ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

pathivu vantha news

Aug 1, 2010 / பகுதி: முக்கியச் செய்தி /

தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கூறி பல குழுக்களின் அறிக்கைகள் வெளிவருகின்றன. அண்மையில் சங்கதி, பதிவு இணையத்தளங்கள் உட்பட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் எதுவித உண்மைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம், என விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...
அன்பிற்குரிய புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே!
ஊடகங்கள் தொடர்பான விளக்கம்
பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கொடூர கரங்களினால் எம் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் அதிகம். காலகாலமாக வாழ்ந்து வந்த மண்ணில் இருந்து எம் மக்களை வேரறுத்து அழித்துவிடத் துடிக்கின்றது சிங்கள பேரினவாதம். தமிழீழத்தில் ஆழக்கால் பதித்து இருக்கும் சிங்களம் தனது திட்டத்தை ஆயுதமுனையில் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களில் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பலத்த முயற்சிகளை திரைமறைவில் எடுத்து வருகின்றன.
புலம்பெயர் தமிழ் மக்களை குழப்பி அதில் தனது இலக்கை அடைந்துவிடத் துடிக்கின்றது. அந்த வகையில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தேசிய ஊடகங்களை சிறீலங்கா குறிவைத்து செயற்படுகின்றது. முள்ளிவாய்க்கால் போரின் போது உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததும் இந்த ஊடகங்களே. சிறீலங்கா புலம்பெயர் மக்களை தம்வசப்படுத்த முதலில் தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய வேண்டும். எனவே தான், தேவையற்ற பிரச்சாரங்களை அவ் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இந்த விசமப்பிரச்சாரங்களில் எதுவித உண்மைகளும் இல்லை.
இந்த வகையில் சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களும் பத்திரிகைகளும் ஏனைய தேசியம் சார்பான ஊடகங்களும் வழமை போலவே தேசியத்தின் பக்கம் துணை நிற்பதை எல்லோரும் நன்கறிவார்கள். அண்மையில் சங்கதி இணையத்தின் முகவரியை, முகவரியின் பதிவாளர் தன்னுரிமையாக்கியமையால் மக்கள் குழப்பங்களுக்குள் தள்ளப்பட்டார்கள். இருந்தும் மீளவும் புதுமுகவரியில் சங்கதி (www.sangathie.com) இயங்குகின்றது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். இப்படியான செயற்பாடுகள் நடைபெறும் பட்ச்சத்தில் அவற்றை நாம் அடையாளப்படுத்துவோம்.
சிறீலங்காவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக புலம்பெயர் நாடுகளில் தனிநபர்களும் பல குழுக்களும் ஊடகங்களுக்குள் புகுந்து நாசகார வேலைகளை புரிந்து வருகின்றனர். இச்செயற்பாட்டுக்கு மக்கள் அறிந்தோ அறியாமலோ துணைபோக வேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கூறி பல குழுக்களின் அறிக்கைகள் வெளிவருகின்றன. அண்மையில் சங்கதி, பதிவு இணையத்தளங்கள் உட்பட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் எதுவித உண்மைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே, ஊடகங்களில் பணிபுரியும் பணியாளார்கள் மற்றும் மக்களும் எச்சரிக்கை உணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக