யுத்தம் பற்றி சிங்கள மக்கள் சாட்சியம் | ||||||||||||
இலங்கையில் கடந்தகால போர் தொடர்பில் ஆராய்ந்து மக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்துவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெற்கே காலி மாவட்ட மக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 1970களின் இறுதியில் இலங்கையில் அக்கால அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையும் விடுதலைப் புலிகள் உருவாக காரணம் என பீ.பி ஹெட்டிகே என்ற ஓய்வு பெற்ற சிங்கள அரச ஊழியர் ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார். திறந்த பொருளாதாரம் காரணமாக உள்ளூர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டதும் சந்தை வாய்ப்புகள் இல்லாமல் போனமையும் இளைஞர்கள் விரக்தியடைந்து தீவிரவாதத்தின் பாதையில் செல்ல வழிவகுத்தது என அந்த ஓய்வுபெற்ற அரச ஊழியர் கூறுகின்றார். இதேவேளை, தெற்கில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் வாழும் பல தமிழர்களுக்கு தமது பிள்ளைகளுக்கு தமது அடையாளங்களை மறைத்து சிங்களப் பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பத்தேகம பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ஜயனாத் என்பவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்து தெரிவித்தார். காலி கோட்டைப் பகுதியில் பிரஜைகள் குழுவின் தலைவராக உள்ள ரூபன் என்பவர், ‘எதிர்காலத்தில் இவ்வாறான மோசமான யுத்தமும் வன்முறைகளும் ஏற்படாதவாறு அரசாங்கம் சர்வதேச சட்ட நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், அரசியல்வாதிகள் இனவாதம் பேசிக்கொண்டு அதிகாரத்துக்கு வராதபடி சட்டங்களை அதிகாரிகள் உருவாக்க வேண்டும்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மற்ற சமூகங்களையும் மதத்தவர்களையும் மதிக்கும் சகிப்புத்தன்மை மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் பற்றி சந்திரிக்கா பள்ளியகுரு என்ற சட்டத்தரணி பேசினார். யாழ் நூலக எரிப்பு 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, அரசாங்கத்தின் தேர்தல் அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய போது அங்கு, யாழ் நூலகத்துக்குத் தீவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தான் கண்ட அனுபவங்களை ஆணைக்குழு முன்னிலையில் காலி சமூக அபிவிருத்தி மன்றத்தின் டீ.டப்ளிவ்.சிறிமான்ன உணர்ச்சிவசப்பட்டு விளக்கினார். அன்று விட்ட தவறை இன்றைய ஆட்சியாளர்களும் விடாது நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதே இன்றுள்ள முக்கிய கடமை என்றும் அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினார். இதேவேளை தமது உறவுகள் யுத்தத்தில் உயிரிழந்த போதிலும் அவர்களுக்கான இழப்பீடுகள் இதுவரை உரியமுறை கிடைக்கவில்லையென ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் மற்றும் மனைவிமார் பலரும் முறையிட்டனர். |
"இது ஒரு போர் குற்றங்கள் ,எமது வரலாற்று ஆவணங்கள் சேர்க்கும் ஒரு முயற்சி .முடிந்தவரை எனக்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் இப்போதும், எப்போதும் பொல பிரிந்தே நிற்கும் இந்த நேரத்தில் , இந்த மெல்லிய குரலால் ஒன்றிணைவோம் என உரத்து சொல்லுவோம் . இங்கே தமிழ் உணர்வாளர்கள் ,பேரறிவாளர்கள், தமிழீழ விடுதலை விரும்பிகள் ,விடுதலைப்புலிகளில் இருந்து ஒதுங்கி நின்றும் துரோகிகள் என ஒதுக்கப்பட்டும் ,எமது விடுதலைக்காய் உழைக்க விரும்பும் அனைவரும் இங்கே பதிவினை செயுங்கள் .... இது ஒரு சிறு முயற்சி" . நன்றி
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
nanri BBC
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக