திங்கள், 27 டிசம்பர், 2010

நன்றி தமிழ்வின்

செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடுந்தொனியிலான கடிதம்! -விக்கிலீக்ஸ் வெளியிட்டது
[ திங்கட்கிழமை, 27 டிசெம்பர் 2010, 04:09.01 AM GMT +05:30 ]
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தினை சிறிலங்காவினது முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிற்குக் காட்டுவதற்கு நோர்வே விரும்பவில்லையாம்.

இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதுபோன்ற அந்தரங்கக் கடிதங்களின் பிரதியினை வழங்குவது வார இதழ்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது என சிறிலங்காவிற்கான முன்னாள் தூதுவர் ஹான்ஸ் பிறஸ்கர் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் துணைத் தூதர் ஜேம்ஸ் என்ட்விசிலிடம் கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் இரகசியத் தகவலின்படி அமெரிக்கத் துணைத் தூதுவர் இந்தத் தகவலை அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஓகஸ்ட் 18 2005 அன்று இந்த இரகசிய தகவல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த இரகசியத் தகவலில் இவ்வாறு என்ட்விசில் கூறியிருக்கிறார்.

ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].

சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேண்டுகைக்கமைய கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினது தூதுவர் விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடுமாறு பிறசல்சுக்குப் பரிந்துரைக்கும்.

ஓகஸ்ட் 16ம் நாளன்று கொழும்பில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளில் தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக எடுத்துக் கூறுவதற்காக ஓகஸ்ட் 18ம் நாளன்று நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் அமெரிக்கத் துணைத் தூதுவரைச் சந்தித்திருக்கிறார்.

லண்டனில் வைத்து விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலசிங்கத்தினைச் சந்தித்து நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கான கடிதத்தினை வழங்கியிருந்ததை இந்தச் சந்திப்பின்போது ஹான்ஸ் பிறட்ஸ்கர் உறுதிப்படுத்தியிருந்தார்.

பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதியினைத் தாம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப் போவதில்லை என்றும் இவ்வாறு வழங்குவது வழமையான நடவடிக்கை இல்லை என்றும் பிறட்ஸ்கர் கூறியிருக்கிறார்.

முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசன், ஹெல்கீசன் ஆகியோர் அதிபர் சந்திரிகாவினைச் சந்தித்துக் கலந்துரையாடிய அந்தரங்க விடயங்கள் கொழும்பு ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டிருந்தது.

ஆதலினால் குறிப்பிட்ட இந்தக் கடிதத்தின் பிரதியினைச் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்குவதானது கொழும்பு ஊடகங்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது எனப் பிறட்ஸ்கர் கூறுகிறார். இந்தத் கடிதத்தினை எவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என பிறஸ்கர் அமெரிக்காவினைக் கோரியிருக்கிறார்.

குறித்த இந்தக் கடிதத்தினை மிகவேகமாக தமிழுக்கு மொழிபெயர்த்து அதனைக் கிளிநொச்சிக்கு அனுப்புவதாக பாலசிங்கம் ஜான் பீற்றசனிடமும் ஹெல்கெசனிடமும் உறுதியளித்ததாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.

வடக்குக் கிழக்குப் பகுதியில் அண்மைய நாட்களாக விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் பாலசிங்கம் தனது கரிசனையினை வெளியிட்டிருக்கிறார். ஆனால் கதிர்காமரது படுகொலை தொடர்பில் தெளிவான பதிலெதனையும் வழங்காமல் தவிர்த்திருக்கிறார்.

நோர்வேயினது வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதையிட்டுத் தான் மகிழ்வடைவதாகவும் பிரபாகரனுக்கும் நோர்வேக்குமிடையிலான நேரடிச் சந்திப்புக்கள் விரைவில் இடம்பெறுவதைத் தான் விரும்புவதாக பாலசிங்கம் கூறியிருக்கிறார். [அந்தச் சந்திப்பில் தானும் கலந்துகொள்ளுவதற்கு விரும்புவதாகப் பாலசிங்கம் கூறியிருக்கிறார். பாலசிங்கம் இல்லாத நிலையில் ஒரேயொரு முறை மாத்திரமே நோர்வே கடந்தகாலத்தில் பிரபாகரனைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது].

ஜான் பீற்றசனுடனான இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவிற்கான பயணம் தொடர்பாக பாலசிங்கம் எதுவும் குறிப்பிடாத போதும் முன்னதாக தான் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்தபோது ஒக்ரோபரில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யும் எண்ணத்தில் தானிருப்பதாக பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.

நோர்வே பிரபாகரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கான பதில் விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்தபின்னர் தான் மீண்டும் அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்து உரையாடுவதாக பிறட்ஸ்கர் கூறுகிறார். தானறிந்தவரை ஜான் பீற்றசனுக்கும் ரைசுக்கும் இடையிலான சந்திப்பு இந்தவாரம் இடம்பெறும் என பிறஸ்கர் தொடர்ந்தார். செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினை நியூயோர்க்கில் நடாத்தும் எண்ணத்திற்கு தாங்கள் தொடர்ந்தும் விருப்பம் தெரிவிப்பதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.

இது இவ்வாறிருக்க சிறிலங்காவிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளை அழைத்திருந்த சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறது [குறித்ததொரு அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டுமெனில் அதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தனியான நடைமுறைகளைக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது].

விடுதலைப் புலிகளமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகையினை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிறசல்சுக்கு வலியுறுத்தவுள்ளார்கள்.

நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].

வெளிவிவகார அமைச்சு, 
ஒஸ்லோ 
16 ஓகஸ்ட் 2005


திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன், 
தலைவர், 
தமிழீழ விடுதலைப் புலிகள்.


அன்புடன் பிரபாகரனுக்கு,


அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.


விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.


சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.


இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.


எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.


விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.


தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.


இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.


01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.


02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.


03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.


04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.


05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.


தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன். 


தங்கள் உண்மையுள்ள, 
ஜான் பீற்றசன்


தமிழாக்கம்: புதினப்பலகைக்காக  தி.வண்ணமதி. 

சனி, 18 டிசம்பர், 2010

நன்றி BBC


புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 டிசம்பர், 2010 - பிரசுர நேரம் 17:56 ஜிஎம்டி


கருணா டக்ளஸ் மீது குற்றச்சாட்டு

விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன.
லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அதேசமயம் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ராஜாங்க தகவல்களில், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த தகவல்கள், இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் முறிந்த பிறகு, அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலைமைகள் குறித்து பெரிதும் கவலைக்குரிய சூழலை குறிப்புணர்த்துகின்றன.
தூதரகத்தின் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை மேற்கோள் காட்டி, தூதரக அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கும் தகவல்களின்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு, குடும்பத்திற்கு ஒருவரை தமது படையணியில் கட்டாயப்படுத்தி சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற தங்களின் பிள்ளைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து, ஆயுதம் ஏந்த வைக்க மறுக்கும் குடும்பத்தவரை விடுதலைப்புலிகள் மிரட்டியதாகவும் இந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம், அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக்குழுக்களின் சட்டவிரோத செயல்களுக்கு அரசு ஆதரவளித்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
இத்தகைய ஆயுதக் குழுக்களை நடத்தியவர்களில் இரண்டுபேர் தற்போது அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
இவர்களின் குழுக்களின் ஒன்று முகாம்களில் வேலை செய்வதற்காக சிறுவர்களை கடத்தியதாகவும், சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தியதாகவும், தூதரகத்திற்கு தகவல் தருவோர் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
ஆனால் இதில் குற்றம்சாட்டப்படும் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்தனர். தாங்கள் பணம் பறிப்பதிலோ ஆட்கடத்துவதிலோ ஈடுபடவில்லை என்று இருவருமே பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் மறுத்தனர்.
பணம் மற்றும் உணவை தட்டிப்பறித்த குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மற்றும் அரச ஆதரவு தமிழ் ஆயுத குழுக்கள் இரண்டின் மீதுமே இருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், இந்த ஆண்டு ஜனவரியில் அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரக தகவலில், இடம்பெயர்ந்த தமிழர்களை நடத்தும் தனது நடவடிக்கைகளை இலங்கை அரசு பெருமளவில் மேம்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் அது கூறுகிறது.
விக்கிலீக்ஸில் இதற்கு முன்பு இலங்கை குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
விக்கிலீக்ஸ் தகவல்கள் தொடர்பில் இந்த மாத முற்பகுதியில் கருத்து வெளியிட்ட இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகம், இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தினசரி நிகழ்வுகள் தொடர்பான திறனாய்வு என்றும், இவையெல்லாம் மனம் திறந்த கணிப்பீடுகளேயன்றி, அமெரிக்க அரசின் கொள்கைகளை குறிப்புணர்த்துவதாக கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.





வெள்ளி, 10 டிசம்பர், 2010

இசைப்பிரியாவுடன் கொல்லப்பட்ட மற்றைய பெண் போராளியும் அடையாளம் காணப்பட்டார்: ஊடகத்துறைப் போராளியாம்.
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 06:17.58 AM GMT +05:30 ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிக்காட்சிகளில் இசைப்பிரியாவுடன் கொல்லப்பட்டுக் காணப்படும் மற்றைய பெண் போராளியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் அகல்விழி என்ற இயக்கப் பெயரில் அழைக்கப்பட்டிருந்ததுடன், தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அவரது சொந்தப் பெயர் குணலிங்கம் உசாலினி என்று தெரியவருவதுடன் அவர் மல்லாவியில் 1990ம் ஆண்டில் பிறந்துள்ளார்.  2008ம் ஆண்டின் மே மாதத்தில் அவரது பெற்றோர் தமது மகளை புலிகள் இயக்கத்தில் சோ்த்துள்ளனர்.
ஆரம்ப காலங்களில் கிளிநொச்சி புலனாய்வுத்துறையில் பணியாற்றிய அவர் கடைசிக்கட்ட போரின் போது இசைப்பிரியாவுடன் இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் 2009ம் ஆண்டின் மே மாதம் 18ம் திகதி இசைப்பிரியாவுடன் சோ்த்து அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

மனிதன்

யுத்தக் குற்ற சந்தேக நபர் ஐ.நா பிரதிநிதியாக நியமனம்! வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை
யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரென சந்தேகிக்கப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தலைப்பில் நேற்று பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகை.

இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அதாவது வன்னிப் பிராந்திய தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வாவே அந்த இராணுவ உயர் அதிகாரி. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூறவென நிபுணர் குழு ஒன்று செயற்பட்டு வரும் நிலையில் சவேந்திர டீ சில்வா ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவரது பொறுப்பில் இருந்த படையினர் சரண் அடைய வந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளையும், பொதுமக்களையும் படுகொலை செய்து விட்டனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது என்றும் இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகைக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வழங்கி இருந்த பேட்டி ஒன்றில் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய சவேந்திர டீ சிலவா தலைமையிலான படைப் பிரிவினரால் கொல்லப்பட்டனர் என்று கோடிகாட்டி இருந்தார் என்றும் வொசிங்ரன் ரைம்ஸில் கூறப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள் உட்பட பொது இடங்கள் மீது இவர்கள் எறிகணை வீச்சுக்களை நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்து உள்ளார் சவேந்திர டீ சில்வா என்றும் இந்நிலையில் சர்வதேச நெருக்கடிகள் குழு ஒன்கிற அரச சார்பற்ற சர்வதேச அமைப்பின் இலங்கை விவகாரங்களுக்கான பணிப்பாளர் Alan Keenan ஐ.நாவுக்கான பிரதிநிதியாக சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றமை இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஒரு இடையூறாகவே இருக்கும் என்று கூறி உள்ளார் என்றும் தொடர்கின்றது இப்பத்தி.

Washington Times article on Shavendra Silva
http://www.tamilnet.com/img/publish/2010/12/WTShavendraS.pdf

TAG's press release on SLA Commander's testimony
http://www.tamilnet.com/img/publish/2010/06/TAGPressRelease1.3.pdf

NYPost Article on Gen. Silva
http://www.tamilnet.com/img/publish/2010/12/NY_Posrt_article_on_Shavendra_Silva.pdf

மறுஆய்வு

Prosecuting War Criminals: A Reality Check

Prasanna De Silva in action 
We all know about the fact that the both parties to the conflict, Sri Lankan armed forces and the LTTE combatants, committed war crimes and crimes against humanity, during the last stages of the war –and the leaked US embassy cable simply confirms this well known truth.
Therefore the issue here is that making a big noise will not automatically create any prosecution of individual level allegations against any SLA officers based on the Universal Jurisdiction principle. Here we are not talking about the UN panel or potential ICC /ICJ investigations, because that kind of prosecution will essentially be a state or UN Security Council led procedure.
Here we are discussing about this much hyped issue of getting arrest warrants against visiting SLA officers in one of the European or North American courts, based on the Universal Jurisdiction principle. We heard much about the drama surrounding the Maj.General Chagi Gallage affair with contradicting statements from the people involved in this legal matter mainly BTF, GTF and some Tamil lawyers.
Gallage Fiasco
In this case, diaspora Tamil organisations did not have any compelling evidence to convince a British judge to issue an arrest warrant, apparently many solicitors and barristers declined to get involved in this case because of lack of proper evidence to prove Gallage’s command-responsibility. Still they pretend that they could have managed to get an arrest warrant against Gallage, had he been in the UK at the time of court proceedings, that’s a BIG LIE. They proceeded with going to court just for the sake of pleasing the diaspora Tamil community.

The Common Sense wants to highlight few issues in this matter.
  1. This kind of legal matter is very complex and needs highly competent legal expertise.
  2. Hence it will be very expensive thing to do, especially if it is just to make the community happy., a complete waste of money.
  3. Evidence collection needs perseverance and meticulous work; DBS Jeyaraj’s article won’t be enough. (On the other hand he has removed that particular article form his website)
  4. Effectively this kind of work demands, continuous flow of money and permanent office to work on this matter.
The problem is, Tamil diaspora organisations are struggling with lack of funding to do the projects in this scale and their leaders are mediocre stooges, being manipulated by the ‘Anaiththulaha Cheyalaham’ (LTTE International Secretariat), they have no creativity or acumen to do these kind of activities.
The Common Sense would like to challenge these people by taking the issue of Major General Prasanna De Silva, present Defence Attaché at the Sri Lankan High Commission in the United Kingdom. He has been here for several months. What have they done to arrest him?
Someone can say that he holds the diplomatic immunity, the irony is we saw that Preseident Mahinda Rajapakse, the head of state, had to think twice to visit UK, that means the issue of Universal Jurisdiction and the immunity – either diplomatic or sovereign – against a possible prosecution in the UK, is highly fluid and there is no rigid interpretations. So these self-appointed war crimes prosecutors should have at least tried to get an arrest warrant against Prasanna De Silva. That’s where the problem lies, because these organisations have not done any proper work to collect evidence to get an arrest warrant.
Otherwise how they are going to explain the fact this person Prasanna De Silva is here in London for several months and they have not done any thing on his matter but making a big noise about an army officer who stayed in the UK for less than a week.
Recently Prasanna De Silva inaugurated the Sri Lanka Ex-Service Persons Association, UK at a public event. That shows, he has rightly evaluated the competency of these Tamil organisations and he is not bothered about any potential arrest warrant is being issued against him.
The Common Sense’s only request to these organisations is that don’t do things just to please the community and don’t pamper them and lecture them on the matters of genocide and war crimes, while you guys have no idea of what you all are dealing with. Please tell the truth to our naïve people that these things are not easily done.
This kind of projects need money and man power that can be achieved only by mass participation at organisation level. That implies diaspora Tamil organisations need to embrace transparency and accountability in their functioning in order to attract public particpation. Please don’t make a joke that, you guys managed to conduct a successful protest campaign against Mahinda during his recent visit to London. The people braved the sub-zero temperature to venture out to demonstrate against Mahinda not because of the competency of these organisations but to express their anger and frustration caused by the inhumane treatment of our brethren in homeland by the Mahinda regime.
http://www.anapayan.com/

திங்கள், 6 டிசம்பர், 2010

Dec 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி /

போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான படுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.
59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி கேணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.
சிறப்பு படையின் கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா, றோமியோ கொம்பனியை சேர்ந்த கப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கொம்பனியை சேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கொம்பனியை சேர்ந்த கப்டன் லசந்தா ரட்னசேகரா.
மேற்கூறப்பட்டவற்றில் கோல்ஃப் மற்றும் றோமியோ கொம்பனிகள் 1 ஆவது சிறப்பு படை பற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோ மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவது சிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.
டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:
மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா -55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா -58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா-53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
கேணல் ரவிப்பிரியா -எட்டாவது நடவடிக்கை படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சாகி கலகே – 59 ஆவது படையணி கட்டளை அதிகாரி.
மேஜர் ஜெனரல் சந்திரசிறீ – முன்னாள் யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி – பெருமளவான தமிழ் மக்களை கடத்தி படுகொலை செய்ததில் பங்கு உண்டு.
அரச தரப்பில போரியல் குற்ற்களை மேற்கொண்டவர்கள்:
அரச தலைவர் மகிந்த ராஜபக்சா
அரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்கா
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா
சிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சா
வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா


அரச படையினரிடம் பிடிபட்டு கட்டப்பட்ட நிலையில் காணொளி ஒன்றில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பெண் உறுப்பினர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.


இவரது சொந்தப் பெயர் உசாந்தினி. இயக்கப் பெயர் மதுநிலா, அல்லது மது. மன்னார் மாவட்டத்தின் ஆலம்குடா பிரதேசத்தில் வைத்து இராணுவத்தால் பிடிக்கப்பட்டார்.

இயக்கத்தில் இவருக்கு உரிய தகடு இலக்கம் 1023. இவர் யாழ். பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர்.