23 ஆண்டு
தியாகி லேப்.கேணல் .திலீபன்
1987/10/15-1987/10/26 வரை
உண்ணா நோன்பு இருந்து தான் நேசித்த மக்களுக்காக தியாகச்சாவடைந்தவருக்காக அவரது வாசகங்கள்
"விடுதலைப்புலிகள் வாழவேண்டுமென்றோ ஆழவேண்டுமென்றோ ஆசைகொண்டவர்கள் அல்ல ,எமது மக்களுக்கு சுகந்திரமான சுபிட்சமான
நாடு கிடைக்குமானால் நாம் அனைவரும் சாகத்தயாரக உள்ளோம் ."
திலீபன்
பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987;ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்டலெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம்
உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம்
உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய
அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய
இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை
முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு
செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு
லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக
இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
[தொகு]ஐந்து அம்சக் கோரிக்கை - மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும்புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
[தொகு]
திலீபன்
பார்த்திபன் இராசையாஅமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் பிறப்பு நவம்பர் 27, 1963 பிறந்த இடம் ஊரெழு,யாழ்ப்பாணம், இலங்கை நோன்பு ஆரம்பம் செப்டம்பர் 15, 1987 இறப்பு செப்டெம்பர் 26,1987
(அகவை 23)நோன்பிருந்த நாட்கள் 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக