வியாழன், 9 செப்டம்பர், 2010

உண்மையானவராக ,,,,,,,,,,,,,,,,,

"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். http://ta.wikipedia.org/wiki/வேலுப்பிள்ளை_பிரபாகரன்
தயவு  செய்து படித்து பாருங்கள் உண்மையிலேயே எதற்காக கொஞசம் மிஞ்சியது என எண்ண தோன்றுகிறது ஒவ்வொரு வலைத்தளங்களை பார்க்கும் போதும் ?
சில வலைத்தளங்களை பார்க்கும் போது நான் நினைக்கிறேன் அவர்களுக்கே அது விளங்காது என்று ?அதாவது அவர்கள் மக்களின் விடுதலைக்கு உதவுகிரார்களா?அல்லாவிடின் இவர்கள் மீண்டும் ஆயுதபோராட்டம் ஆரம்பிக்க  போகிறார்களா?அல்லது அடித்த டொலர என்ன செய்கிறது என்கிற திகில் ,இப்படி "அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு எல்லா நடையும் கேட்ட மாதிரி தான் "வேறு சில "ஆமிட்ட இல்லதவர்களது புகைப்படங்களை வெளியிட்டு ஆதாயம் தேட பார்கிறார்கள் ?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை தந்தை செல்வா சொன்னது ."தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று  கி பே ஆ சொன்னதேன்னவோ சரிதான் ஆனால் இப்ப பார்க்கும் பொது எங்கட போராட்டம் விழலுக்கு இறைச்ச நீர் போல இருக்கு ,எல்லாரும் ஜோசயுங்கோ ''''
நான் நினைக்கிறன்
" தம்பி எப்ப காலி ஆவான் திண்ணை எப்ப காலி ஆகும்" எண்டு எல்லாரும் ஜோசித்து கொண்டிருந்தவய்யோ என ண்ண தோன்றுகிறது .கொஞ்சமாவது ஜோசித்து செயுங்கோ .நாங்கள் நிறைய ந்திட்டம் .நீங்கள் நேசித்த" மக்கு" கூட்டம் இன்னமும் தெருவோரங்களிலும் மரநிழல்களிலும் தான் இப்பவரைக்கும் இருக்கினம் .அண்மைய ஆய்வுகளில் வடமாகாணத்தில் ஒருலட்சத்தி சொச்சம் விதவைகள் இருக்கினம் .நாங்கள் ஆக்கபுர்வமாக சிந்திக்காமல் பிறகு எங்கட பண்பாடு கேட்டுபோச்சு ,கலாச்சாரம் நாசமாபோச்சு எண்டு நெஞ்சில அடிச்சு ஒரு பிரயோசனமும் இல்லை .
இப்ப கூட யோசிக்கவில்லை எண்டால் தமிழ்மக்களை கடவுலாலையும் காப்பாற்ற முடியாமல் போகும் .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக