திங்கள், 27 செப்டம்பர், 2010

சுட்டது தேனியில்

கேபி துரோகியா யதார்த்தவாதியா  
(பகுதி-1)
மேதகு பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் (தாயகம்)
காடு கடந்த தமிழீழத் தேசியத் தலைவர் முள்ளிவாய்க்காலில் மண் கவ்விய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னால். அடுத்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய நாடு கடந்த தமிழீழத்தின் மாஜித்தலைவர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதில் இருந்து. புலன் பெயர்ந்த கூட்டம் செய்வதறியாது குழம்பிப் போய் மேய்ப்பனை இழந்த மந்தைகள் போல திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறார் என்று கனவு கண்ட கும்பலுக்கு இலங்கைப் புலனாய்வுத் துறை முள்ளிவாய்க்கால் என்ன. மலேசியா வரைக்கும் புகுந்து விளையாடப் போகிறது என்ற உண்மை உச்சந்தலையில் கோடாலியால் கொத்தி நட்சத்திரங்கள் மின்னிய அதிர்ச்சி பிரபாகரன் என்ற தனிமனிதனின் தலையில் தமிழினத்தின் தலைவிதியை ஒப்படைத்து.
அந்தத் தனிமனிதனின் அழிவோடு துரோகிகளுக்கு மண்டையில் போட்டு தமிழீழத்தை அடிச்சுப் பறிக்கும் முட்டாள்தனமான கனவுக்கு முள்ளிவாய்க்காலில் முடிவு கட்டப்பட்டு விட்டது என்ற உண்மையை புளிச்சல் ஏவறைப் புலன் பெயர் தமிழர்களால் ஜீரணிக்க முடியவில்லை இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் நாய்படாப் படாடு பட்டு. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்த அந்த மக்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டாலும். புலன் பெயர்ந்தவர்கள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல. ஒரு தொடக்கம் என்று. தொலைக்காட்சியை கோட்டை விட்ட கொல் கலாசார வானொலி போல. பயமுறுத்திக் கொண்டிருப்பதற்கு கேபி ஒரு காரணகர்த்தா என்பது தான் பெரிய உண்மை
யேசுநாதர் போல வஸ்திரம் களையப்பட்டு  கோடாலியால் அறையுண்டு அவமானப்பட்டு பிரபாகரன் இறந்த உண்மையின் அதிர்ச்சியிலிருந்து விடுபட முடியாமல். அது டிக்ஷாலிவூட் கிராபிக்ஸ் என்ற ஜுனியர் விகடன். நக்கீரக் கிராபிக்ஸ் கயிறு திரிப்புகளை நம்பி. தலைவர் சிங்களவனுக்கு கயிறு கொடுத்து தப்பி விட்டார் என்ற ஒரு பொய்யை நம்ப ஆசைப்பட்டுக் கொண்டிருந்த கூட்டத்தை. தலைவர் உயிரோட இருக்கிறார் என்ற செய்தி மூலம் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தவர் கே-பி வெளிநாடுகளில் நடத்திய தெருக்கூத்துக்கள் எல்லாம் அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தான் என்று புலிகளுக்கு கொடி தூக்க. தோளோடு தோள் கொடுத்த மனித உரிமைவாதிகள் தலைகீழாக நின்றாலும். இடையில் கேபி தயார் பண்ணிய கெலிகொப்டரும் கப்பலும் தலைவரை சாகச நடவடிக்கை மூலம் மீட்டுச் சென்றிருந்தால். தெருக்கூத்து வெற்றித் திருவிழாவாகியிருக்குமே தவிர. அதன் பின்னால் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவது பற்றி எந்த கவலையுமே எவருக்குமே இருந்திருக்காது. இதுதான் புலன் பெயர்ந்த கூட்டத்தின் இனப்பற்று? தலைமையைக் காப்பாற்ற நடத்தப்பட்ட பேரணிகளும் சாலைமறியல்களும் உண்ணும் நோன்புகளும் கடைசியில் கோமாளிக்கூத்து ஆகிய நிலையில் மீண்டும் அதே கூட்டத்தின் திட்டுதலுக்கு கே.பி ஆளானது இன்னொரு கதை
தலைவர் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்து விட்டார் என்ற தன் கதையை நம்பி வெற்றிவிழாக் கொண்டாடிய கூட்டத்தின் தெருக்கூத்தில் என் தலைவன் இறந்து விட்டான் என்று கண்ணீர் மழை பெய்து குழப்பிய கேபியை அதே கூட்டமே எந்த கூச்சமும் தயக்கமும் இன்றித் தூற்றத் தொடங்கியது. முதலில் வெளிவந்த செய்திகளின்படி தலைவர் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு வெளியேறியதாக சூசை கூறியதாலேயே தலைவர் உயிரோடு இருப்பதாகக் கூறிய கே.பி பின்னால் தன் பேச்சை மாற்றியதும் திடீர்த் துரோகியானார் இருந்தாலும் முன்பு தெரிவிக்காத தகவல் ஒன்றை கே.பி தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார் கடைசிவரை தொடர்பில் இருந்த சூசை. பாதுகாப்பு வளையங்களை உடைத்து வெளியேற முயன்ற தலைவர் வெளியேற முடியாமல். பொட்டம்மான் இல்லாமல் தனியே திரும்பி வந்ததாக தனக்குக் கூறியதாகக் கூறுகிறார் இந்த தகவல் முன்பு எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.
மந்தைகளுக்கு வாய்த்த மேய்ப்பர்கள்
ஒருவாறாக. தலைவர் முடிந்த கதை உண்மை என்ற விடயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த கூட்டத்திற்கு தலைமை வழங்க வேண்டிய தேவை எங்கோ எவருக்கோ இருந்தது மேய்ப்பர்கள் இல்லாவிட்டால் இந்த மந்தைகளால் தனியே புல்வெளிகளுக்கும். நீர்ச்சுனைகளுக்கும் போக முடியாதே? புலிகளின் அழிவின் பின்னால் ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப. புலிவால்கள் மட்டுமன்றி. புலிகளின் அடிவருடிய கூட்டமைப்பும். மாற்றுத் தரப்பினரும். பல புத்திஜீவிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும். நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டு தான் இருந்தார்கள் எப்படி பிரபாகரன். புலன் பெயர்ந்த புலிக்கூட்டத்திற்கு பொன் முட்டையிடும் வாத்தோ. அதே போலத் தான் தமிழ் அரசியல் தலைமைக்கும் புலன் பெயர்ந்த கூட்டம் அது புலிகளாயிருந்தால் என்ன கூட்டமைப்பாய் இருந்தால் என்ன ஏன் கோட்டுப் போட்ட புலி வாலுப்பிள்ளைகளாயிருந்தால் என்ன இந்தக் கூட்டத்திற்கு அரசியல் தலைமை வழங்க முடியாது போனாலும். அதைக் குஷிப்படுத்திக் கொண்டாவது தலைமையைத் தக்க வைக்க வேண்டிய நிலையிலேயே இருந்தன இந்தக் கூட்டம் எதைக் கேட்க விரும்புகிறதோ. அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களைத் தான் இந்தக் கூட்டம் நம்பிக் கொண்டிருந்தது.
புலிகள் என்ற இயக்கம். ஈனநாட்டு ஆசிரியரின் மொழியில் சொல்வதாயின். வேரோடும் வேரடி மண்ணோடும் வழித்துத் துடைக்கப்பட்ட நிலையில். களத்தில் இராஹவத்தின் பிடியில் தப்பி காட்டுக்குள் இருந்த புலிகளி;ன் கீழ்மட்டத் தலைவர்களின் உதவியுடன். வெளிநாடுகளில் கோடிக்கணக்கான டொலர்கள் புரளும் மாபியா அமைப்பாகச் செயற்பட்ட புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை கைப்படுத்தி. ஈழக்கனவை தொடரச் செய்வதன் மூலம் புலன் பெயர்ந்த தமிழ்க்கூட்டத்திற்கு தலைமை வழங்கவும். அதன் மூலம் யாவாரத்தையும் உண்டியல் பிழைப்பையும் தங்கு தடையின்றிக் கொண்டு செல்லவும் முயன்றவர்கள் இரு தரப்புகளின் கீழ் அணிதிரண்டார்கள்.
சாமியறை வரைக்கும் சென்று காட்சி தந்து அருள் பாலித்த தேசியத் தலைவர் போலன்றி. தங்கள் முகங்களைப் பகிரங்கமாகக் காட்ட மறுக்கும் கேபியையும். நெடியவனையும் நம்பி இந்தக் கூட்டம் வழமை போல. மேய்ப்பன் பின்னால் சென்றது மக்களோடு உறவாடாமல். தன் உயிருக்குப் பயந்து பதுங்கி வாழ்ந்த மனிதனை நம்பிய கூட்டம். முகம் காட்ட மறுத்த இனம் தெரியாத நபர்கள் பின்னால் சென்றதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது இந்த காணாமலேயே விசுவசிக்கும் பாக்கியவான்களின் புண்ணியத்தில் தான் தமிழினம் இன்று இந்த அவல நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது யார் எவர் என்றில்லாமல். தேசியத் தலைவருக்கு வாழ்த்துப் பாடி. துரோகிகளுக்கு கலம்பகம் பாடும் எந்த அயோக்கியனையும் நம்ப இந்தக்கூட்டம் தயாராக இருந்ததால் தான். அரசியல் ஞானேயங்கள் எல்லாம் மேதாவிகளாக கோட்டுப் போட்டுப் கொண்டு உள்ளுக்க வரவிட்டு அடிக்கும் விளக்கங்களை இந்தக் கூட்டத்திற்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
தலைவர் இறந்து விட்டார் என்ற உண்மையை ஒத்துக்கொண்டு. அவரை மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரனாக்கி அஞ்சலி செலுத்தி. அதிலிருந்து அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பிக்க முயன்ற கேபிக்கு முட்டு;க்கட்டை போட்டது நெடியவன் கும்பல் தமிழ்ச்செல்வனின் அண்டல். மற்றவர்களின் அள்ளிவைப்பு காரணமாக பிரபாகரனால் கே.பி ஓரம் கட்டப்பட்ட பின்னால். வெளிநாட்டு வர்த்தக சாம்ராஜ்யத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்ட காஸ்ட்ரோவின் தலைமைக் கையாளான நெடியவன் தன்னை புலிகளின் வாரிசாக சுயபிரகடனம் செய்து கொண்டார். இதற்குள் முன்பின் கேட்டறியாத புலனாய்வுத் தளபதிகளும் தங்கள் பங்குக்கு அடையாளம் காட்டாமலேயே அறிக்கை விட்டார்கள் முன் பின் கேட்டறியாத அனாமதேயங்கள் இணையத்தில் அடையாளமோ விலாசமோ இல்லாமல் வெளியிட்ட இந்த அறிக்கைகளை நம்பி பதில் அறிக்கைகளும் அவை பற்றிய பரபரப்பூட்டும் அரசியல் ஆய்வுகளும் என புலிக்குப் பின்னான அரசியல் என்பது மர்மங்களும். திடுக்கிடும் திருப்பங்களும் என கொஞ்சக் காலம் திகிலூட்டி மகிழ்வித்தது.
புரட்சித் தலைவன் காஸ்ட்ரோ
இதற்குள் காஸ்ட்ரோ பற்றிய சில தகவல்களை இங்கே கருத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தில் உடல் செயலிழந்த காஸ்ட்ரோ சக்கர நாற்காலியுடனான மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டங்களுடனேயே செயற்பட்டுக் கொண்டிருந்தவர் தலைவரும் தளபதிகளுமான நிகழ்வுகளில் போஸ் கொடுத்த முக்கிய தளபதிகளில் ஒருவராகவே அவர் அடிக்கடி காணப்பட்டார். வெளிநாட்டு நடவடிக்கைகள் கே.பியிடமிருந்து பறிக்கப்பட்ட பின்னர். கேபியின் விசுவாசிகள் உலகெங்கும் ஓரம் கட்டப்பட்டு. காஸ்ட்ரோவின் அடிவருடிகள் அந்தப்; பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்
இந்த காஸ்ட்ரோவிற்கு பெருமைழூ சேர்த்த சம்பவம் ஜெயதேவன் விவகாரம் இந்த விவகாரத்தில் ஜெயதேவனின் கோவிலை புலிகள் பறித்து சீவரத்தினத்திற்கு கொடுத்தது சம்பந்தமாக மேலிடத்தில் நீதி கேட்கச் சென்ற ஜெயதேவனும் விவேகானந்தனும் வன்னியில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு. ஜெயதேவனின் பிரிட்டிஷ் அரசியல் மேலிடத் தொடர்பு காரணமாக பாலசிங்கம் எச்சரிக்கப்பட்டு. ஜெயதேவன் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த விலாவாரியான விபரங்களை தாயகம் தளத்தில் இன்றும் வாசித்து அறிந்து கொள்ளலாம் இதில் குறிப்பிட்ட சீவரத்தினத்தின் புதல்வியை காஸ்ட்ரோ திருமணம் செய்வதாக இருந்ததாகவும் அந்த உறவிலேயே காஸ்ட்ரோ கோயிலை அபகரித்து சீவரத்தினத்திற்கு கொடுத்ததாகத் தான் செய்திகள் வெளிவந்திருந்தன.
இங்கே தான் தெரிய வருகிறது தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வழிநடத்தலும்? உலகில் எந்த அரசியல் தலைவர்களும் தங்கள் அமைச்சர்களோ. தளபதிகளோ தங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளும் போது எவரையும் பாதுகாப்பது இல்லை தங்கள் பதவிக்கு குந்தகமோ. அபகீர்த்தியோ ஏற்படுத்தும் எந்த அடுத்த கட்டத் தலைவர்களையும் உடனடியாகவே. தற்காலிகமாகவேனும். பதவி நீக்குவது வழக்கம் கரிகாலன் குறி வைக்க மாட்டான். வைத்தால் தவறாது. தவறினால் மறுமுறை எய்யவும் அவன் தயங்க மாட்டான்ழூ என்ற அந்தக் காலத்து எம்ஜிஆர் பட வசனம் போல. தன்னுடைய முடிவு தவறு என்பதை உணர்ந்து அதற்கு பரிகாரம் செய்யாத தேசியத் தலைவர். பிரிட்டிஷ் அரசியல் மேலிடத் தலையீட்டால் தன் மூக்குடைந்த போதும். காஸ்ட்ரோவை பதவி நீக்கம் செய்தது கிடையாது
தேசியத் தலைவரைப் பொறுத்தவரைக்கும் தனக்கு கீழ் இருந்த எவரையும் தவறான நடவடிக்கைகளுக்காகவோ. தகுதியின்மைக்காகவோ. பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்காகவோ பதவி நீக்கம் செய்தது கிடையாது தன்னைச் சுற்றியிருக்கும் ஜால்ராக் கூட்டத்தின் அண்டல்களை நம்பி தன்னுடைய கதிரைக்கும் இருப்புக்கும் ஆபத்து வருவிக்கக் கூடும் என்று சந்தேகப்படுபவர்களைப் போட்டுத் தள்ளுவதில் எந்த தயக்கமும் காட்டாத அவர். வேறெந்தக் குற்றச்சாட்டுகளுக்காகவும் யாரையும் பதவி நீக்கியது கிடையாது. இது மாபியா அமைப்புகளில் சாதாரண நடைமுறை வேண்டியவர்களை எந்தக் கட்டத்திலும் பாதுகாப்பது. அமைப்பில் இருக்கும் மற்றவர்களை விசுவாசமாய் வைத்திருக்க உதவும் துரோகம் செய்பவர்களைப் போட்டுத் தள்ளுவது மற்றவர்கள் பயத்துடன் ஒழுங்காக நடந்து கொள்ள உதவும்.
தகுதி அறிந்து பதவி கொடுக்காமல். தன் மீது கண் மூடித்தனமான விசுவாசம் கொண்டிருந்தவர்களுக்கு பதவி கொடுத்த காரணத்தினால். தனது மெய்க்காப்பாளர் பதவித் தகுதியுடன் தமிழ்ச்செல்வனை அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக்கினார் தன்னைச் சூழ மதியூகிகளை வைத்திருக்காமல். மது உரைஞர்களையும். ஜால்ராக்கூட்டத்தையும் வைத்திருந்த காரணத்தினால் தான் முள்ளிவாய்க்காலில் முன்னூறு மீட்டர் சதுரப் பரப்பில் முடங்கிக் கிடந்த போதும். நான் ஈழம் எடுப்பன் எண்டு நீ கூட நம்பேலையோ என்று கே.பியை தலைவரால் கேட்க முடிந்தது.
இதனால் தான் தமிழ்ச்செல்வன். பொட்டம்மான் போன்றவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டத்தகாதவர்களுக்கு தகடு கொடுத்து வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள் இந்த அடிப்படையில் தான் தன் வாழ்நாள் பூராவும் இயக்கத்திற்காக இத்தனை ஆபத்துகளுக்கும் மத்தியில் ஆயுதம் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்த கே.பியை இயக்கத்திலிருந்து ஓய்வு பெறச் செய்தார் ஆனால். தனக்கு மூக்குடைவை ஏற்படுத்திய காஸ்ட்ரோ மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
இறுதியில் யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் இந்த மசிர் நீப்பின் உசிர் வாழாக் கஷவரிப்புலி தன் உயிரைப் பாதுகாப்பதற்காக தனது அலுவலகத்திலிருந்த சகல ஆவணங்களையும் தட்டில் வைத்து இராஹவத்திடம் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்றது தலைவரே தன் குடும்பத்தினரின் அல்பங்களை விட்டு ஓடும்போது. வெளிநாட்டு நிதி விவகாரங்கள் என்ன மசிரோ என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம் ஒரு கிரனேட்டைக் கூட வீசி அதை அழிக்காமல் தன் உயிரைக் காக்க தப்பியோடிய இந்த மாவீரன் புலன் பெயர்ந்த தமிழருக்கு செய்த துரோகத்தை விட வேறு யாரும் செய்ததில்லை வெளிநாடுகளில் புலிகளுக்கு நிதியுதவி வழங்கிய சகலர் பற்றிய தகவல்களும் புலனாய்வுத் துறையிடம் அகப்பட்டது காஸ்ட்ரோவின் கைங்கர்யமே.
பின்னால் இணையத்தில் வந்த உறுதிப்படுத்தப்படுத்த முடியாத தகவல்களின்படி. இறுதிக்கட்டத்தில் காஸ்ட்ரோவின் துரோகத்தை தலைவர் உணர்ந்து மரண தண்டனை விதித்ததாகவும். இன்னொரு கதைப்படி காஸ்ட்ரோ குப்பி கடிச்சதாகவும் பல்வேறு தகவல்கள் ஆனாலும் சக்கர நாற்காலியுடனான உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் இல்லாததால் காஸ்ட்ரோ தலைவருக்கு முன்பாகவே இறந்ததாகத் தான் கருத வேண்டியுள்ளது தன்னுடைய கெலிகொப்டர் அதிரடி நடவடிக்கைக்கான பணத்தை. கே.பிக்கு பெருமை கிடைக்கக் கூடாது என்பதற்காக. காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நெடியவன் கொடுக்காமல் இழுத்தடித்தார் என்று இன்று கே.பி சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாயின். இந்தக் குற்றச்சாட்டை இறுதிநேரத்தில் தலைவருக்கு கே.பி தெரியப்படுத்தியிருக்கக் கூடும். தங்களது நிலைக்கு யார் மீதாவது பழியைச் சுமத்த வேண்டும் என்று மற்ற மாண்புமிகு தளபதிகளும் ஒத்தூதி இருக்கக் கூடும் இதன் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.
இதையும் விட. புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டம் பட்டிபட்டியாய் உலகத் தலைநகர்களில் எல்லாம் புலிக்கொடியோடும். தலைவரின் படத்தோடும் கலந்து கொண்ட போது. இதை மக்களுக்கான போராட்டம் ஆக்காமல். புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் முயற்சி என்பதால் சர்வதேச சமுகம் கண்டு கொள்ளாது என்று கியூறியஸ் திரும்பத் திரும்ப கத்தியதற்கான ஆதாரங்கள் இன்றும் தாயகத்தில் உண்டு கே.பி கூட தான் இதை மக்கள் போராட்டமாக்க வேண்டும் என்பதால் புலிக்கொடியை காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியதையும் மீறி. காஸ்ட்ரோ நெடியவன் கூட்டமைப்பு புலிக்கொடி. பிரபாகரன் படம் சகிதம் போராட்டம் நடத்தியதால் வந்த தோல்வி பற்றி தற்போதைய பேட்டியில் கூறியிருக்கிறார் எல்லாம் முடிந்த பின்னாலும். ரொறன்ரோவின் முருகன் கோவிலில் புலிவாலுப் பிள்ளைகளின் காங்கிரஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் தங்களின் விருப்பத்திற்கு மாறாக. தாங்கள் சொல்லியும் கேட்காமல் புலிக்கொடி காட்டியதால் வந்த பாதிப்பு பற்றி பொதுமக்கள் பலர் குமுறியது பற்றி அங்கு கலந்து கொண்டவர்கள் கியூறியஸிடம் கூறியிருந்தனர் இந்த விடயங்களும் கே.பி மூலமாக தலைவரின் காதில் போடப்பட்டிருக்கலாம்.
கே.பிக்கும் காஸ்ட்ரோவுக்குமான பனிப்போர் காரணமாக. இருவருக்கும் இடையில் தொடர்பாளராக நடேசன் இருக்க வேண்டியிருந்த நிர்ப்பந்தம் பற்றியும். காஸ்ட்ரோ மீது குற்றம் சாட்டி முறையிட முடியாத அளவுக்கு நடேசனுக்கும் காஸ்ட்ரோவுக்கும் இருந்த நெருக்கம் பற்றியும் தற்போதைய பேட்டியில் கே.பி கூறியிருக்கிறார் இந்தப் பனிப்போரினால் தன் உயிர் போகப் போவதை உணர்ந்து கொண்ட தேசியத் தலைவர் போகும் போது போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று கடைசியாக காஸ்ட்ரோவையும் போட்டுத் தள்ளிப் போய்ச் சேர்ந்தார் தான் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதில் தலைவருக்கு எந்த தயக்கமும் கிடையாது ஏனென்றால் தலைவர் தவறே இழைக்காத மகாத்மா அன்றோ?
இப்படியாகத் தானே துரோகி பட்டம் பெற்று மரண தண்டனை பெற்றதாகக் கூறப்படும் காஸ்ட்ரோவின் கையாளான நெடியவன் இறுதிக்கட்டத்தில் காஸ்ட்ரோவுடனான தொடர்புகள் அறுந்து அல்லல்பட்டு. அன்ரி அடேலுடன் தொடர்பு கொண்டு காஸ்ட்ரோ பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும் இன்னொரு செய்தி
இப்படியாக காஸ்ட்ரோ நெடியவன் கூட்டமைப்பு தலைவருக்கும் போராட்டத்திற்கும். புலன் பெயர்ந்த கூட்டத்திற்கும் செய்த துரோகம் பற்றி இந்தக் கூட்டம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
களம் காணா வேங்கை நெடியவன்
இதில் நெடியவன் ஏதோ களம் பல கண்ட வேங்கையும் அல்ல கிளிநொச்சியிலிருந்து. புலிகளின் பெருமையைக் கேட்டறிந்து வந்து சேர்ந்த ருறிஸ்டுகளுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததைத் தவிர வேறெந்த களத்தையும் இந்த மாவீரன் கண்டதாக சரித்திரம் இல்லை. இப்படியாகத் தானே புலிகளி;ன் மேன்மையைக் கண்டறிய வந்த நோர்வே தமிழ் இளையோர் ஒருவருக்கு வழிகாட்டப் போய் கண்டதும் காதல் கொண்டு கடிமணம் புரிந்து நோர்வே வந்ததாகத் தான் தகவல் முன்பு வெளிவந்திருக்க முடியாத இந்த தகவல்கள் எல்லாம் எங்களுக்கு கிடைத்ததற்கு காரணம் உள்வீட்டுக் குத்துவெட்டுக்களால் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டியபோது உள்வீட்டு விவகாரங்கள் எல்லாம் சந்திக்கு வந்ததமையே
காஸ்ட்ரோவின் துரோகம். நெடியவனின் பெருமை பற்றி எங்களுக்குத் தெரிந்த இந்த தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு தெரியாது காரணம் எந்தப் பக்கத்தில் இருந்து அடி விழும் என்று தெரியாமல் மதில் மேல் பூனைகளாக உட்கார்ந்திருக்கும் ஊடகங்களும் ஆய்வாளர்களும் தான் அதையும் மீறி உண்மையைத் தேட வேண்டும் என்ற ஆர்வம் சிறிதேனும் இல்லாத இந்த புலன் பெயர்ந்த கூட்டம் மாற்றுக் கருத்துக்களுக்கான தளங்களில் இந்தக் கருத்துக்கள் வந்தாலும் அதை உவங்கள் பொய் சொல்றாங்கள் என்று புறந் தள்ளி விடுவது இன்னொரு காரணம் இதனால். இதுவரை காலமும் புலிகள் நடந்து கொண்ட அளவுகோல்களின்படி இவர்களும் துரோகிகளே என்ற விடயம் இந்தக் கூட்டத்திற்கு இன்று வரை தெரியாமல் போயிருக்கிறது
இந்த லட்சணத்தில் தான் நெடியவன் வாரிசுரிமைக்கு போட்டி போட்டார். காஸ்ட்ரோ மூலமாக நிர்வகித்த சொத்துக்கள் நெடியவன் கைகளில் இருந்ததாலும். அதற்கு தமிழ்நெட் கூட்டம் மதியுரைக்க முன்வந்ததாலும் ஊடகங்கள் மூலமாக நெடியவன் தன் கையை ஓங்கச் செய்வதில் சிரமங்கள் இருக்கவில்லை வெளிநாடுகளில் புலிகளின் பணம் சேர்ப்பு நிர்வாக இயந்திரத்தில் தமிழன் அடிப்படையில் பணம் சேர்த்துக் கொண்டிருந்த ஒட்டுண்ணிகளுக்கும். மாதச் சம்பளத்தில் பிரசார வேலைகளில் ஈடுபட்டிருந்த பரப்புரைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் புலிகளின் மறைவுடன் வருமானத்தில் துண்டு விழும் துன்பம் நேர்கையில். காசெடுத்து நீட்டி. ஆடம்பர மாளிகைகளுக்கும் கார்களுக்கும் பணம் செலுத்த நெடியவன் தயாராகிய போது. இலையான்கள் மொய்க்க ஆரம்பித்ததில் ஆச்சரியம் ஏது ஆடம்பரமும் சொகுசுமான வாழ்வுக்கான பிழைப்பாகவே போராட்டத்தை வெளிநாட்டில் நடத்திக் கொண்டிருந்த இந்தக்கூட்டம் கேபியின் பச்சைத்தண்ணியில் பலகாரம் சுடும் முயற்சியில் பங்கு கொள்ளாமல். நோர்வேத்தலைவர். நோர்வே மதியுரைஞர் என்று மேதகு புரட்சித்தலைவியின் மாண்பு மிகு அமைச்சர்கள் போல நெடியவனின் பாதாரவிந்தங்களை பாடித் தொழுததில் என்ன சந்தேகம் இருக்கிறது.
கேபிக்கு முடி சூட்டல்
இந்த தகிடுத்தத்தங்களின் பின்னணியில் தான் கேபியின் வாரிசுரிமை அறிவிப்பு வெளிவந்தது எம்ஜி.ஆர் பாக்கியராஜை தன் வாரிசு என்று அறிவித்தது போல. தலைவரின் வாரிசாக கே.பி அறிவிக்கப்பட்டார். இதற்கு ஆதாரமாக கே.பி தான் இறுதியாக பிரபாகரனுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவை பலருக்கும் போட்டு தன் வாரிசுரிமையை நிருபித்ததாக தகவல் (இந்த உரையாடலைக் கேட்க முடியாது போனாலும். கேட்டவர்கள் மூலமாக சில தகவல்களைப் பெற முடிந்தது. இந்த ஒலிப்பதிவு விவகாரம் பற்றி கே.பி வழங்கிய பேட்டியில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை)
இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கே.பியை தலைக்கு மேல் தண்ணீர் போன நிலையில். மீண்டும் அழைத்து. தங்களைக் காவாந்து பண்ண அழைத்த போது. கே.பியும் அதற்கு உடன்பட்டார் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு. கையறுந்த நிலையில் தவறை உணர்ந்து கே.பியை அழைத்தாலும். அதை விட முக்கியமான நோக்கம் சர்வதேச ஆதரவைப் பெற்று யுத்தத்தை நிறுத்த வைப்பது தான் அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு இண்டர்போலினால் தேடப்படும் ஆயுதக் கொள்வனவாளர் பதவி தடையாய் இருக்கும் என்பதால். கே.பியின் வேண்டுகோளுக்கு ஏற்ப. உத்தியோகபூர்வமாகவே புலிகளின் சர்வதேச செயலாளர் பதவி கே.பிக்கு வழங்கப்பட்டது
இந்த பதவியும். இறுதிக்கட்டத்தில் நடேசன் போன்றோர் கே.பி தான் இனிமேல் என்று விடுத்த அறிவுறுத்தல்களும் கே.பியை ஒருவகையில் முடிக்குரிய இளவரசனாகவே ஆக்கியிருந்தன
புலிகளின் வெளிநாட்டு சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான கே.பியின் முயற்சிகளுக்கு நெடியவன் கும்பல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது இறுதியில் இரு தரப்பினரும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து கூட்டுத்தலைமையும் அறிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் அங்கீகாரத்தைப் பெறவும் கேபியின் தலைமையில் நாடு கடந்த தமிழீழ முயற்சி ஆரம்பிக்கப்பட்டது வெள்ளைத்தோல் புலிகளின் மூதுரையுடன் முன்பொரு போதும் கண்டு கேட்டறியாத இந்தத் திருக்கூத்துக்கு வியாக்கியானங்கள் வழங்கப்பட்டு. புலன் பெயர்ந்த கூட்டத்தின் தலையைச் சுத்தி காதில் பூ வைக்கும் முயற்சி ஆரம்பமானது
இவ்வாறான ஒரு நாடு கடந்த முயற்சி மூலம் இலங்கை அரசை யுத்தக் குற்றச்சாட்டுகளுக்குள் மாட்டி விடவும். ஈழவிடுதலைக்கு அங்கீகாரம் தேடவும். இந்த அழுத்தத்தின் மூலம் இலங்கை அரசு பிடிபட்ட புலிகளை விடுவிக்க வைக்கவும் என பல்n;வறு காரணங்கள் கூறப்பட்டாலும். புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்ட நிலையில். புலிகளோடு தங்களை அடையாளம் காட்டுகின்ற எந்த அமைப்புடனும் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தை நடத்தாது என்ற. எந்த அரசியல் கற்றுக்குட்டிக்கும் தெரிந்த. உண்மை புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு உறைக்காததால் அது மீண்டும் தமிழீழக் கனவுகளுடன் வாக்களிப்புக் கூத்துக்களுக்காய் இழுபட்டது
ஆயுதக் கொள்வனவாளராய் இருந்து அரசியல்வாதியாக வேஷம் மாறி. இதுவரையும் தலைமறைவாய் இருந்த கே.பியும் தன்னை வெளியில் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் கனடிய வானொலிப் பேட்டிகள். சனல் நான்கு தொலைக்காட்சிப் பேட்டிகள் என பகிரங்கப்படுத்த ஆரம்பிக்க கே.பிக்கு வலை வீசிக் கொண்டிருந்தவர்களுக்கு கே.பியின் மறைவிடத்தை அடையாளம் கண்டு ஈரச்சாக்கு கொண்டு அமுக்குவதில் பெரும் சிரமம் இருக்கவில்லை இந்தக் கைது விவகாரத்தில் நெடியன் குழுவின் காட்டிக் கொடுப்பு காரணமாய் இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு கே.பி ஆதரவாளர்கள் மத்தியில் பலமாகவே எழுந்தது கே.பியின் கைது மூலம் மிகவும் லாபம் அடையப் போவது நெடியவன் என்பதாலும். தன் தனிக்கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை அமைப்பின் சொத்துக்களாக்கும் கே.பியின் முயற்சியும். கைது நடைபெற்ற உடனேயே கே.பி பற்றிய அவதூறுப் பிரசாரம் ஆரம்பித்ததாலும் கே.பியைக் காட்டிக் கொடுத்ததில் நெடியவன் குழுவினருக்கு பங்குண்டு என்ற குற்றச்சாட்டில் நியாயம் இருக்கவே செய்கிறது வழமை போல எங்கள் ஆய்வாளர்களும் கே.பி தானாகவே சிங்கள புலனாய்விடம் சரணடைந்தார் என்பது முதல் ஏற்கனவே சிங்களப் புலனாய்வின் கையாள் கே.பி என்பது வரை ஆய்ந்து தள்ளினார்கள்
இங்கே புதிய நாடகம் ஆரம்பமாகிறது அதற்கு முன்பாக கேபி இயக்கத்தில் ஆற்றிய பங்கை கொஞ்சம் பின்நோக்கலாம்.
வரலாற்றில் பின்நோக்கி
அகிம்சைப் போராட்டம் மூலம் ஈழம் எடுக்கலாம் என்று ஆசை காட்டிய அமிர்தலிங்கமே தன்னை பிரபாகரனுடன் அறிமுகம் செய்து வைத்ததாக கே.பி சொல்லும்போது எங்கள் போராட்டத்தின் அவலத்தின் மூலகாரணங்களை அடையாளம் காண முடிகிறது துரையப்பாவிற்கு துரோகி பட்டம் டே;டிய அமிர் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து துரோகியான கதை எங்கள் அவலமான வரலாற்றில் ஒரு ஏடு பின்னாளில் பிரபாகரனின் திருமணத்தின் போது தோழனாகும் அளவுக்கு தங்கள் நெருக்கம் இருந்தாக கேபி சொன்னாலும். அந்த திருமணத்திற்கு பிரபாகரனின் தந்தை இந்தியாவிலிருந்து கொண்டே வர மறுத்ததில் இருந்து. ஒரு கும்பல் சூரியதேவன் என்று கும்பிடும் தன் தனயனின் பெருமை பற்றி தந்தை கொண்டிருந்த மதிப்பை அளவிட முடியும்.
நாட்டுக்கு வெளியே இருந்து செயற்பட்டதால். மாத்தயா. கிட்டு போன்றோர் இயக்கத்தில் ஏற்படுத்திய சர்ச்சைகளில் கே.பியின் பெயர் அடிபடவில்லை பிரபாகரனுக்கான அசைக்க முடியாத விசுவாசமும் இருந்த நேரடித் தொடர்பும் கே.பி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக செயற்பட காரணமாய் இருந்தன.
ஆயுதக் கொள்வனவு என்பது ஏதோ சுன்னாகம் சந்தையில் சுருட்டு வாங்குவது போன்ற ஒன்றல்ல ஏமாற்றுக்காரர்களும் கொலைகாரர்களும் நிறைந்த மாபியாக் கும்பல்களும். பரஸ்பரம் தோள் கொடுக்கும் போராட்ட அமைப்புகளும் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படும் வில்லத்தனமான அரசுகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் செயற்பட்டு போராட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி தலையிடி கொடுக்க முனையும் அரசுகளும் வல்லரசுகளும் மட்டுமே இந்த ஆயுத வியாபாரங்களிலும் வினியோகங்களிலும் ஈடுபடும் இவற்றை இனம் கண்டு அவர்களுடன் உறவாடுவதும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதும் கயிறு மேல் நடக்கும் விளையாட்டுத் தான் கொடுக்கல் வாங்கல்களில் சறுகினாலோ. அவர்கள் எதிர்பார்க்கும் பிரதியுபகாரங்களை நிறைவேற்றுவதில் தவறினாலோ சுவடே தெரியாமல் கொன்று எரித்து விடுவதற்கு தயங்காத கூட்டங்கள் இவை சட்ட விரோதமான இந்தச் செயற்பாடுகளுக்கு எழுத்துக் கணக்குகள் கூட இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் இந்த தொழில் தர்மம் எந்த நேரமும் தலையைப் போக்கலாம் சுயநலம் என்ற ஒன்றைத் தவிர. நேர்மை என்பதற்கு இடமேயில்லாத செயற்பாடு இது பணத்தை வாங்கிக் கொண்டு வினியோகிக்காமல் தலை மறைவாகும் கூட்டம் இதில் நிறையவே உண்டு பணத்திற்குப் பதிலாக போதைப் பொருட்கள் பண்டமாற்றாக நடைபெறும் தொழில்களில் இது ஒன்று.
ஒரு தடவை கே.பி இவ்வாறு ஏமாற்றப்பட்டு. சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து சேர்ந்த பெட்டிகளுக்குள் வெறும் டம்மிகள் இருந்ததையும் திறந்த பெட்டிகளுக்குள் எதுவுமில்லாததைக் கண்ட பிரபாகரன் கே.பியைப் பார்த்த பார்வை பற்றியும் அப்போது அருகில் நின்று பார்த்த ஒருவர் கியூறியஸ்;க்கு ஒரு தடவை வர்ணித்திருந்தார்.
இப்படியான ஒரு தொழிலுக்குள் முன் அனுபவம் எதுவும் இன்றி. ராஜீவ் கொலை தொடர்பாக தேடும் இந்தியா முதல் இன்ரர்போல் வரைக்கும் கண்ணில் மண்ணைத் தூவி மாயாவி விளையாட்டுக் காட்டி. புலிகளை ஒரு ஆயுதங்களுக்குப் பஞ்சமில்லாத அமைப்பாக மாற்ற கப்பல் கப்பலாக ஆயுதங்களைக் கொண்டு வந்திறக்கிய பெருமை கே.பியையே சாரும் அதற்கான ஆளுமையும் வசீகரமும் கொண்ட ஒரு திறமைசாலி என்பதை மறுக்க முடியாது.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு ரஜனிகாந்த் ஒரு விழாவிற்கு வந்து திரும்பிய போது. அவரை விமானநிலையத்தில் சந்திக்கச் சென்ற மாற்றுஅமைப்பு உறுப்பினரான நண்பர் ஒருவர். விமானநிலையத்தில் கேபியைக் கண்ட விடயம் பற்றி கியூறியஸ் இடம் தெரிவித்திருந்தார் அதே காலப்பகுதியில் கியூறியஸ் உடன் தொடர்புகள் கொண்டிருந்த மிகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கே.பி ரொறன்ரோவில் நின்ற போது அவரை மடக்க பொலிஸ் பாய்ந்ததையும். கே.பி இடம் மாறியதால் தப்பித்ததையும் தெரிவித்திருந்தார்
இப்படி உலகம் சுற்றி. புலிகளின் ஆயுதக் கொள்வனவுடன் சர்வதேச கப்பல் போக்குவரத்து வர்த்தகம் என புலிகளுக்கு ஒரு பலம் வாய்ந்த சர்வதேசக் கட்டமைப்பை தனியொரு மனிதனாக அமைத்தது கே.பி தான் புலிகள் கடைசி வரைக்கும் இலங்கை அரசுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் ஒரு இராணுவரீதியான அச்சுறுத்தலாக விளங்குவதற்கு காரணம் கேபியே கேபி தவிர்ந்த இன்னொருவர் அதைச் சாதித்திருக்க முடியும் என்பது சாத்தியமாகியிருக்காது என்பது கேபிக்கு பின்னால் புலிகள் ஆயுதக் கடத்தலில் கோட்டை விட்டதிலிருந்து தெரிய வரும்
இன்று கே.பியை துரோகி என்று சொல்லும் பலரும் புலிகளின் இராஹவ வளர்ச்சிக்கு மூலகர்த்தா கேபி தான் என்பதை மறந்து விடுகிறார்கள் வெறும் கண்ணிவெடிகள் முதல் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வரைக்கும் புலிகளிடம் இருந்தது என்றால் அதற்கு காரணம் கே.பி
ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை அவர்கள் வாயில் நிரந்தரமாக இருப்பது துரோகி என்ற முத்திரை மட்டும் தான் எந்த நேரம் அவர்கள் எவரைத் துரோகியாக்குவார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம் தாங்கள் மாவீரன் என்ற அதே வாயால் அதே மாவீரனை துரோகியாக்குவதிலும் அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை இப்படியாக மந்தைகள் போல பின்னால் போகும் அளவுக்கு முட்டாள்களாயிருந்தோமே என்ற குற்ற உணர்வு கூடக் கிடையாது
கேபி புலிகளின் வெளிநாட்டு சாம்ராஜ்யத்தை ஓகோ என்று விஸ்தரித்தாலும். புலிகளுக்கே உரித்தான கழுத்தறுப்புக் குணம் மாறாதே? பேச்சுவார்த்தை என்ற பெயரில் உலகைச் சுற்றி. உலகம் வன்னிக்கிணற்றை விடப் பெரியது என்று கண்டு கொண்ட கருணா போலன்றி. வன்னிதான் உலகம் என்று கடைசி வரைக்கும் நம்பியிருந்த தமிழ்ச்செல்வன் கேபி பற்றி தலைவருக்கு காதில் ஓதியதாகத் தான் தகவல் இப்படியாக கேட்பார் சொல் கேட்கும் மதிநுட்பம் வாய்ந்த தலைவரும் கேபியை இயக்கத்திலிருந்து ஓய்வு பெற வைத்தார் இது புலி அகராதிப்படி இயக்கத்திலிருந்து நீக்கப்படுவதல் ஆகும் இதன் பின்னர் கே.பியின் சாம்ராஜ்யம் காஸ்ட்ரோ கைக்கு மாறியது.
தான் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டதும் பேசாமல் ஒதுங்கி தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தியதாக கே.பி தெரிவிக்கிறார் இருந்தாலும் இத்தனை ஆபத்துக்களுக்கும் மத்தியில் தன் உயிரைப் பணயம் வைத்து விசுவாசமாகச் செயற்பட்ட ஒருவர் தன்னை அவமானப்படுத்திய நன்றி கெட்ட தனத்தைக் கண்டு அமைதியாக இருந்திருப்பார் என்பது சந்தேகத்திற்கு உரியதே உண்மையில் பரிநிர்வாணம் அடைந்த ஒருவரால் தான் பகைவனுக்கருள்வாய் நெஞ்சே என்று அமைதியாக இருந்திருக்க முடியும்
கே.பி கைது விவகாரம்
இப்படியான ழே;நிலையில் தான் கே.பி கைது செய்யப்பட்டதாக தாய்லாந்தின் பாங்கொக் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதிலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாங்கொக்கில் விஜயம் மேற்கொண்டு நின்றிருந்த சமயத்தில் வெளிவந்த இந்த செய்தி பற்றி இந்து பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கே.பி எரித்திரிய கடவுச்சீட்டுடன் வந்த போது விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என தாய்லாந்து அதிகாரி கூறினார் என்று தெரிவித்திருந்தது அத்துடன் கேபியை ராஜீவ் கொலை சம்பந்தமாக விசாரிக்கத் தேடித் திரிந்த இந்திய அரசு இந்தச் செய்தி குறித்து அக்கறை கொண்டிருந்த விடயமும் வெளியானது இலங்கை அரசும் கேபியை தாய்லாந்திலிருந்து நாடு கடத்த முயற்சித்ததாக தகவல் வெளியானது
ஆனால் திடீரென்று அந்தச் செய்தி தவறானது என்று இன்னொரு செய்தி வெளியானது ஆனால் செய்தியை வெளியிட்ட பாங்கொக் போஸ்ட் தனது செய்தி தவறு என்று செய்தி வெளியிடாமல். மற்ற மூலங்கள் மூலமாகவே இந்த தகவல் வெளியானது எரித்திரியக் கடவுச்சீட்டு. அந்த விபரத்தை தெரிவித்த அதிகாரி முதலான விவரங்கள் வெளிவரும் அளவுக்குப் போன ஒரு விடயம் தவறானது என்று பின்னால் தெரிவிக்கப்பட்டது சந்தேகத்திற்கு உரிய விடயமே
ஆனால் பின்னர் டிபிஎஸ்.ஜெயராஜ் கேபி மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட நிகழ்வு பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில். கேபி முன்னர் கைது செய்யப்பட்ட போது முக்கிய உளவு நிறுவனம் ஒன்று தலையிட்டு அவரை விடுவித்ததாகவும். இதனால் அந்த உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் கே.பி இருந்ததாக நம்பி கவனக்குறைவாக இருந்ததாக அவரது சகபாடிகள் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
'According to circles close to KP the reason for his confidence was due to the “protection” he enjoyed from a very powerful “Agency”. It was this “agency” that had rescued KP when he was arrested in 2007. It was this “agency” that had extended its protective umbrella over him. But what had happened now? Had KP outlived his usefulness to the “agency”? or had “operation KP” outsmarted even this powerful entity? The answers may be forthcoming in the days to come.'
சமீபத்திய பேட்டியிலும் தன்னைக் கைது செய்தது பற்றி டிபிஎஸ் எழுதிய கட்டுரை பற்றி குறிப்பிட்ட கே.பி அதில் சில தவறுகள் இருந்தது என்று கூறினாலும். மிகவும் பாரதூரமானதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான உளவு நிறுவனத் தலையீட்டில் விடுவிக்கப்பட்டதான தகவல் தவறு என்று கேபியோ. டிபிஎஸ்ஸோ இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக