் கோரத்தை நேரில் கண்ட அசோகச் சக்கரவர்த்தி மனம் வருந்தி திருந்தியது போல. கேபியும் திருந்தியிருக்கக் கூடும். தவறு செய்த மனிதர்கள் தவறை உணர்ந்து அதற்கு பரிகாரம் தேட முயலும் போது அதற்கான மன்னிப்பை வழங்குவது மானிடத்தின் கடமை.
தன்னுடைய மனைவியின் புத்த மதம் தன்னில் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றிக் குறிப்பிடும் கோத்தபாயாவின் வீட்டு வாசல் புத்தர் சிலையைப் பார்த்து உண்மையிலேயே நிர்வாணம் அடைந்திருக்கக் கூடும். முகாம்களில் அல்லல்படும் போராளிகளின் நிலை கண்டு அழுததாக குறிப்பிடப்படும் போது. போரின் கொடுரத்தை கேபி கண் முன்னால் கண்டதன் பாதிப்பாகவே கருத முடியும்.
புலன் பெயர்ந்தவர்கள் இன்றைக்கும் புலிகளின் கொடுரங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில். கேபி முகாம்களில் உள்ள பல போராளிகள் கடைசி நேரத்தில் கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என்ற உண்மையை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கிறார். இன்றைக்கும் ஈழக்கனவில் இன்னும் ஆயிரக்கணக்கில் பலி கொடுக்க புலன் பெயர்ந்தவர்கள் தயாராகியிருக்கும் நிலையில். ஆயுதப் போராட்டம் தவறு என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறார். எதிர்ப்பு அரசியலால் நாங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறார்
தன்னுடைய விசுவாசம் காரணமாக பிரபாகரனின் முட்டாள்த்தனம் தான் இத்தனை அழிவுக்கு காரணம் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். பேட்டியின் வரிகளுக்கு இடையில் தேடினால். பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரத்தில் ஏற வேண்டிய கேபியின் அவலத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால் தான் கடைசி நேரத்தில் மக்களை வெளியேற விடாமல் மனிதக்கவசமாகப் பயன்படுத்திய புலிகளின் செயலை இன்றும் நியாயப்படுத்த முடிகிறது. மக்களை வெளியேற விட்டிருந்தால் புலிகள் தனித்துப் போய் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். இன்று கவசமாக வைத்திருந்து இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்த பின்னாலும் எந்த புலித்தலைவராலும் உயிர் தப்ப முடிந்ததா
இன்று திறந்த சிறைச்சாலைக் கைதியாக இருக்கும் கேபியால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் கேபியால் சில விடயங்களைச் சாதிக்க முடிந்திருக்கிறது. இதுவரையும் ஈழக்கனவை விற்று அரசியல் நடத்தி. புலன் பெயர்ந்த ரசிகர்களை குசிப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் கவலைப்படாத விடயங்கள் பற்றி கேபி அக்கறை கொண்டிருக்கிறார்.

தங்களை முகாம்களுக்கு அரசு விடவில்லை என்று குற்றம் சாட்டும் கூட்டமைப்பு. தங்கள் உறுப்பினர்கள் யாராவது முகாமுக்கு போய் வந்து முகாம் நிலை நன்றாக இருக்கிறது என்றவுடன் முட்டி மோதுகிறது. அரசு தடுக்க வேண்டும் என்பதற்காக அனுமதி பெறாமல் போக முயற்சித்தது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல். இப்படி எதிர்ப்பு அரசியல் நடத்தி புலன் பெயர்ந்தவர்களை குசிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அரசியல் செய்தவர்கள் இன்று வரைக்கும் அரசைக் குற்றம் சாட்டுவதை தவிர வேறெதையும் செய்ததில்லை. ஆனால் முகாம்களுக்கு நேரில் சென்று உரையாடிய கேபி அவர்கள் வெளியில் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதிகள் இல்லை என்ற சாதாரண விடயத்தை உடனடியாகவே தன் தொடர்பு மூலமாக நிவர்த்தி செய்கிறார் பரீட்சைக்கு தோற்றும் போராளிகளுக்கு வகுப்புகளுக்கும் உபகரணங்களுக்கும் வழி செய்கிறார். இங்கே கொடி தூக்குபவர்களோ. போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட மில்லியன்களை விழுங்கி ஏப்பம் விடும் கூட்டமோ இன்று வரைக்கும் எதையும் செய்ததாக இல்லை கேட்டால். அது அரசாங்கத்தின் கடமை என்று கையை விரிக்கிறது.
போராட்டத்திற்கு எனச் சேர்த்து தனது கையில் இருக்கும் பணத்தை மகிந்த சகோதரர்களின் காலடியில் ஒப்படைத்ததாகத் தான் யுஎன்பியும் புலன் பெயர்ந்த தமிழ்;க்கூட்டமும் குற்றம் சாட்டிய நிலையில் அந்தப் பணத்தை ஒரு தொண்டர் அமைப்பை உருவாக்கி அந்தப் போராளிகளினதும் மக்களதும் புனர்வாழ்வுக்காக கொடுப்பதை. துரோகம் என்ற ஒரே வார்த்தை மூலம் தடுத்து நிறுத்த வேண்டுமா.
ஆனால் இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால். கே.பியின் இன்றைய நடவடிக்கைகளுக்கு பின்னால் நிற்கும் அவரது வெளிநாட்டு ஆதரவாளர்கள் இன்றைக்கும் டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் துரோகி என்று கருதுவது தான் கேபி தற்போது மனம் மாறிச் செய்வதைத் தான் அவர்கள் முன்பே செய்தார்கள். அதைத் துரோகம் என்பதற்கு இன்றைக்கும் இவர்கள் தயங்குவதில்லை புலிகள் அரசின் காலில் விழுந்தால் அதை ராஜதந்திர நகர்வு என்றது போலத் தான் இதுவம்.
தங்களுடைய வங்குரோத்து அரசியலைக் கொண்டு நடத்த புலிகளின் பணத்தையும். பிரபாகரன் என்ற பிம்பத்தையும் நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் செல்லாக்காசு அரசியல்வாதிகளான வைகோவும் நெடுமாறனும். புதிதாய் தோன்றிய அரசியல் கோமாளி சீமானும் நெடியவனின் எலும்புத்துண்டுகளுக்காக கேபியைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரபாகரனின் படத்தைக் காட்டி பிழைப்பு நடத்தும் இந்த பிழைப்பு வாதிகளால் தான் புலிகள் கருவறுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மறைக்க இன்றைக்கும் கண்ணீர் நிறைந்த சோகக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று காது குத்தி இந்த முட்டாள்கூட்டத்தை வடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை நம்பி புலன் பெயர்ந்த கூட்டமும் நம்பி விசிலடிக்கிறது.
அரசுடன் சேர்ந்து எந்த அபிவிருத்தியையும். தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை தரக் கூடிய எதையும் செய்யும் போது. அதை ஆதரிக்கின்ற நன்மையைச் செய்யாவிட்டாலும். அதைச் செய்பவர்களைத் துரோகி என்று பட்டம் டே;டும் தீமையையாவது நிறுத்த வேண்டும்.
கேபி எங்களுக்குத் தலைவரும் இல்லை. கேபியின் செயற்பாட்டை நியாயப்படுத்துவதை மகிந்தவுக்கான அங்கீகாரமாக யாரும் திரிக்கவும் தேவையில்லை
கேபி துரோகியா யதார்த்தவாதியா என்ற கேள்விக்கு விடை தான் என்ன?
துரோகி என்பதற்கு சமுக நீதியின்படியிலான வரையறைகள் இல்லை. தன்னுடைய கருத்தோடு முரண்டுபடும் எவரையும் எவரும் துரோகி என்று குற்றம் சாட்டலாம் கொலைகாரக் கும்பல் கூட. மனம் திரும்பியவனைத் துரோகி என்று தான் கூறுகிறது தியாகம். துரோகம். மாவீரன் துரோகி என்ற சகதி அரசியலுக்குள் அமிழ்ந்திக் கிடந்ததால் தான் தமிழினம் இன்று நாறிப் போய் கிடக்கிறது
இளம்பரிதி போன்று. இந்த புலன் பெயர் கூட்டம் பூசித்து தொழுத புனிதப் போராளிகளே பதுங்கிய புலிகளைக் காட்டிக் கொடுத்து செய்து வரும் துரோகத்தை விட கேபியின் துரோகம் பெரிதில்லை
போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை சுத்தி தலை மறைவாகியுள்ள கூட்டமும். தொடர்ந்தும் சுத்த இன்றும் ஈழக்கனவை விற்கும் கூட்டமும் செய்யும் துரோகத்தை விட கேபியின் துரோகம் பாரதூரமானதில்லை
தீர்வுகளை உதறித் தள்ளி. அரசியல் சிந்தனையுள்ளவர்களை ஒழித்துக் கட்டி. தமிழ் அரசியலுக்கு நலம் எடுத்து. அடுத்த இரண்டு தலைமுறைக்கு தலை எடுக்க முடியாதபடி பிரபாகரன் செய்த துரோகத்தை விட கேபி ஒன்றும் பெரிதாக துரோகம் செய்யவில்லை
புலன் பெயர்ந்தவர்கள் துரோகி என்பதைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை போராட்டத்திற்கு கொடுத்த பணத்தை ஏப்பம் விடுபவர்களை தலைவர்கள் என்று ஜால்ராப் போடுபவர்களுக்கு. கேபியைத் துரோகி என்று சொல்லத் தகுதியில்லை
கேபி பலம் வாய்ந்த உளவு அமைப்பின் பிடிக்குள் இருந்து புலிகள் என்ற அமைப்பு அழிக்கப்படுவதற்கு துணை நின்றார் என்ற துரோகக் குற்றச்சாட்டு பற்றிய பிரச்சனை கேபிக்கும் புலி ஆதரவாளர்களுக்குமானது நாங்கள் அது குறித்து அக்கறை கொள்ளத் தேவையில்லை.
புலிகள் என்ற அரக்கர் கூட்டம் கூண்டோடு கைலாயம் போன பின்னாலும் அதன் பின்னால் வால் பிடித்த கூட்டம் ஒரு துளி கண்ணீர் கூட விடாத நிலையில். அந்தக் கூட்டம் அழிந்து போவதற்கு யார் துணை நின்றால் தான் என்ன? மகிந்த இந்தியாவின் துணையைப் பெற்றால் என்ன உளவு நிறுவனம் கேபியின் உதவியைப் பெற்றால் தான் என்ன? புலிகள் இன்று இருந்திருந்தாலும் எதையும் சாதிக்கப் போவதில்லை.  இருந்தாலும் ஒன்று தான் அழிந்தாலும் ஒன்று தான்
யதார்த்தவாதியா என்றாலும் கேபி இன்று கூறும் தன் மனமாற்றம் எவ்வளவு தூரம் உளச்சுத்தியானது என்பதைப் பொறுத்தது யேசு உயிர்த்து விட்டார் என்பதை நம்பாத தோமாஸ்கள் n;பாலத் தான் நாங்களும் கேபி உண்மையாக மனமாற்றம் அடைந்த யதார்த்தவாதி என்பதை. அவரைத் தனியாக வெளிநாடு போக அனுமதித்து. என்ரை வாலைப் பிடி பாப்பம் என்று வறுகி. வெளிநாடுகளில் தஞ்சம் கோராமல். தன் கருத்துக்களை நிறைவேற்றுவதற்காக. சுயமாகவே திரும்பி வருவாராக இருந்தால் நம்பலாம்
குர்திஸ் மக்களின் தலைவனாக. கிரேக்க தேசத்தில் வாழ்ந்து போராட்டம் நடத்திய ஓஜாலான். துருக்கி கிரேக்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்தியதும் அங்கே தஞ்சம் இருக்கப் பயந்து கென்யாவுக்குப் போன போது. விமானத்தில் வைத்து துருக்கியர்களால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். விசாரணையில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை கிடைக்கலாம் என்ற நிலையில். துருக்கிய அரசியலமைப்பின் கீழ் பேச்சுவார்த்தையுடனான தீர்வுக்கு சம்மதம் என்று தெரிவித்தும். தற்போது ஆயுட்தண்டனையில் சிறையில் இருக்கிறார். ஓஜாலான் சுருக்குக் கயிறு தன் கழுத்துக்கு வந்து. தன் உயிருக்கு ஆபத்து என்று வந்தவுடன் பேசித் தீர்க்கலாம் என்றது போல கேபியும் செய்கிறார். பிரபாகரன் செய்ததும் அதுதான் தன் உயிருக்கு பாதுகாப்பு இருக்கும் வரையில் கரும்புலிகளை அனுப்பி அழிவு பண்ணி. மாவீரர் பட்டம் கொடுத்தவர் தன் உயிர் என்றதும் கொடி தூக்கவில்லையா?
இவர்கள் எல்லாம் சிறையில் அடைத்தாலும் இலட்சியத்தை விட்டு விலகாத மகாத்மாவோ மண்டேலாவோ அல்ல தூக்கில் தொங்கி சித்திரவதை செய்யப்பட்ட போதும் சுதந்திரம் வேண்டிக் குரல் கொடுத்த ஸ்கொட்லாந்தின் வீர இதயம் படைத்த வில்லியம் வலஸ{ம் அல்ல
கேபியின் மனமாற்றம் உளச்சுத்தியானதா வெறும் நடிப்பா என்று ஆராய்வதை விட்டு. மாயைகளால் உருவாக்கப்பட்ட இந்த மாவீர மாயாவிகள் எல்லாம் உயிருக்குப் பயந்த வெறும் மனிதர்களே என்று. நாங்கள் தான் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் யதார்த்தவாதிகளாய் இருக்க வேண்டும்.
தற்போது வெறுமனே கோத்தபாயா. மகிந்த போன்ற தனிநபர்கள் சிலரைச் சுற்றித் தான் கேபியின் நம்பிக்கை தான் வாழ்க்கை இருக்கிறது மாறும் அரசியல் நிலைகளில் இது ஆபத்தானது எனினும் மகிந்த தனது நிலையை அரசியலமைப்பு மாற்றங்களால் ஸ்திரப்படுத்திய நிலையில் கொஞ்ச நாளைக்கு கேபியின் காட்டில் மழை பெய்யும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாததை கேபியால் இன்று செய்ய முடிகிறது. அதிலும் தான் நம்பிய கொள்கையில் செயற்படுவதற்கு சில புலன் பெயர்ந்த முக்கிய புள்ளிகளை தன் வழிக்கு வரச் செய்து. பயன்படுத்த முடிகிறது. தன் துரோகப்பட்டத்தையும் மீறி. இன்றும் புலி ஆதரவாளர்கள் மறைக்க முயலும் உண்மைகளை பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. போராட்டத்திற்காக தங்களைத் தியாகம் செய்தவர்களும் கடைசி நேரத்தில் பலி கொடுக்க இழுத்துச் செல்லப்பட்டவர்களும் இன்று தங்கள் வாழ்வையே அதற்கான விலையாகச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஈழக்கனவோடு கனவுலகில் வாழ்பவர்களும் கனவு வியாபாரிகளும் இவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல். அரசைக் குற்றம் சாட்டுவதற்காக முதலைக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அத்துடன் கேபி இதுவரைக்கும் அரசியல் தீர்வு என்பது பற்றி வாயே திறக்கவில்லை. தேவைப்பட்டால் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு உசுப்பேத்த வாய் வீச்சுக் காட்டியிருக்கலாம் தன்னுடைய நிலையை நன்றாக உணர்ந்ததால் அரசியல் தீர்வு பற்றிய கதை இல்லாமல். போராளிகள். இடம் பெயர்ந்தோர் நலன் பற்றி பேசுகிறார்.
கேபி துரோகியும் இல்லை யதார்த்தவாதியும் இல்லாமல் இருக்கலாம்.
அவர் ஒரு ழே;நிலையின் கைதி அந்தக் கைதியிடம் அதிகமாய் எதிர்பார்க்காமல். தன் ழே;நிலைக்கேற்ப. தமிழ் மக்களுக்குச் செய்ய முடிந்ததை செய்வதையாவது பாராட்டுவோம்
இல்லை. கேபி துரோகி தான் என்று வரிந்து கட்டிக் கொண்டு சூளுரைப்பவர்கள் நெடியவன் கூட்டம் தமிழ் ஈழத்தைப் பெறவும் முகாம்களில் அடைபட்டிருக்கும் போராளிகள் விடுதலை பெறவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதையும். இதுவரைக்கும் இந்த போராளிகளுக்கும் இடம் பெயர்ந்தோருக்கும் என்ன செய்தது என்பதையும். நெடியவன் தலைமையிலான வணங்காமண் கப்பல் எப்போது புறப்படும். அதில் தங்களது பிள்ளைகளை வேல் கொண்டு அனுப்ப எத்தனை புலநானூற்று பெற்றோர் தயார். கட்டாக்காலி முரட்டுக்காளைகளாய் திமிறித் திரியும் இளையோர் எத்தனை பேர் களம் செல்லத் தயார் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தால். அவர்கள் போகிற வழிக்குப் புண்ணியம் கிடைக்க. நாங்களும் அவர்களுக்கு ஏதோ நம்மாலானது எதையாவது செய்யலாம்?

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

சுட்டது தேனியில்

 கேபி துரோகியா யதார்த்தவாதியா  
(பகுதி-2)
-மேதகு பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் (தாயகம்)
KumaranPathmanathanஇதில் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால். தங்கள் மீது விமர்சனம் வைக்கும் எவரையும் வெளிநாட்டு உளவுநிறுவனங்களின் கைக்கூலிகள் என்று துரோகி பட்டம் சூட்ட தயங்காத புலி ஆதரவாளர்கள். கேபி சர்வதேச உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்பட்டதை பெருமையாகக் கருதிக் கொண்டது தான் ஏகாதிபத்திய எதிர்ப்பையே தங்களின் அரசியல் மூச்சாகக் கொண்ட இடதுசாரிகளும் புலிகளுடன் ஒட்டிக்கொண்ட போது. இது பற்றி வாயே திறக்கவில்லை இந்த உளவு நிறுவனம் எது என்று சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.
இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் சில ஊகங்களுக்கு நாங்கள் வர முடியும். செப்டம்பர் 11 தாக்குதலின் பின் பயங்கரவாதம் பற்றிய அமெரிக்கக் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமான புலிகள் பற்றிய சர்வதேசக் கருத்தும் கதிர்காமர் கொலையின் பின்னால் முற்றாகவே மாறி விட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க புலிகளைக் கருவியாகப் பயன்படுத்த அமெரிக்கா முனைந்தாலும். பிந்திய சூழலில் புலிகள் கட்டுக்கடங்காத அடங்காப்பிடாரியாக மாறிய நிலையில். இந்தியா சோவியத் அணியின் சார்பு நாடு என்பதை விட அமெரிக்க முதலீட்டுக்கான சந்தை என்ற நிலை தோன்ற. புலிகள் என்ற அமைப்பு இந்தப் பிராந்தியத்தில் இருப்பதற்கான தேவை இல்லாமல் போய் விட்டது. எனவே புலிகளை பூண்டோடு அழிப்பதற்கான முயற்சியில் கே.பியைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முயன்றிருக்கக் கூடும். கே.பி கைது என்ற செய்தியின் பின்னால் நீண்ட காலம் கே.பி பற்றிய தகவல்கள் வெளியில் வரவே இல்லை.
காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக. கே.பி கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்ததன் பின்னால் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொன்றாக புலிகளின் ஆயுதக்கப்பல்கள் கடலில் வைத்து அழிக்கப்பட்டன. கேபி இயக்கத்திலிருந்து தொடர்புகள் அற்ற டிசம்பர் 2002 இலிருந்து 2006 வரையுமான காலப் பகுதியில் சமாதான முயற்சிகளுக்குள்ளும் புலிகள் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டிருந்தது பரகசியம். அப்போது ஒப்பந்தத்தை மீறி புலிகள் ஆயுதம் கொண்டு வரும் விபரங்கள் அரசுக்கு தெரிந்திருந்தால். அதை அரசு அழிக்கத் தயங்கியிருக்காது. ஆனால் இந்த இடைவெளியில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் பெரிதாக மூழ்கடிக்கப்படவில்லை. 

கே.பி கைது செய்யப்பட்ட ஆண்டான 2007க்குப் பின்னர். ஒரு பனடோல் கூட வரவில்லை என்று சூசை கூறியதாக தற்போது கே.பி குறிப்பிடுகிறார. இலங்கைக் கடற்பிராந்தியத்திற்குள் நுழையும் வரை காத்திருக்காமல் நடுவழியில் வைத்தே இலங்கைக் கடற்படை புலிகளின் கப்பல்களைத் தகர்க்கும் அளவுக்கு புலனாய்வுத் தகவல்கள் இந்தியா செய்மதி உளவு மூலம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் கிடைத்தன என்றே ஆய்வாளர்கள் பலரும் ஆய்ந்தார்கள். இதில் இந்தியாவின் உதவி கணிசமானது எனினும் உளவுத்தகவல்கள் என்பன ஏதோ வானத்திலிருந்து பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் விடயங்கள் இல்லை. புலிகள் அகதிகளை ஏற்றி வரும் கப்பல் கனடா நோக்கி வருகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்தி வெளிவந்தது போல. சம்பந்தப்பட்டவர்கள் மூலமாகத் தான் தகவல்கள் கசிகின்றன.
உளவு நிறுவனத்தின் பாதுகாப்பு பெற்ற கேபி தன்னை புறந்தள்ளிய கோபத்தினாலோ. அல்லது தன்னை பாதுகாத்த நிறுவனத்தின் அழுத்தம் காரணமாயோ. வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கப்பல்களின் நடமாட்டத்தை இலங்கைக் கடற்படை அறிந்திருக்கவும் சாத்தியங்கள் உண்டு தான் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் இது பற்றிய தொடர்புகள் விடுபட்டுப் போனதாகவும். இயக்க அமைப்பின் பிரகாரம் தெரிய வேண்டியவர்களுக்கு மட்டுமே விபரங்கள் வெளியிடப்படுவதால் தனக்கு இந்த ஆயுதக் கப்பல் வினியோகம் பற்றி தெரிந்திருக்க முடியாது என்று கேபி வாதிடுகிறார் அத்துடன் இது குறித்து தான் விசாரிக்க நேர்ந்தால் பின்னர் ஏதாவது நடந்தால் தன்னில் சந்தேகம் ஏற்படும் என்பதால் தானும் அக்கறைப்படவில்லை என்று கேபி மேலும் கூறுகிறார்.
ஆனால். உளவுநிறுவனங்களைப் பொறுத்தவரை அந்த தகவல்களை கேபியிடம் தான் கேட்டுப் பெற வேண்டும் என்பதில்லை. தன்னுடைய செயற்பாடுகளை யாரிடம் ஒப்படைத்தார். தற்போது அந்தச் செயற்பாடுகளில் யார் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களை மட்டும் தெரிவித்தாலே போதும் தொலைபேசி. செய்மதி தொடர்புகளை வைத்து இந்த நபர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஊசிமுனையால் குத்தி எடுக்கும் அளவுக்கான தொழில்நுட்பங்கள் அந்த அமைப்புகளிடம் உண்டு
கேபியின் விசுவாசிகளும் தங்கள் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில். என்ன நடந்தாலும் தலைவருக்கு விசுவாசமாக இருப்போம் என்று விரதம் பிடித்தும் இருக்கப் போவதில்லை அவர்களும் கறுவிக் கொண்டு பழி வாங்குவதற்கான சந்தர்ப்பங்களுக்காக காத்திருந்திருக்கக் கூடும் அதிலும் தங்களின் பதவிகளை அபகரித்தவர்களுக்கு ஆயுதங்களை வன்னிக்கு கொண்டு சென்ற பெருமை சேரக்கூடாது என்பதில் இவர்களுக்கு அக்கறை இருந்திருக்கும் அவர்களின் உதவியை கேபி பெறுவதில் எந்தச் சிரமமும் இருந்திருக்க முடியாது இந்தக் கூட்டத்தினரைத் தான். டிபிஎஸ். கேபிக்கு நெருங்கிய வட்டாரங்கள் என்று வர்ணிக்கிறார். இவர்களுக்கு இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேபியுடன் தொடர்புகள் இருந்திருக்கின்றன
டிபிஎஸ் எழுதிய செய்தியை கேபி உறுதியாக மறுக்கும் வரைக்கும் எங்கள் ஊகங்கள் நியாயமானவையே.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இப்படி புலிகளுக்கான ஆயுத வினியோகக் கழுத்தை இறுக்கி மூச்சுத்திணற வைத்தது புலிகளி;ன் அழிவுக்கு ஒரு காரணம்
நாடகத்தில் மீண்டும் கேபி
இதன் பின்னால் தான் திடீரென்று கேபி மீண்டும் நாடகத்தின் பங்கேற்கிறார் தலைவரால் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்படுகிறார் இதில் மீண்டும் சில விடயங்களை நாங்கள் கருத்துக்கெடுக்க வேண்டியுள்ளது இயக்கத்திலிருந்து விலக்கியவர்களை பிரபாகரன் மீண்டும் சேர்த்தது கிடையாது இராணுவம் கைது செய்து பின்னால் விடுவிக்கப்பட்டவர்களைக் கூட. இலங்கைப் புலனாய்வுத் துறை தன்னைக் கொல்வதற்கு அனுப்பியிருக்கலாம் என்ற பயத்தில் தனக்கு கிட்ட அண்டுவதில்லை. கைது செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் விடுவிக்கப்பட்ட அருணாவுக்கு தலைவர் மீண்டும் இயக்கத்தில் முக்கிய பதவிகள் வழங்கவில்லை என்பதும் அதனால் விரக்தியடைந்து மனநோய் வாய்ப்பட்ட அருணா. கிட்டு மீது மாத்தயா குழுவினர் நடத்திய தாக்குதலின் பின்னால். கந்தன் கருணைப் படுகொலை செய்ததும் நினைவூட்டப்பட வேண்டியது.
வன்னிக்கு வருமாறு அழைத்தும் தன் பாதுகாப்பு காரணமாக தான் பயணங்களைத் தவிர்த்ததாகவும். பின்னர் தன்னை பிரபாகரன் உனது சேவை எனக்குத் தேவை இல்லை என்றே ஓய்வூதியம் இல்லாத கட்டாய ஓய்வில் அனுப்பியதாக தற்போது கேபி குறிப்பிடுகிறார். இந்தப் பின்னணியும் சந்தேகத்தை வருவிக்கிறது. தமிழ்;ச்செல்வன் போன்றோரின் தகடு கொடுப்பு காரணமாக பிரபாகரன் கேபியின் கற்பில் சந்தேகம் கொள்கிறார். அதன் அடிப்படையில் வன்னிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் கருணாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது விசாரணை என்ற பெயரில் பொட்டம்மானின் சித்திரவதையில் எவ்வாறு உண்மை வரவழைக்கப்படும் என்பதற்கு மாத்தயாவின் விசாரணை முன் உதாரணமாக இருந்த நிலையில் கருணா அதைக் காய் வெட்டி தன்னைப் பலப்படுத்திக் கொண்டார் இது போலவே தன்னையும் வன்னியில் விசாரணை என்ற பெயரில் அழைத்து என்ன நடக்கும் என்பது கேபிக்கு தெரியாமல் இருந்திருக்காது இதனால் தான் இவர் வன்னி செல்வதை தவிர்த்திருக்க வேண்டும். பிரபாகரனின் மனதில் சந்தேக விதை விழுந்து முளை விட்டால். கற்பை நிருபிக்க எந்த தீக்குளிப்பும் பயன்படாது என்பது தெரிந்ததாலேயே கேபி வன்னி விஜயத்தை தவிர்த்திருக்கக் கூடும்.
தன்னை மீண்டும் இயக்கத்தில் சேர்த்தது பற்றி கேபி கூட ஆச்சரியம் தெரிவிக்கும் அளவுக்கு பிரபாகரனின் கடந்த கால நடவடிக்கைகள் இருக்கின்றன அதிலும் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வெளிவந்த கேபியை மற்ற சக்திகள் தனக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற பயம் பிரபாகரனுக்கு இருந்திருக்க வேண்டும் அதிலும் கிளிநொச்சியும் விழுவதற்கு சமீபமாகத் தான் கேபியை மீண்டும் சேர்க்கும் அளவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் ஒன்று கையறு நிலையில் மூச்சுத் திணறி எந்த துரும்பையும் பிடிக்கும் நிலைக்கு வந்த பின்னர். ஆபந்பாந்தவனாக கேபி தெரிந்து. தங்களை காவாந்து பண்ணக்கூடியது கேபி மட்டும் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். தங்கள் உயிரைக் காப்பாற்ற யாருடைய காலையும் பிடிக்கத் தயங்காத புலிகளின் பாரம்பரியம் அது அல்லது கேபியை மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற அந்த ஆலோசனையை தனது மற்றக் கையாட்கள் மூலமாக ஷஅந்த உளவு நிறுவனமே வழங்கியிருக்கக் கூடும் என்பதை நாங்கள் ஏன் நம்பக்கூடாது?
அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர். ஐரோப்பிய சமூகம் முதல் ஐநா வரைக்கும். எரிக் சொல்கெயம் முதல் ஹிலறி கிளின்டன் வரைக்கும். இண்டர்போலினால் தேடப்பட்டுக் கொண்டிருந்;த கேபியுடன் தொடர்பு கொள்வதில் எந்த தயக்கமோ. இரகசியமோ காட்டவில்லை. முன்னையைப் போல வன்னிக்கு இராணுவ கெலிகொப்டரில் போய் சொல்கெய்ம் போன்றவர்கள் புலிகளுடன் தொடர்பு கொண்ட நிலை தடுக்கப்பட்ட நிலையில். பாலசிங்கமும் இல்லாத நிலையில் வெளிநாட்டில் புலிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய அளவுக்கு தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்று யாரும் இல்லாததால். இறுதி நேரத் தொடர்புகளுக்கு கேபியைப் பயன்படுத்துவதற்காக பிரபாகரனுக்கு ஆலோசனை அல்லது அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கலாம்.
புலிகள் ஆயுதங்களை பூட்டு வைத்துப் பூட்டி யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்தால் முக்கிய புலிகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற அமெரிக்கா தயாராக இருந்ததாக தற்போது கேபி தெரிவிக்கிறார். இது பற்றிய விபரங்கள் அடங்கிய 16 பக்க ஆவணத்திற்கு பதிலாக பிரபாகரன் இதை ஏற்க முடியாது என்று பதிலளித்ததால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை என்கிறார். ஹிலறி கிளின்டன் வரைக்கும் புலிகளுக்கும். முக்கியமாக கேபிக்கும் தொடர்பு இருந்தது என்பது இறுதியில் வெளிவந்த விடயம் கேபியின் இந்த புரிந்துணர்வு எந்த அடிப்படையிலானது என்பதை கேபி கைது விவகாரத்தை வைத்தே ஊகிக்க முடியும். அடிக்கடி எங்களுக்கு பூச்சாண்டி காட்டுகிற அமெரிக்காவின் காலைப் பிடித்தாவது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள இந்தக் கொள்கைச் செம்மல்கள் முன்வந்தது இவர்களின் கொள்கைப்பிடிப்பையும் உயிர் மீதான ஆசையையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.
நேபாளத்தில் நோர்வே முயற்சியில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ஐநா மத்தியஸ்தத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைப் பூட்டி வைத்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்த விவகாரத்தை பிரபாகரனுக்கு யாராவது மதியுரைத்து. பிரபாகரன் அதற்கு சம்மதித்திருந்தால். சில நேரம் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்க முடியும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல். மக்கள் ஆதரவு என்ற சக்தியின் மீதும் நம்பிக்கை இல்லாமல். ஆயுதத்தில் மட்;டும் நம்பிக்கை வைத்திருந்ததால். ஆயுதம் இல்லாமல் பிரபாகரனுக்கு ஆளுமை இல்லாத காரணத்தினால். இதை ஏற்க முடியாது என்று மூன்று வார்த்தைகளில் தன் மரணசாசனத்தை எழுதிக் கொண்டார்.
ஆயுதத்தை பூட்டி வைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மார் தட்டினாலும். அமெரிக்கா வரும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு கடைசி வரைக்கும் இருந்தது என்பது உண்மை. இறுதியாக மீட்கப்பட்ட மக்கள். தங்களிடம் புலிகள் அமெரிக்க கப்பல் வந்து எல்லாரையும் ஏத்திக் கொண்டு போகும் என்று கூறியதாகத் தெரிவி;க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பில் மண் விழுந்த பின்னால் தான் இவர்கள் வெள்ளைக் கொடி தூக்க முடிவு செய்திருக்க வேண்டும்.
இதில் சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே அமெரிக்கா பிரபாகரனையும் மற்றவர்களையும் காப்பாற்ற தன் கடற்படைக் கப்பல்களை அனுப்பியிருக்குமா? முதலாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இவ்வாறான நடவடிக்கைக்கு இந்தியாவின் சம்மதம் தேவைப்படும். இந்திய கடல் எல்லைக்கும் அப்பால் சர்வதேசக் கடற்பிராந்தியத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும். இந்தியாவின் பிரதமரைக் கொன்றதற்காக தேடப்படும் ஒருவரை அமெரிக்கா தன் ராஜதந்திர உறவுகளையும் வர்த்தக நலன்களையும் பணயம் வைத்து காப்பாற்ற முன்வருமா? இல்லை. இந்தியா கண்டும் காணாமல் விட்டு விட்டால் இந்திய ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சும்மா இருக்குமா? இதையும் மீறி. அமெரிக்கா தன் நாட்டில் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்து அதற்கு நிதி உதவி செய்தவர்கள். ஆயுதம் வாங்க உதவியவர்கள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையில். அந்த அமைப்பின் தலைவர்களுக்கு உயிர் காக்க உதவுமா? அவ்வாறு உதவினால். எந்த முகத்துடன் பின்லாடனை பயங்கரவாதி என்று தேடிக் கொல்லப் போவதாக மார் தட்ட முடியும்?
இந்த சர்வதேச அரசியலின் நியதிகளும் விதிமுறைகளும் யதார்த்தங்களும் விளங்காத புலன் பெயர்ந்த கூட்டமும் அதற்கு தீனி போடும் ஆய்வாளர்களும். தொடர்ந்தும் நீண்டு கொண்டே செல்லும் துரோகிகள் பட்டியலில் கே.பி. பான் கி முன். சொல்கெய்ம். நோர்வே. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு வரிசையில். அமெரிக்கா துரோகம் இழைத்து விட்டது என்று அமெரிக்காவையும் துரோகியாக்கி விட்டு. அடுத்த துரோகிக்கான தேடலில் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்
அமெரிக்கா வழங்கியதாக கூறப்படும் உறுதிமொழி மக்கள் அழிவு ஏற்படாத வகையில் புலிகளை யுத்த நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கான வெறும் வாக்குறுதிகளாக இருக்க முடியுமே தவிர. புலிகளைக் காப்பாற்றுவதற்கு அல்ல. புலிகளின் தலைமையை அழிப்பதற்கான முடிவு எங்கோ எப்போதோ எடுக்கப்பட்டு விட்டதையே காட்டுகிறது அதிலும் இறுதி வரைக்கும் காட்டுக்கு தப்பியோடாமல். கரையோரமாய் காத்திருந்து. முற்றுகைக்குள்ளாகிய பின்னால் மட்டுமே தப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்படியாயின். கேபி கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிரபாகரன் காத்திருந்திருக்க முடியும். தப்பியோடாமல் வளைத்துப் பிடிப்பதற்காகக் கூட இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்
ஆனால். சமீபத்தில் நாடு கடந்த அரசின் தற்போதைய தலைவரான நியூ யோர்க் சட்டத்தரணி தான் அமெரிக்க கப்பல் வரும் என்று பிரபாகரனுக்கு நம்பிக்கை ஊட்டவில்லை என்று மறுத்திருந்தார். நெடியவன் சார்பு இணையத்தளம் ஒன்று விடுத்த குற்றச்சாட்டுகள் குறித்த பதிலிலேயே அவ்வாறு தெரிவித்திருந்தார். தற்போது கேபி சொல்வதைப் பார்க்கும் போது. நியூ யோர்க்கில் செனட்டராக இருந்து ஒபாமா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் ஹிலறி கிளின்டனுடன் இவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதே தெளிவாகிறது.
மற்றும்படி. புலிகளைக் காப்பாற்றுவதற்கு. அமெரிக்காவுக்கு புலிகள் மாமனா மச்சானா மானங்காக்க
இந்த வெளிநாட்டு அமைப்பின் திட்டங்களின் அடிப்படையில். நாடு கடந்த ஈழமுயற்சியும். பிரபாகரனுக்குப் பின்னான அரசியலில் புலன் பெயர்ந்த கூட்டத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அணை போட்டு. அதற்கு கடிவாளம் போட்டு தேவைக்குப் பயன்படுத்துவதற்காக. அந்த உளவு நிறுவனத்தின் ஆசீர்வாதத்துடன். வெள்ளைப்புலிகளின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடும்
சில சந்தேகங்கள்
2003 உடன் தான் கட்டாய ஓய்வு பெற்றதாகக் கூறும் கேபி 2007 ல் கைது செய்யப்பட்டதாக செய்தி வருகிறது தற்போது தான் கைது செய்யப்படவில்லை. தன்னை கைது செய்வதற்காக வீட்டை சுற்றி வளைத்தபோது தான் அங்கிருக்கவில்லை என்று கேபி கூறுகிறார். தாய்லாந்தில் அரசியல். இராணுவ உயர்மட்டங்களுடன் தொடர்பு வைத்திருந்த கே.பி இயக்கத்துடன் தொடர்புகள் இல்லாதவர் என்று இந்த உளவு நிறுவனங்களுக்கு தெரியவில்லையா அல்லது கைது செய்து பின்னர் விடுவித்து தங்கள் திட்டப்படி செயற்பட வைக்க முற்பட்டனவா
இதில் சில ஊகங்களை முன்வைக்க முடிகிறது. கொழும்பில் கேபியை வந்து சந்தித்ததாகக் கூறப்படும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் 2006ல் இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்படுகிறார். கே.பி 2007ல் எரித்திரியாவிலிருந்து வரும்போது விமானநிலையத்தில் கைது செய்யப்படுகிறார். தக்சினுடன் வர்த்தக் தொடர்புகளைக் கொண்டிருந்து விருந்தினருக்கான சலுகைகளும் பாதுகாப்பும் கொண்டிருந்த கேபி. தக்சினின் பதவிநீக்கத்துடன் வெளியேறி எரித்திரியாவில் பாதுகாப்பு பெற்று இருந்திருக்கக் கூடும்.  கேபிக்கு பின்னான புலிகள் தாய்லாந்தின் தற்போதைய மேலிடத்துடன் நெருக்கமாகியதாலோ. தக்சினுடனான தொடர்பு காரணமாக தற்போதைய அரசு அதிருப்தி கொண்டதாலோ. கேபிக்கான பாதுகாப்பும் அந்தஸ்தும் நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கலாம்.
அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் உள்ள எரித்திரியாவின் இசையாஸ் அபேவர்க்கியுடன் கேபிக்கு இருந்த தொடர்புகளையும் அறிந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த அந்த பலம் வாய்ந்த உளவுநிறுவனம் முற்பட்டு கேபியை வலைக்குள் சிக்க வைத்திருக்கலாம்.
தான் மற்ற தமிழர்கள் தன்னை வந்து சந்திக்கக் கூடியதாக கோலாலம்பூரைத் தெரிவு செய்து அங்கு ஜாகை அமைத்ததாக கேபி கூறினாலும். மலேசியா போன்று இஸ்லாமிய சம்பிரதாயக் கெடுபிடிகள் இல்லாமல் உல்லாசப் பயணிகளின் வருகையில் தங்கியிருந்து. பிரச்சனையின்றி விசா வழங்கும் தாய்லாந்தை தவிர்த்ததற்கான காரணம் அதுவாக இருக்காது கைது நாடகத்தின் பின்னால். தாய்லாந்தில் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற அச்சத்திலேயே கேபி கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்திருக்க முடியும்
இந்த ஊகங்களுக்கும் சந்;தேகங்களுக்கும். மர்மங்களுக்குமான பதில் கேபியிடம் மட்டுமே இருந்தாலும். கேபி உண்மையைச் சொன்னால் கூட நம்ப முடியாதபடிக்கு கேபியின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய் விட்டது
இந்த முன்கதைச் சுருக்கத்துடன் நடந்து முடிந்த நாடகத்திற்கு வருவோம்
நடந்து முடிந்த நாடகம்
நடேசனின் மகன். சகோதரனுடன் பேசிக்கொண்டிருந்த கேபிக்கு கனடிய வானலை நாயகன் தொலைபேசியில் அழைக்க வெளியில் வரும் கேபி காணாமல் போகிறார். கிட்டத்தட்ட கேபியின் தொலைபேசி இலக்கம் இப்போது பலரின் கையில்? இவ்வாறு பகிரங்கமான தொடர்புகளுடன் இருக்கும் ஒருவர் பற்றி வேண்டியவர்களுக்கு தகவல் தர நினைப்பவர்களுக்கு என்ன கஸ்;டம்?
கேபி இலங்கை அரசினால் மலேசிய அரசின் உதவியுடன் நாடு கடத்தப்பட்ட விடயம் வெளியில் வருகிறது
இங்கே தான் எங்கள் புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டத்தின் மணியான மூளை வெளிப்படுகிறது. தங்களுடைய கனவான நாடு கடந்த ஈழத்தின் தலைவர் நாடு கடத்தப்படுகிறார். உடனே இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். உடனடியாகவே தெருவில் இறங்கி. இவர் ஒரு மனச்சாட்சியின் கைதி என்று இவரை ஒரு மண்டேலா ஆக ஆக்கியிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவரை மையமாக வைத்து. தங்கள் ஈழக்கனவுக்கு அங்கீகாரம் தேடியிருக்க முடியும். ஆனானப்பட்ட பாலகுமார். பேபி சுப்பிரமணியம். புதுவை என்று தாங்கள் இதுவரை தூக்கிப் பிடித்தவர்கள் கைது விவகாரம் பற்றியே வாய் திறக்காதவர்கள். வழமை போல கேபியையும் கைவிட்டார்கள். நெடியவன் கூட்டம் கேபி துரோகி என்று பரப்பிய கதையும் இவர்களுக்கு வசதியாகி விட. கேபி இப்போது அரசியல் அனாதையாகிறார்
இந்தச் சூழ்நிலையில் கேபி என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள? தலைவரே அடையாள அட்டையையும் குப்பியையும் கையளித்த நிலையில் கேபி குப்பி கடிச்சு கரும்புலியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? பொபி சாண்ட்ஸ் மாதிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா இல்லை தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று கட்டப்பொம்மன் சினிமா வசனம் பேச வேண்டுமா இல்லை. வாய்க்குள் துப்பாக்கி வைத்த வாஞ்சிநாதன் போல தற்கொலை செய்ய வேண்டுமா தனக்கு ஆதரவு தர வேண்டியவர்களே கை விட்ட பின்னால். சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் பார்க்க. சண்டைக்காரனின் காலில் விழுவது தான் கேபிக்கு இருந்த ஒரே தெரிவு. இவர்கள் கூச்சல் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் முரண்டு பிடிக்கலாம் புலன் பெயர்ந்த கூட்டத்தை குசிப்படுத்த உணர்ச்சி அரசியல் நடத்தி வேசங்கள். கோசங்கள் போடலாம் புலன் பெயர்ந்த புலிக்கூட்டமும் கேபிக்கு அஞ்சலி செலுத்தி. வருடா வருடம் பணம் சேர்க்கலாம் ஆனால் அதற்கு கேபி செலுத்தப் போகும் விலை என்ன?
இந்த நிலையில் யார் இருந்தாலும் செய்யக் கூடிய ஒரு முடிவைத் தான் கேபி எடுத்தார். புத்தருக்கு போதி மரத்தின் கீழ் நிர்வாணம் கிடைத்தது போல. கே.பிக்கும் கோத்தபாயா வீட்டு வாசல் புத்தர் சிலையடியில் ஞானம் பிறக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அது தவறு. அது மக்களுக்கு அழிவையே கொண்டு வந்து சேர்த்தது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்துத் தான் காரியங்களைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கே.பியின் சிந்தனைப் போக்கு மாறுகிறது.
இருந்தாலும் கேபியின் ஆளுமையையும் வசீகரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை புலிகளை அழிப்பதன் மூலம் தான் இலங்கையில் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று நம்பி அதைச் சாதித்த கோத்தபாயாவுக்கு நம்பத்தகுந்த ஒருவராக மாறுவது என்பது சாதாரண விடயமும் இல்லை. இப்படி எதிராளியை தன் புத்திசாதுர்யத்தால் வசப்படுத்தி. தன் பக்கம் இழுக்கும் திறமை வாய்ந்த ஒருவரை. பிரபாகரன் தனக்குப் புத்தி இருந்திருந்தால். பேச்சுவார்த்தைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழ்ச்செல்வனை ஆயுதக் கொள்வனவுக்கும் கேபியை பேச்சுவார்த்தைக்கும் அனுப்பியிருந்தால் சில நேரம் தமிழர்களுக்கு சமஷ்டி கிடைத்திருக்கக் கூடும். தமிழ்ச்செல்வனும் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவை விட்டு. கனடாவில் உள்ள தன் குடும்பத்தினரின் வியாபாரத்திற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து நிலவிரிப்பு கொள்வனவு செய்து அனுப்பிக் கொண்டிருந்திருக்கக் கூடும். தற்போது தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் தப்பியிருப்பதுடன். தமிழ்ச்செல்வனும் ரொறன்ரோ தமிழர்களின் வீடுகளுக்கு சல்ய++ட் அடிக்கும் வேலையை செய்திருந்திருக்கக் கூடும். கேபியை பிரபாகரன் கழுதை என்று செல்லமாக அழைப்பதாக டிபிஎஸ் அடிக்கடி குறிப்பிடுவதைப் பார்த்தால். நாய் பார்க்கிற வேலையைக் கழுதை பார்த்திருக்கக் கூடாது என்றே கியூறியஸ்க்குப் படுகிறது
கேபி மூன்று தடவைகள் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ரவுப் கக்கீம் குற்றம் சாட்டுகிறார். கே.பியின் கையில் இருந்த சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்று யூஎன்பி கேள்வி கேட்கிறது தாய்லாந்தின் பதவி நீக்கப்பட்ட பிரதமர் இலங்கைக்கு இரகசிய விஜயம். அவருக்கும் கேபிக்கும் வியாபாரத் தொடர்புகள் இருக்கின்றன என்று குற்றச்சாட்டுக்கள் வெளிவருகின்றன. கேபியின் கைகளில் எக்கச்சக்கமான சொத்துகள் இருக்கின்றன என்ற கதை மாறி. கேபி இலங்கை அரசுக்கு கிடைத்த சொத்து என்று கதை மாறுகிறது. கே.பி வடக்கு மாகாண முதல்வராகலாம். பொதுமன்னிப்பு வழங்கப்படலாம். யுத்தக் குற்ற விசாரணையில் அரசு சார்பில் பயன்படுத்தப்படலாம். என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றனஇராஜீவ் கொலை தொடர்பாக சிபிஐ வந்து விசாரணை செய்தது என்று கூட தகவல் வருகிறது
தொடரும்:

திங்கள், 27 செப்டம்பர், 2010

                             கருத்து பகிர்வு
அண்மைக்காலங்களில் எந்த செய்திகளும் சரி வலைப்பதிவுகளும் சரி உள்ளிருந்தே கொல்லும் வியாதி போல எதோ KP துரோகியா?KPரெஜி துரோகி?நெடியவன் துரோகி? விநாயகம் துரோகி? ......................இப்படியே நீண்டு செல்கிறது பட்டியல் ,இதிலே விசேடம் என்னவென்றால் இந்த துரோக பட்டியலை தயாரிப்பவர் கருணாவோ டக்ளஷ்  அல்ல .போராட்டம் என்று காவடியாடியவர்கள் .பார்வையாளர்களாக தங்கள் குடும்பநலம் பேணியவர்கள் தான் இந்த தேசப்பற்றாளர்கள் .கேவலம் என்ன என்றால் நெடியவன் ,KP,உருத்திரகுமாரன் ஆகியோரது cappacity      என்ன என்பதனை ,அவர்களது ஆசையினை சரியாக புரிந்து கொண்ட சிங்கப்பூர் பேராசிரியர் ,நெடியவனால் தான் இலங்கை அரசுக்கு பங்கம் ஏற்படும் என்ற தொனியில் பெற்றோல் உற்றுகிறார்.
அதனை நம்பி எம்மவர்களும் சொடைபோவது தான் வேதனை தரும் விடயம்.
ஒன்றை நான் அடிக்கடி சொல்கிறேன் ,இனிமேல் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் எதுவும் செய்ய முடியாது .அது உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ சரி.அந்த யதார்த்தத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .இந்தியாவில் அண்மைய நீதிமன்ற தீர்ப்பு இதற்கு உதாரணம் ,அடுத்து விடுதலைப்புலிகளது விருப்பமோ ,தலைவரது தனிப்பட்ட விருப்பல்ல, தமிழீழம் .இதற்கு யாரும் தலைமை தாங்கலாம்....
இப்போ உள்ள நிலைமையில் சரியோ தவறோ புத்திஜீவிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாடுகடந்த அரசை பலப்படுத்தலாம் .
தமிழ் மக்களது விடுதலையினை உண்மையாக்க  வெளிநாட்டுவாழ்மக்கள் ,போராளிகள் அனைவரும் இணைந்து தமிழீழ சொத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பகிரங்கமாக நாடுகடந்த அரசிடம் ஒப்படைத்து செயலில் இறங்க வேண்டும் .நாங்கள் வாழவே வழியில்லாமல்  இருக்கும் துர்பாக்கிய நிலைமையில், தமிழீழம் தான் தீர்வு என்று சொல்லி உள்ளதையும் கேடுத்துக்கொள்ளக்கூடாது .தமிழீழ கனவு நெஞ்சிலே இருக்கட்டும் .அது அடையக்கூடிய இலக்காக இருக்கட்டும் ,அதல்ல இப்போதைய பிரச்சனை மக்கள் மிகவும் அச்சமடைந்த நிலைமையில் உள்ளனர் வேட்டிக்கு ஆசைப்பட்டு கொமனமும்  போனகதைபோல சிங்கள குடியேற்றங்கள் வேகவேகமாக முனைப்பு பெறுகிறது .இங்கே தமிழனுக்கல்ல வடக்கில் வாழும் ஈழத்தமிழன் தனது பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல்  நிலைகுலைந்துபோய் உள்ளான் ,தற்போதுள்ள நிலைமையில் அவ்விட நிலைமைக்கு ஏற்ராட்போல செயல்படவேண்டிய இக்கட்டினை உணராமல் சொத்துக்கு சண்டை பிடிப்பது எந்தவிதத்தில் சரி என எனக்கு புரியவில்லை.இவர்களை பார்க்கும் பொது அந்த மனிதர் எவ்வளவு பாவம் என்பது எமக்கு புரியும் .சொத்துக்களை அடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிச்சுக்கொண்டு பேசாம இருந்தாலே ஒருவேளை இந்த பிரச்சனைகள் முடிந்தாலும் முடியும் .
உலகமே பார்த்து வியந்த கட்டுக்கோப்பான இயக்கத்தில் இருந்தவர்களின் இலட்சணமா ?என நினைக்க தோணும அளவுக்கு நாற்றம் எடுக்குது .தயவு செய்து ஆக்கபூர்வமாக சிந்தித்துக்கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமாக ஈழ மண்ணில் வாழும் மக்களுக்காக ,வாழ்ந்த மக்கள் ,வாழவேண்டும் என மரணித்துப்போனவர்களை மனம் நிறுத்தி செயல்படுங்கள்
நன்றி
கண்ணன்     

முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

>
1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது.

1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர்.

2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச
v:shapes="_x0000_i1036">
ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் "ஹீரோ" வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.

21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.
துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.

14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.

அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார்.
ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.

இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள் அல்லது குற்றச் செயல் என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.

பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் "போட்டுத் தள்ள வேண்டும்" என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.

அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.

அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் "தமிழ் உணர்ச்சியின்" அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது 

பற்குணம் இரண்டாவது உட்படுகொலை ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

சில மாதங்கள் இடைவெளியில் இருவேறு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இவையெல்லாம் எமது இரத்ததில் புதிய நம்பிக்கை அணுக்களை உருவாக்கியிருந்தது. அனைவருக்கும் அதீத உற்சாகம் பொங்கியது. தமிழீழம் மிக அண்மையில் எட்டிவிடும் தூரத்திலேயே இருப்பதாக உணர்கிறோம்.

.
தனிமனிதப் படுகொலைகள் என்றாலும் உணர்ச்சியின் உந்துதலுக்கு உட்படுத்தப்பட்ட எமக்கெல்லாம் அவை தாக்குதல்கள் தான். மக்கள் போராட்டங்கள் பற்றியும் அதற்கான அரசியல் வழிமுறை பற்றியும் அறிந்து வைத்துக்கொண்டா இவற்றைத் திட்டமிட்டோம்!

எமது தோளில் புதிய சுமையை உணர்கிறோம். பற்குணமும் இணைந்துகொள்ள விரிவாக்கப்பட்ட மத்திய குழு ஒன்று கூடல்களை பல தடவை நிகழ்த்துகிறோம். ஒரு புறத்தில் உற்சாகத்தில் மக்கள் மக்கள் திளைத்திருக்க மறுபுறத்தில் நாமும் எமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பற்குணம் இந்தியாவில் வாழந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.

எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார். பிரபாகரனைப் பொறுத்தவரை பலமான ஒரு இராணுவக் குழு தேவை என்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தின் பின்பாக, குறிப்பாக மத்திய குழு விவாதங்களின் போது பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையிலான முரண்பாடாக எழுகிறது. பிரபாகரன் அரசியலற்ற வெறும் இராணுவச் சிப்பாய் போலச் செயற்படுவதாகவும் , ஒரு விடுதலை இயக்கத்தை வழி நடத்தத் தகமையற்றவர் என்ற கருத்தையும் கூட்டங்களில் முன்வைக்கிறார். இதற்குப் பிரபாகரனிடம் பதில் இருக்கவில்லை.

அதே வேளை பற்குணம் புகைப்பிடிகும் பழக்கததைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கததையும் கொண்டிருந்தார்.தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்திது, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை.பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.

பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.

பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.

பற்குணத்தின் ஊடாக மன்னார் வீதியில் அமைந்திருந்த கன்னாட்டி என்னும் இடத்தில் ஈரோஸ் அமைப்பினர் ஒரு பண்ணை ஒன்றை நடத்திவருவதாக அறிந்தோம். எம்மைப் போலவே சில புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் இடைநிலை முகாமாகவிருந்த கன்னாட்டிப் பண்ணையிலிருந்த ஈரோஸ் உறுப்பினர்களுடன் எமக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது.
அவ்வேளையில் சங்கர் ராஜி, அருளர்,அந்தோனி என்ற அழகிரி போன்ற ஈரோசின் முக்கிய உறுப்பினர்கள் அங்கு தங்கியிருந்தனர். பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்களில் சில உறுப்பினர்கள் அவர்களிடம் பயிற்சியையும் பெற்றிருந்தனர்.

சில நாட்களுக்கு உள்ளாகவே எமது பூந்தோட்டம் முகாமிற்கு அவர்கள் வருவதும், நாங்கள் அவர்களது முகாமிற்குச் செல்வதுமாக ஒரு நட்ப்பு வளர்ந்திருந்தது. பற்குணம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எமது இயக்கத்திற்கும் அரசியல் நடைமுறைகள் தேவை என்பதையும், அரசியலற்ற பிரபாகரன் தலைமைக்குத் தகுதியற்றவர் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.

ஈரோஸ் இயக்கத்தினர் எமது பூந்தோட்டம் பண்ணைக்கு வந்து எம்மோடு உரையாடல்களை நடத்துவார்கள். பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள், பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற விடயங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். 1977 பொதுத் தேர்தலுக்குச் சில காலங்களின் முன்னர் சங்கர் ராஜி என்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர் எமது முகாமிற்கு வந்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பிரபாகரனோடு சங்கர் ராஜி, பலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் விவகாரங்களில் பிரபாகரன் ஆர்வம் காட்டவில்லை. எமக்கு அருகே இருந்த சிறிய இலக்கு ஒன்றை குறிவைத்துச் சுடுமாறு சங்கர் ராஜியிடம் பிரபாகரன் கேட்க, அவரும் அவ்வாறே சுடுகிறார். குறி தவறி வேறு இடத்தில் சூடு படுகிறது. துப்பாக்கியை வாங்கிக்கொண்ட பிரபாகரன் அதே இலக்கைக் குறிவைத்துச் சுடுகிறார். குறி தப்பவில்லை. இலக்கில் நேரடியாகச் சென்று குண்டு துளைத்ததும், ஈரோஸ் இயக்கதிலிருந்து எமது பண்ணைக்கு வந்த அனைத்து விருந்தினர்களும் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.

வங்கிக் கொள்ளை நிகழ்த்தியிருந்த நாம் ஒப்பீட்டளவில் ஈரோஸ் இயக்கத்தை விட வசதி வளங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். பற்குணதின் சிபார்சின் பேரில் ஈரோஸ் அமைப்பிற்குப் பண உதவி செய்வதென்ற கருத்தை எமது மத்திய குழுவைக் கூட்டி விவாதிக்கிறோம். இறுதியில் பிரபாகரனும் அவர்கள் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் ஒரு குறித்த பணத் தொகையை வழங்க வேண்டும் என்று முன்மொழிய நாங்களும் அதை ஒத்துக்கொள்கிறோம். இந்த முடிவின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பிற்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் வழங்கப்படுகிறது. பிரபாகரனுக்கோ எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை.

பேபி சுப்பிரமணியம் , தங்கா போன்றவர்களூடாக, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், மாவை சேனானதிராஜா போன்றவர்களுன் இறுக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. சேனாதிராஜா தான் முதலில் எமக்குக் ஏற்பட்ட கூட்டணியின் முதல் நம்பிக்கையான தொடர்பு. அவரினுடாக அமிர்தலிங்கத்தின் தொடர்பு ஏற்படுகிறது. சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது. தவிர, மத்திய குழு சார்பிலான சந்திப்புக்கள் நடைபெறவில்லை. பின்னதாக நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றதும், மத்திய குழுவுடனான சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நானும் அமிர்தலிங்கம் வீட்டிற்குச் சென்றேன் என்பது எனது நினைவுகளில் பதிந்துள்ளது.இவ்வாறான எந்தச் சந்திப்புக்களிலும் பற்குணம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளைகளில், புதிதாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார். இந்த வேளைகளிலெல்லாம் எனக்குப் பிரபாகரன் சொல்வது தான் நியாயமாகத் தென்பட்டது. ஒருபக்கத்தில் அரச படைகள் மறுபக்கத்தில் தமிழர்கள் இதற்கு மேல் என்ன அரசியல் என்பது தான் பொதுவான மனோபாவமாக என்னிடமும் காணப்பட்டது. மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரபாகரன் பக்கம்தான்.

பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையேயான சச்சரவின் நடுவே நாங்கள் மௌனிகளாகவே இருந்தோம்.

ஈரோஸ் இயக்கம் தம்மை அரசியல் ஆளுமை மிக்கவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசியல் என்பதெல்லாம் தேவையற்றதாகவே கருதியிருந்தது. இந்தச் சூழலில் ஈரோஸ் என்ற அரசியல் இயக்கம் தமது இராணுவப் படையாகத் தமிழீழ விடுத்லைப் புலிகளை இணைத்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஈரோஸ் அரசியல் தலைமை வழங்க நாமெல்லாம் அவர்களின் இராணுவக் குழுவாகச் செயற்படுவோம் என்று எதிர்பார்த்தார்கள். தம்பி பிரபாகரனும், நாமும் பற்குணத்தின் ஊடாக அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற எத்தனிப்பதாகக் கருதினோம். பற்குணமும் பல தடவைகள் அவரது விவாதங்களூடாக இதனைத் தெரிவித்திருந்தார். பிரபாகரனைக் குற்றம்சாட்டும் கருப்பொருளாக இதுவே அமைந்திருந்தது.

தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.

பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.

இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு; அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.

இதனிடையே ஜெயவேல் என்பவர் கைது பொலீசாரின் வலைக்குள் சிக்கிவிடுகிறார். எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பரச் செலவுகள் செய்துவந்ததால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் முதலில் கைதுசெய்யப்படுகிறார். குளிப் பானதினுள் நஞ்சு வைத்துக் கொலைசெய்ய முற்பட போது தப்பித்துக்கொண்ட ஜெயவேல் இப்போது பொலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணைகளின் கோரத்தில் அவர் என்னையும் ராகவனையும் காட்டிக்கொடுத்து விடுகிறார்.

இதன் பின்னர் நான் தேடப்படுகிறவன் ஆகிவிடுகிறேன். எனது வீட்டைப் பொலீசார் சோதனையிடுகின்றனர்.

புன்னாலைக்கட்டுவனில் எனது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிசார், வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். எனது பெற்றோரை மிரட்டி என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்கின்றனர். புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை எனது வீட்டிலிருந்தே மேற்கொண்டோம்.

ஜெயவேல் ஊடாக இதனை அறிந்துகொண்ட காவற்துறைக்கு இந்த வழக்கில் நான் முக்கிய எதிரியாகிவிடுகிறேன். புன்னைலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் எனது நடம்மாட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்த அவசர நிலையைக் கருத்தில்கொண்டு ராகவன், பட்டண்ணா ஆகியோரை இந்தியாவிற்குச் செல்லுமாறு பிரபாகரன் கூறுகிறார். ராகவன் பட்டண்ணா ஆகியோர் புலிகளில் ஆதரவாளர்களாக இருப்பினும் ஜெயவேலுக்கு இவர்களின் தொடர்புகள் இருப்பிடங்கள் என்பன தெரிந்திருந்தது. இதனால் இவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் பிரபாகரனே இவர்களையும் கூட்டிச் செல்லுமாறு கோருகிறார் தங்கத்துரை யின் கடத்தல் படகு ஒன்ன்றில் மன்னார் சென்று மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கிறோம்.

நான் நேசித்த தாய் மண்ணைப் பிரிந்த சோகத்தின் மத்தியில் இந்திய மண்ணிலிருந்த நம்பிக்கை அதன் மீதான மதிப்பாகவும் மாறியது. வெறும் உணர்ச்சிச் சமன்பாடுகள் தான் எமது சிந்தனையைத் தீர்மானிக்கும் வரம்புகளாகியிருந்த காலகட்டத்தில் இதைவிட வேறு எதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?

அங்கிருந்து சேலத்திற்குச் செல்கிறோம். அங்கே பெரிய சோதி, சின்னச் சோதி என்றி அழைக்கப்படும் வல்வெட்டித்துறையச் சேர்ந்த இருவருடன் நாம் தங்கியிருந்தோம். இவர்கள் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் குழுவைச் சார்ந்தவர்கள். எமக்கு வேறு உழைப்போ பணவசதியோ இல்லாத நிலையில் இவர்கள் தான் எம்மைப் பாதுகாக்கிறார்கள். உணவருந்துதுவதும், உறங்குவதும், தமிழ் சினிமாப் பார்ப்பதும் தான் எமது வேலையாக இருந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை சேலத்திலேயே எமது நாட்களைக் நகர்த்துகிறோம்.

உலகம் முழுவதும் எவ்வாறு போராட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன, முற்போக்கு சக்திகளுடனான உறவு, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு எமது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தல் போன்ற எந்த விடயங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் எமக்கு இருந்ததில்லை. பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறுத்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு. எமது குறுகிய உலகத்துள் எமக்குத் தெரிந்ததெல்லாம் தாக்குதலும் எதிர்த் தாக்குதலும் என்பது மட்டும்தான்.

இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.

அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குழம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.

துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.

நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியீட்டுகிறது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அங்கீகாரமாக இத் தேர்தலின் வெற்றி கருதப்பட்டது. 1977 ஜூலை 21ம் பெரும்பாலும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களும் பிரிவினைக்கான சுலோகத்தை முன்வைத்துப் போட்டியிட்ட கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர்.

இதே வேளையில் பிரதம மந்திரியாகத் தெரிவு வெற்றியீட்டிய ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொலீசாருக்கு எதிரான கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான குழுக்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும், இந்த இரு பகுதியினருமே அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இதே வேளை வன்முறையாக நான்கு பொலீசார் யாழ்ப்பாணத்தில் நடந்த கானிவேல் ஒன்றினுள் அனுமதிசீட்டு இல்லாமல் பிரவேசிக்க முயன்ற போது உருவான தர்க்கத்தில் மக்களால் தாக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உருவான தமிழ் சிங்கள மோதல், இன வன்முறையாக மாற்றம் பெறுகிறது. 12ம் திகதி ஆகஸ்ட் 1977 ஆம் ஆண்டு ஆரம்பமான இவ்வன்முறைகள், அரசின் மறுதலையான ஆதரவுடன், இனப்படுகொலை வடிவத்தை கொள்கிறது.300 தமிழர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுகிறார்கள். தமிழர்களுக்கு உரிமை தருவதாகப் பேசி ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பிரிவினைக் வாதத்தில் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எழுச்சியே இவ் வன்முறைகள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். 
இந்தியாவிலிருந்து இதை அறிந்த நாம் வெறுப்பும் கோபமும் அடைகிறோம்.

30 நாட்கள் நீடித்த இந்த வன்முறைகளின் சில நாட்களில் பிரபாகரன், மாவை சேனாதிராஜா, காசியானந்தன் ஆகியோர் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் படகு மூலமாக இந்தியாவிற்கு வருகின்றனர்.

பேபி சுப்பிரமணியம், தங்கா போன்றோர் ஊடாக நான் இந்தியாவிலி இருக்கும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புலிகளின் தொடர்பு வலுப்பெற்று வளர்ச்சியடைகிறது. பற்குணத்தின் மறைவிற்குப் பின்னர் புலிகளின் மத்திய குழுவுடனான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. தேர்தல் வன்முறைகள், ஜெயவர்தன அரசு வெளிப்படையாகவே கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக இச்சந்திப்புக்கள் மேலும் கூட்டணியுடனான இறுக்கத்தை வலுவாக்குகின்றன. பிரபாகரன் நான் இருந்த சேலத்திற்கு வருகிறார். இதே வேளை பேபி சுப்பிரமணியம் விமான மூலமாக இந்தியாவிற்கு வருகிறார்.


நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்தியிகுழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத உடன்பாட்டிற்கு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும், புலிகள் இவற்றிற்கான இராணுவ அமைப்பு என்றும் முடிபிற்கு வருகின்றனர்.

தேர்தல் வெற்றியும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முரைகளும், அவற்றிற்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீராவேசப் பேச்சுக்களும் புலிகள் இந்த முடிபிற்கு வரக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக தம்பி இந்தியா வந்ததும் என்னிடம் கூறுகிறார். நானும் அவற்றை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் இருந்த காலப்பகுதியில் மதுரையில் நடராசா என்ற ஓவிரைப் பிரபாகரன் சந்திக்கிறார். அவர் தான் விடுதலைப் புலிகள் சின்னத்தை வரைந்து கொடுக்கிறார்.


சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பிற்கு சந்தர்ப்பவசமாக நான் செல்லவில்லை ஆனால் என்னோடு தங்கியிருந்த பட்டண்ணா சென்றார் என்பது நினைவிற்கு வருகிறது. இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை சேனாதிராஜா தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.

இவ்வேளையில் இலங்கையில் எமது வழமையான இயக்க வேலைகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காக நான் இலங்கைக்குப் போவதாக முடிவெடுக்கப்படுகிறது. சின்னச் சோதி நான் திரும்பிச் செல்வதற்கான படகை ஒழுங்கு செய்கிறார். மயிலிட்டிக்குப் படகு வந்து சேர்கிறது. மறுபடி சொந்த மண்ணில் கால்பதித்த உணர்வு மேலிடுகிறது!




 

. புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்


கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது.

 இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள் குறித்தும் உரையாடுகிறேன்.

இரண்டு பண்ணைகளிலுமாக ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் விவசாயம் செய்துகொண்டு முழு நேர உறுப்பினர்களாக வாழ்கிறார்கள். முன்னமே குறிப்பிட்டது போல பண்ணையிலிருப்பவர்கள் இயக்கத்திற்குள் உள்வாங்கப் படுவதற்கான முதல் நிலை உறுப்பினர்களாகவே கருதப்பட்டார்கள். இவர்களைச் சில காலங்களுக்கு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதன் பின்னதாகவே இயக்க உறுப்பினர் மட்டத்தில் இணைத்துக்கொள்வது என்பதே எமது திட்டமாகச் செயற்படுத்தி வந்தோம்.

நான் இந்தியாவிற்கு செல்லும் வேளையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பண்ணையிலிருந்தனர். ஞானம், சற்குணா, கறுப்பி என்ற நிர்மலன், செல்லக்கிளி ஆகிய நால்வருமே அங்கிருந்தனர். புதிய பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குமணன், சாந்தன், மதி, பண்டிதர் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.'

பண்ணை என்பது எமது இயக்கத்தின் சட்டரீதியான முன்முகமாகவே அமைந்திருந்தது. தேடப்படுக்கிற உறுப்பினர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. செல்லக்கிளி தேடப்படுகின்ற ஒருவர் என்பதால் பண்ணையில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை.
இந்தப் புதிய உறுப்பினர்களையும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்களது உணர்வுகளையும் நான் கண்டபோது, என்னுள் என்னையறியாத உத்வேகமும் உற்சாகமும் பிறக்கிறது. தனித் தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம் தவழ்ந்து எழுந்து நடை போடுவதான உணர்வு என்னுள் பிரவகித்த்து. இரண்டு மூன்று தனி மனிதர்களைக் கொண்ட எமது குழு ஒரு இயக்கமாக மாற்றம் பெறுவதைக் கண்முன்னாலேயே காண்பது போலிருந்தது.

நானும் பிரபாகரனும் இல்லாத வேளைகளில் இப்பண்ணை ஏனைய மத்திய குழு உறுப்பினர்களான நாகராஜா, கணேஸ் வாத்தி, , தங்கா, விச்சு போன்ற உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இவர்கள் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்த போதும், முழு நேர இயக்க உறுப்பினர்களாக இருக்கவில்லை. இந்த மத்திய குழு உறுப்பினர்களிடமே பண்ணைகளின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார இறுதிப்பகுதிகளிலேயே இவர்கள் பண்ணைக்குச் சென்று இயக்க நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்வது வழமை.

காடு சார்ந்த வசதி குறைந்த பகுதிகளிலேயே பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள், கொசுத் தொல்லை என்பன அதிகமாகக் காணப்பட்டன. இதனால் பண்ணையில் வாழ்ந்த உறுப்பினர்கள் மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வாடும் துன்பியல் சம்பவங்கள் வழமையாகியிருந்தது. இவ்வாறான நோய்களுக்கான மருத்துவ வசதி கூட எம்மிடம் இருந்ததில்லை. மத்திய குழு உறுப்பினர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தனர்.

மத்திய குழு உறுப்பினர்கள் வார இறுதியிலேயே அங்கு செல்லும் வாய்ப்பு இருந்தமையால் பண்ணை உறுப்பினர்களின் நலன்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது. இதனால் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பண்ணை உறுப்பினர்களுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. நாடு திரும்பியதும் எனது உடனடியான பிரச்சனையாக இதுதான் அமைந்திருந்தது.

ஆக, பூந்தோட்டம் பண்ணையில்ருந்தவர்களதும், பன்றிக்கெய்தகுளம் பண்ணைகளுக்கிடையே பயணிப்பதும், அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளைக் களைவதும் தான் எனது சுமை நிறைந்த வேலையாக அமைந்திருந்தது. மாவை சேனாதிராஜாவின் தம்பியான தங்காவின் மீதான தப்பபிப்பிராயம் ஏனையோரிலும் அதிகமானதாகவே அமைந்திருந்தது. சில மத்திய குழு உறுப்பினர்களின் பிரமுகத்தனமான மனோபாவம் பண்ணையில்ருந்தவர்கள் மத்தியில் விரக்தி மனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது. சில மாதங்களில் பண்ணைகள் ஒழுங்கிற்கு வருகின்றன. மறுபடி உற்சாகத்துடன் வேலைகள் தொடர்கின்றன.

இந்த வேளையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் பிரபாகரனும் இந்தியாவிலிருந்து திரும்புகிறார். இவரோடு கூடவே பேபி சுப்பிரமணியம், ராகவன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.

நான் இந்தியாவில் இருந்த வேளையில் பேபி சுப்பரமணியம்
 

ஊடாக, கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான , நில அளவையாளருமான உமா மகேஸ்வரனின் தொடர்பு எமக்கு ஏற்படுகிறது.

கொழும்பிலிருந்து வந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது. உமா மகேஸ்வரன் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறார். நான் இலங்கைக்கு வந்தபின்னர் பண்ணையில் என்னோடும் ஏனைய உறுப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.


சில நாட்களிலேயே, எமது மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சந்திக்க ஏற்பாடாகிறது. இச் சந்திப்பை அமிர்தலிங்கம் வீட்டிலேயே ஏற்பாடுசெய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் நான் மத்திய குழுவோடு இணைந்து ஒரு தடவைதான் அவர்களைச் சந்த்தித்திருந்தேன்.

நான் இந்தியாவில் தங்கியிருந்த வேளையில் இந்தத் தொடர்புகளும் சந்திப்புக்களும் பிரபாகரனோடு பலதடவைகள் நிகழ்ந்திருந்ததால், திட்டமிடலுக்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என்பதை விட நட்பு அடிப்படையிலான சந்திப்பாகவே எனது அமிர்தலிங்கத்துடனான முதலாவதும் இறுதியானதுமான சந்திப்பு அமைந்திருந்தது.

பிரபாகரன், பேபி சுப்ரமணியம், குலம் போன்றோருடன் தான் இந்தத் தொடர்புகள்

அதிகமாக அமைந்திருந்தன. எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி எமது பிரதான நட்பு சக்தி என்பதற்கும் மேலாக அரசியல் வழிகாட்டிகள் என்பது வரை எமது அனைவரதும் உணர்வுகள் அமைந்திருந்தன. பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை.

ஒரு வகையில் ஒரே அரசியலுக்கான வேறுபட்ட வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தோம். சிறுகச் சிறுக தொடர்ச்சியாக, 80 களின் இறுதி வரை முளைவிட்ட அனைத்து அமைப்புக்களுமே தமது உள்ளகக் கட்டமைப்புகளில் ஜனநாயகத்தையும், வெளியமைப்பில் புதிய அரசியலுக்கான தேடலிலும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவான அரசியல் புலிகள் போன்று ஒரே வகையானதாகவே அமைந்திருந்தது என்பதை இன்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதே வேளை உமா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து வந்து எம்முடன் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்கிறார். இவரது போராட்ட உணர்வும், துடிப்பும், உத்வேகமும் எம்மைக் கவர்ந்திருந்தன. 1977 இன் இறுதிகளில் உமா மகேஸ்வரனையும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முன் மொழிவைப் பிரபாகரன் முன்வைக்கிறார். நாம் யாரும் இதில் முரண்படவில்லை. உமா மகேஸ்வரனும் முகுந்தன் என்ற இயக்கப் புனை பெயரோடு தமிழீழ விடுதலை புலிகளில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இதே வேளையில் உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஜெயவர்த்தனா அரசு, புதிய குடியரசு
அரசியல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழினத்தின் அடிமை சாசனம் என்று தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.இதே நாளில் நாங்கள் ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று எமது மத்திய குழுவில் முடிவெடுக்கிறோம்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர்  மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவது வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

 இந்த வேளையில் விமானமொன்றைக் குண்டுவத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து எம்மில் பலரால் முன்வைக்கப்படுகிறது.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

இந்த முடிபுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடுகிறோம். அந்த வேளையில் சிங்கள மக்கள் அதிகமாகப் பிரயாணம் செய்யும் இந்த விமானத்தில்

அவர்கள் விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் குண்டை வெடிக்கவைத்தால் அப்பாவிகள் அனியாயமாக இறந்துபோவார்கள் என்பது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. இவ்வேளையில் தான் ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன். சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார். பொதுவாக அங்கிருந்த மற்றவர்கள், சிங்கள மக்கள் கொல்லப்பட்டால் வருத்தப்படத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இறுதியில் நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில், அப்பாவிப் பொதுமக்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மட்டுமே நேரக்குண்டை வெடிக்க வைப்பது என முடிவாகிறது.