செவ்வாய், 30 நவம்பர், 2010

நன்றி மறு ஆய்வு

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1/2)

ஜோர்ஜ் இ,குருஷ்சேவ் (தாயகம்)
பெருமதிப்புக்குரிய பெரியோர்களுக்கும். பேரன்புக்குரிய நண்பர்களுக்கும். நீதியின் மேல் பசிதாகமுள்ள ஆர்வலர்களுக்கும் தன்னடக்கத்துடன் கூடிய பணிவான வணக்கங்கள்,
மேடைப்பேச்சு என்பது எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று, சிறுவயதில் பேச்சுப்போட்டிகளில் மனனம் செய்து ஒப்புவித்ததைத் தவிர மேடைப் பேச்சு எதிலும் நான் கலந்து கொண்டதில்லை, மேடைப் பேச்சுக்குரிய சிம்மக் குரலும் எனக்கு இல்லை என்பது என் அனுமானம்,
உண்ர்வுகளைக் கிளப்பி. மெய் சிலிர்க்க வைத்து உசுப்பேத்திய உணர்ச்சி கொப்பளித்த மேடைப்பேச்சுக்கள் தான் இன்றைக்கு எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுப் போயிருக்கிறது, இதெல்லாம் தங்கள் மயிர்க் கூச்செறிய வைக்கும் பேச்சுக்களால் எங்களை தடுத்தாட் கொண்ட இந்த அடலேறுகள். தானைத் தளபதிகள். சொல்லின் செல்வர்களின் கைங்கரியம், கரகோசங்களுக்கும் மாலைகளுக்கும் இரத்தத் திலகங்களுக்குமாக நிகழ்த்தப்பட்ட விடுதலைப் பேச்சுக்களும். விசிலடிகளுக்கான வக்கிர நகைச்சுவையுடனான மாவீரர் தின உரைப் பொழிப்புகளும் என பகுத்தறிவை மறக்க வைத்த பேச்சுக்களை நம்பப் போய் கடைசியில்தன்னுடைய கருத்துக்களை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்க முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கி முனையில் எங்கள் பேச்சுரிமையை இழந்து வாய் முடி மௌனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம், இந்த பேச்சுகளால் உந்தப்பட்டு பின்னால் போனதன் விளைபயனை முழுத்தமிழினமும் இன்று அனுபவித்து அதற்கான விலையைச் கொண்டிருக்கிறது,
நண்பர்களின் வற்புறுத்தலைத் தட்ட முடியாததால் மேடையேறச் சம்மதித்திருந்தேன், பேசவேண்டும் என்ற வேண்டுகோளாக இல்லாமல். பேசுகிறீர்கள் என்று உரிமையோடு சொல்லியிருந்தார்கள், எதைப் பேச வேண்;டும் என்ற நிபந்தனையும் இன்றி. எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்ற எல்லையும் இன்றி அழைத்ததால். தோழர் காஸ்ட்ரோவின் மே தின உரை போன்ற நீண்ட உரையொன்றுடன் வந்திருக்கிறேன், இது நிச்சயமாக உண்ர்ச்சியூட்டி புலன் பெயர் தமிழா புறப்படழ என்று போருக்கும் அழைக்கும் உரையாக இருக்காது, வழமையான உரை என்பதை விட. ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கும் கருத்துப் போன்ற அமைப்பில் இந்த உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்,
கருத்துக்கள் பற்றி யாழ்ப்பாண்ம் கொண்டிருந்த மனப்பாங்கு பற்றிக் கூற வேண்டும், ஊரோடு ஒத்தோடுகின்ற எவருக்கும் எங்கள் ச்முகத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை, கும்பலோடு கோவிந்தா போடுவது உயிரைக் காப்பதற்கான ஒரே வழி என்பது பின்நாளில் எல்லோருக்குமே தெரிந்திருந்தது, மாற்றுக் கருத்துக்கள் என்றால் யாழ்ப்பாண்திற்கு ஒவ்வாத விடயம்,,, அலர்ஜி என்று சொல்லலாம்,
கூட்டங்களில் பின்னால் நின்று கேள்வி கேட்கும்; போது. பேசாமல் ஐயா சொல்றதைக் கேளடா என்று அதட்டுவதற்கு அடியாட்கள் எப்போதும் நிறைய உண்டு, மேடையில் நின்று கருத்துச் சொன்னால். பேசாமல் கீழ இறங்கடா என்று பணிவோடு வேண்டுவதற்கும் ஆட்கள் உண்டு, ஆனால் ஒருபோதும். அவனைக் கதைக்கவிடு. அவன் என்ன சொல்றான் எண்டதையும் கேட்பம், என்று கேட்பதற்கு எந்தப் பொதுமகனும் துணிந்ததைக் காணமுடியவில்லை, ஒன்றில் கும்பலோடு கும்பலாக தர்ம அடி விழும் என்ற பயமாக இருக்கலாம், சும்மா ஊரோட ஒத்தோடாமல். உவனுக்கு ஏன் தேவையில்லாத வேலைட பிழைக்கத் தெரியாதவன் என்ற தீர்ப்பளிப்பாக இருக்கலாம், அல்லது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல. சண்டை பார்ப்பதற்கும் வேடிக்கை பார்ப்பதற்கும் ஆர்வமாகவும் கூட இருந்திருக்கலாம்,
யாழ்ப்பாணத்தவர்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் உள்ள நடைமுறைகள் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம், யாழ்ப்பாணத்தவர்கள் மாற்றுக் கருத்துக்களுக்கு கொடுக்கும் மரியாதை பலருக்கும் தெரிந்திருக்கும், சீதனம் வாங்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால். சமுக மாற்றத்தை ஏற்படுத்த துணிந்த ஒருவனின் முயற்சியைப் பாராட்டாமல். உவருக்கு ஏதும் குறையிருக்குது போல என்று வக்கிரப்படுத்தும் பாரம்பரியம் எங்களுடையது,
மேதகு தேசியத் தலைவரின் நல்லாட்சியில் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாற்றுக்கருத்துக்கு மண்டையில் போடுவது தான் தீர்ப்பாக இருந்தது, இந்தப் பாரம்பரியம் புலன் பெயர்ந்த நாடுகளுக்கும் பரவி. தாயகம் தடை. தேடகம் எரிப்பு. செந்தாமரை ஆசிரியர் தாக்குதல் என்று போய் சபாலிங்கம் கொலையில் முடிந்தது,
வெளியில வாடா. பாப்பம் என்றும். ஊருக்கு வா. கவனிக்கிறம் என்று பணிவன்புடன் வேண்டுகிற காடையர் கூட்டம் இங்கே மலிவானது, இப்போது வெளியில வாடா என்றவர்களின் தலைக்கறுப்பை வெளியில் காண‌ முடியவில்லை, ஊருக்கு வந்தால் கவனிப்பதற்கும் ஊரிலும்  யாரும் இல்லாமல் போய் விட்டார்கள்,
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வது என்பது யாழ்ப்பாண்ச் சிந்தனையில் இருப்பதேயில்லை,
இன்றைய உரையிலும் மாற்றுக்கருத்துக்கள் நிறைய இருக்கும், அது சம்பந்தமான கேள்விகளும் எதிர்க்கருத்துக்களும் எழும், இந்தக் கருத்துக்களையும் கேள்விகளையும் நான் வாசித்து முடியும் வரை பொறுமையாக வைத்திருந்தால். முடிந்த பின்னால் பதிலளிக்க முடியும்.
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்?
புலன் பெயர்ந்த நாடுகளில் அரசியல் ஆய்வாளர்கள் மலிந்திருப்பது போல. எங்களுக்கு ஊரில் நிறைய குஞ்சப்புமார் இருந்தார்கள், நெருக்கமான உறவினர்கள் மட்டுமன்றி. எங்கள் தந்தைமார். பேரன்மாரின் வயதில் இருந்த பெரியோர்கள் எல்லாம் மரியாதை கருதி குஞ்சப்பு என்றே அழைக்கப்பட்டார்கள். எங்கள் அண்ண்ன்மார் வயதில் இருந்த இளவட்டங்கள் ஸ்டைலாக குஞ்சி என்று அழைத்துக் கொள்வதுடன். பீடி. வாய்க்குப் போடும் புகையிலை கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட்டிருப்பார்கள், வீட்டிலிருந்து புறப்பட்டால். வழியில் கணணர்pல் படுகின்ற குஞ்சப்புகளுடன் பரஸ்பர குசலம் விசாரிப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது, இவர்கள் சிறுதோட்டக்காரர்களாகவும் தோட்டவேலைக் கூலித்தொழிலாளராகவும் முட்டாள்வேலை. அதாவது மேசன்மாருக்கு உதவியாளர்களாகவும் வேலை செய்து கொண்;டிருந்தார்கள், கல்வியறிவின்மை. வறுமை,,, இத்தோடு குடிப்பழக்கம்,,, இதனால் பொருளாதார ரீதியில் வளம் பெற முடியாமல் ஒரு சுற்றுவட்டத்திற்குள்ளேயே இவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
மாலையானதும் பெரும்பாலும் வெறியில் இருப்பார்கள், அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டைகள் நடக்கும், இல்லாவிட்டால் மனைவிமாருக்குப் போட்டு அடிப்பார்கள், வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் விசயம் தெரியாமல் கை வைக்கப் போய் மகன் மாரிடமும் வாங்கிக் கட்டுவார்கள்.
இவர்களைப் பற்றியெல்லாம் ஊரில் பல்வேறு நகைச்சுவைக் கதைகள் இருக்கும், இன்று கூட. எங்கள் ஊர்க் காரர்கள் சந்தித்துக் கொண்;டால் இந்தக் கதைகளை சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு புகழ் பெற்ற கதைகள் அவை.
ஒரு குஞ்சப்பு ஒருநாள் தோட்டத்துக்குள்ளால் போன ஒரு பெண்ணைப் பார்த்து. ஏரிக்கரை மேலே போறவளே. பெண் மயிலே. என்னருமைக் காதலியே. நில்லு கொஞ்சம் நானும் வாறேன் என்று பாடியிருக்கிறார், தமிழ்ப்படத்துக் கிராமத்தில் வரும் கதாநாயகியாக இருந்தால். பதிலுக்கு புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே. உங்க எண்ணத்தைச் சொல்லி விட்டுப் போங்க என்று பாடியிருப்பார், இது நம்ம ஊர், பெண்; போய் தந்தையிடம் முறையிட்டிருக்கிறார், தந்தையும் தமிழ் படத்து அப்பா மாதிரி அரிவாளைத் தூக்காமல். போய் விதானையாரிடம் முறையிட்டிருக்கிறார், விதானையார் பொலிசாரி;டம் முறையிட்டு. வழக்குப் பதிவாகி விட்டது,
புலிகளின் நீதிமன்றம் அப்போது இருக்கவில்லை, இருந்திருந்தால் தீர்ப்பு குஞ்சப்பு எந்தப் பக்கம் என்பதைப் பொறுத்திருந்திருக்கும், எங்கள் ஊருக்கு அப்போது மின்சாரம் வராததால் மின்கம்பத் தண்டனை ஊருகுள் இருந்திருக்காது, சந்தைக்குப் போகும்போது சுன்னாகத்திலோ. அல்லது தின்னவேலியிலோ அடையாளம் தெரியாமல் சமுக விரோதியாகியிருப்பார், அல்லது பெண்ணின் தந்தை பச்சை மட்டை அடி வாங்கியிருப்பார், நல்ல காலம்.
குஞ்சப்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார், குற்றம் என்ன செய்தேன். கொற்றவனே. குற்றம் என்ன செய்தேன்என்ற பாணியில்,
அரச சட்டத்தரணி கேட்கிறார்,,,
நீ அந்தப் பெண்;ணைப் பார்த்துப் பாட்டுப் பாடியது உண்மையா
ஓம் ஐயா?
எப்பிடிப் பாடினாய்?
குஞ்சப்பு ஏதோ அரசவையில் அம்பிகாபதி என்ற நினைப்பில் நீதிமன்றத்தில் பாடத் தொடங்கினார்,,
ஏரிக்கரை மேலே என்று,,,
இதுவரையும் பேசாமல் பார்த்துக் கொண்;டிருந்த நீதிபதி கையைக் காட்டி நிறுத்தி விட்டுச் சொன்னார்,,,
25 ருபா குடுத்திட்டுப் போ?
பாட்டுப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் இருக்கிறார், பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், எங்கள் குஞ்சப்பு மட்டும் தான் பாட்டுப் பாடி அபராதம் கட்டியவர்,
இதைப் போல இன்னொரு குஞ்சப்பு இருந்தார், இவர் ஒருநாள் மாலை. ஆட்டுக்கு குழை பிடுங்க மரத்தில் ஏறியிருக்கிறார், மாலை நேரம் என்றாலேயே. குஞ்சப்பு மரண வெறியில் நிற்பவர், றோட்டால் நடந்து போகும் போது கூட. கிடுகுவேலியைப் பிடித்துக் கொண்டு கிழுவ மரத்தோடு வாக்குவாதப்பட்டு;க் கொண்;டிருப்பவர், மரத்தில் ஏறியிருக்கிறார், ஏறாதே ஏறாதே என் கணவா என்ற மனைவியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல். தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி மனைவிக்கும் தூசணத்தால் பேச்சுக் கொடுத்து குஞ்சப்பு மரத்தில் ஏறியிருக்கிறார்,
பிறகென்ன குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த மாதிரி. குஞ்சப்பு மரத்திலிருந்து விழுந்து விட்டார், இந்த குறுக்கால போனவனால மனிசர் நிம்மதியா இருக்கேலாது என்று மனைவி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வருகிறார், அருகில் பொதுக்கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வருகிறார்கள், கூக்குரல் கேட்டு நீண்ட தூரங்களில் இருந்தும் ஓடி வருகிறார்கள், ஊரே திரண்டு வந்தது என்பது போல,
நல்ல காலம், தென்னை மரம் என்றால். நேரடியாக வந்து விழுந்து குஞ்சப்பு முடிந்திருப்பார், அல்லது முள்ளந்தண்டு. கை. கால் முறிந்திருக்கும், இது கொப்புள்ள மரம், நேரடியாக விழாமல். கொப்புகளில் எல்லாம் அடிபட்டு உள்காயங்களோடு கீழே விழுந்து கிடக்கிறார், சுற்றி வர நிற்பவர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதா இல்லை. புக்கை கட்ட ஒட்டகப்புலத்துக்கு கொண்டு போவதா  என்று ஓடுபட்டுப் கொண்டிருக்கிறார்கள், பேச்சு மூச்சில்லாமல் கிடந்த குஞ்சப்பு கணணைத் திறந்து பார்க்கிறார்
அடிபட்டு நொந்து எழும்ப முடியாமல் கிடப்பது குஞ்சப்புவிற்கு பிரச்சனை இல்லை, அவருடைய பிரச்சனை கௌரவப் பிரச்சனை, தன்னுடைய பிழையை. குடிவெறியில் மரத்தில் ஏறிய தன்னுடைய மடத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத கௌரவப் பிரச்சனை, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பிரச்சனை, பெரிசுகள் எல்லாம் என்ன மட வேலை பாத்தனீ  என்று தன் முட்டாள்தனத்தை திட்டும் என்ற வெட்கம்,
இந்த அவமானத்தை மூடி மறைத்து. விலாசம் காட்டும் முயற்சியில்,,,கண்ணைத் திறந்து குஞ்சப்பு சொன்னார்,,,,
விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டன்?
குஞ்சப்பு விளையாட்டு என்று சொன்னது. சீனடி. சிலம்படி. கம்பு விளையாட்டுக்கள், குஞ்சப்புவிற்கு அப்படி ஒரு விளையாட்டும் தெரியாது, தன்னுடைய பிழையை மறைக்க. எடுத்து விட்டு கயிறு அது, பின்னால் நாலைந்து மாதமாய் குஞ்சப்பு நெஞ்சில் புக்கை கட்டியபடி அலைந்தார்.
நண்பர்களே.
முப்பது வருடங்களாக மோகமும் மையலும் கொண்டு துரத்தி வந்த ஈழம் என்ற மாயமான். முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்து. கண்ணைத் திறந்து பார்த்தபடியே  கிடக்கிறது, பல்லாயிரக்கண்க்கானவர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கிறார்கள், அதை விட அதிகமானவர்கள் அவயவங்களை இழந்து போயிருக்கிறார்கள், லட்சணக்கானவர்கள் சொந்த வீடுவாசல்களை விட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டு. பொருளாதாரம் இன்று சிதைக்கப்பட்டிருக்கிறது, மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்கிக் கொண்டு வரச் சொன்ன புத்தர் கதை போல இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறான், பொருளாதார ரீதியாகவோ. உறவுகளை இழந்தோ,,,
இதை விட முக்கியமாக. இலங்கை அரசியலில் தமிழர்கள் தலைநிமிர்ந்து தங்கள் உரிமைகளைக் கேட்க முடியாதபடிக்கு புலிகள் நட்டாற்றில் கொண்டு வந்து தலை குனிய விட்டுப் போயிருக்கிறார்கள், அடுத்த நாற்பது வருடங்களுக்கு தமிழர் அரசியல். யூதர்கள் நாற்பது வருட காலம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தது போல. திக்குத்திசை தெரியாமல் போக்கிடம் தெரியாமல் எதிர்காலம் சூனியமாகிய அரசியல் கருந்துளைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால். உண்மை நிலையையும் எங்கள் தவறுகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து. வரட்டுக் கௌரவப் பிரச்சனையாக,,,, குஞ்சப்பு போல,,, விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே.
உலகில் இன்று அடிக்கடி பல்வேறு அழிவுகள் நடைபெறுகின்றன, இயற்கை அழிவுகள்,,, புயல். பூகம்பம். வெள்ளம். ஆழிப்பேரலை, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகள்,,, யுத்தம். தொழில் விபத்துக்கள். சுற்றாடல் அழிவுகள், லட்சக்கணக்கான மக்கள் கண்ணை மூடித் திறக்கும் குறுகிய கால எல்லைக்குள் கொல்லப்படுகிறார்கள், கோடிகணக்கான சொத்துக்கள் அழிகின்றன, லட்சக்கணக்கானோர்கள் அகதிகளாக்கப்பட்டு. நிர்க்கதிக்குள்ளாகிறார்கள்,
ஆனால் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் அந்தந்த இனத்தைச் சேர்ந்த படித்தவர்கள் ஒரு வார்த்தையைப் பாவிப்பார்கள்,
We are resilient people.
நாங்கள் இந்த அழிவிலிருந்து மீண்டும் எழுவோம், அழிந்தும் அழிய மறுக்கும் தங்கள் மன உறுதியை வெளிப்படுத்துகின்ற வார்த்தை அது,
இந்த வாரம் பர்மாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்டது பற்றி ரொறன்ரோ ஸ்டாரில் வந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்,,, resilient leader
சிறையில் இருந்தாலும் தன் மன உறுதியைத் தளர விடாமல் உற்சாகமாக இராணுவ அரசுக்கு எதிராக செயற்படுகின்ற தலைவர்,
எங்களுடைய ஆய்வாளர்களும் எழுதுகிறார்கள், பீனிக்ஸ் போல மீண்டும் உயிர்ப்போம், இந்த ஆய்வாளர்களுக்கு பீனிக்ஸ் என்பது ஒரு கற்பனைப் பறவை என்பது தெரியுமோ தெரியாது.
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என. நாங்களும் அழிய மாட்டோம் என்றுதானே இவர்கள் சொல்வதாக சிலர் வக்காலத்து வாங்கக் கூடும்.
அழிவினால் மனம் சோர்ந்து விடாமல். தன்னம்பிக்கையைக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் resilence என்ற பதத்திற்கும். மேதாவித்தனத்தைக் காட்டி பேய்க்காட்டுகின்ற பீனிக்ஸ் என்ற பதத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
முதலாவது அவர்கள் எல்லாம் நாங்கள் இயற்கையிடமோ. இந்தக் காரணிகளிடமோ தோற்று விட்டோம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அந்த அழிவிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப எங்களுக்கு மனவலிமை இருக்கிறது என்று மனம் தளராமல் உற்சாகப்படுத்துகிறார்கள், என்னுடைய எலும்புகளை உடைக்கலாம். ஆனால் என் மன உறுதியை உன்னால் உடைக்க முடியாது என்று இயற்கைக்கும் எதிரிகளுக்கும் சவால் விடுகிறார்கள், ஆனால் நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வது வெட்கக்கேடு என்பது போல. குஞ்சப்பு போல. விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இரண்டாவது. இந்த பீனிக்ஸ் ஆய்வாளர்கள் சொல்வது எங்கள் தமிழ் மக்களை இல்லை, மீண்டும் எழுவோம் என்று இவர்கள் சொல்வது புலிகளை, 12 ஆயிரம் பேரோடு தலைவர் காட்டுக்குள் தயாராக இருக்கிறார். திருப்பி வந்து மணியா வேலையைக் கொடுக்கப் போகிறார் என்ற கணமூடி விசுவாசத்தில்?
சுவாமி நித்தியானந்தா போலத் தான் புலி ஆதரவாளர்களும், நித்தியானந்தாவின் காமசாஸ்திர வீடியோ வெளிவருகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது நான் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தேன், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
தலைவர் கொல்லப்பட்ட போது. வீடியோக்கள். படங்கள் உலகமெல்லாம் சுற்றி வருகிறது, புலி ஆதரவாளர்களுக்கு அதெல்லாம் தெரியாது, காரணம் அவர்களும் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தார்கள்.
சமீபத்தில் ஒரு ஆய்வாளர் எழுதுகிறார்,,, ஜப்பானியர்களும் யூதர்களும் போல. யாழ்ப்பார்த்தவர்களுக்கும் பெயர் ஜெ என்ற எழுத்தில் தொடங்குகிறதாம், அதனால் நாங்களும் அவர்களைப் போல சாதனை படைப்போம் என்பது தான் அவருடைய ஆய்வின் சாராம்சம், இதை வாசித்ததும் எனக்கு எரிச்சல் வந்தது, பரதேசி. ஜெகோவாவின் சாட்சிகளும் ஜெ என்ற எழுத்தில் தானே தொடங்குகிறது,
யாழ்ப்பாணத்தவர்களை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் jaffna manஎன்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் இந்த ஆய்வாளர் புதிதாக jaffniite என்ற அகராதியில் இல்லாத சொல்லைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகிறார், ஷியா முஸ்லிம்களை shiites என்பது போல.
கார் வாங்கினால் கொண்டா. ரொயோட்டா. டி,வி வாங்கினால் சோனி மட்டுமே வாங்குபவர்களுக்கு ஜப்பானியர்களோடு தங்களை ஒப்பிடுவதில் குஷி ஏற்படுவதில் சந்தேகம் இல்லை.
கேட்டால். எல்லாரும் வாங்கினம். அப்பிடி எண்டால் நல்லதாத் தானே இருக்க வேணும். Consumer Reports  சஞ்சிகை இந்த வருடம் சம்சுங்கை சிறந்த தொலைக்காட்சியாக தெரிவு செய்திருக்கே.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, எல்லாரும் வாங்கிறதை வாங்கினால் பிரச்சனையில்லை, எல்லாருக்கும் நடக்கிறது தானே எங்களுக்கும் நடக்கும்.
ஊரோடு ஒத்தோடு, வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையுமே வராது,
ஆனால். தங்களுக்கு கிட்லரால் இழைக்கப்பட்ட இனஅழிப்பு அநீதியை வைத்து தங்களை பாதிக்கப்பட்டவர்களாக இன்றைக்கும் காட்டிக் கொண்டு. பாலஸ்தீனியர்களை அடக்குகின்ற யூதர்களோடு அடக்கப்பட்டு பாதிக்கப்படும் இனமான தங்களை எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று நீங்கள் தலையைச் சொறியக் கூடும், இங்கே ஊடகங்கள். வர்த்தகங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து இங்குள்ள அரசுகள் இஸ்ரேல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் யூதர்களின் திறமை தங்களுக்கும் இருக்கிறது என்று இவர்கள் காணும் கனவின் எதிரொலி தான் இது,
தற்கொலைப் போராளிகள் என்பதை புலிகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்தது ஜப்பான், சக்கரவர்த்திக்காக உயிரைக் கொடுப்பதும். தோல்வியடைந்தால் வயிற்றைக் கத்தியால் கிழித்துக் கொள்வதும் வீரம் என உயிர் ஜப்பானுக்கு. உடல் மண்ணுக்கு என்ற சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்ட மாவீரர்களை நிறையக் கொண்டிருந்தது ஜப்பான், அமெரிக்க போர்க் கப்பல்களை விமானத் தற்கொலைப் போராளிகள் நிர்மூலமாக்கிய நிலை, கடவுளின் அவதாரமாக. சூரிய தேவனாகத் தன்னைக் காட்டிய சக்கரவர்த்தி கடைசி நேரத்தில் மக்களை தற்கொலை செய்யுமாறும். அவ்வாறு செய்பவர்களுக்கு வீரசுவர்க்கத்தில் யுத்தத்தில் போரிட்டு இறந்தவர்களுடன். மாவீரர்களுடன். சமமான இடம் கிடைக்கும் என்று அறிவித்ததை நம்பி பத்தாயிரம பேர் வரை தற்கொலை செய்திருந்தார்கள், இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டு. ஜப்பான் மண்டியிட வைக்கப்படுகிறது, யுத்தமுடிவில் ஜப்பானிய சக்கரவர்த்தி சரணடைகிறார்.
தங்கள் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மதித்த சக்கரவர்த்தி அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லாமல் வெறும் சம்பிரதாயச் சின்னமாக நடமாடும் அளவுக்கு ஜப்பான் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தது, மன்னிப்புக் கேட்க வந்த சக்கரவர்த்தியை ஜெனரல் மக்ஆதர் சந்திக்க மறுத்து அவமானப்படுத்துகிறார்,
ஆனால். தங்களுடைய புராதன சிந்தனை தங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்து. தங்கள் எதிரியுடனேயே சமரசம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுகிறார்கள், 90கள் வரைக்கும் அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருந்தது ஜப்பான், அதாவது தங்கள் அழிவை ஏற்றுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற பாதையை வகுக்கிறார்கள்.
வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி. அன்னியனே வெளியேறு என்று ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடங்க அவர்களுக்குத் தெரியாதா அவர்களுக்கு என்ன நாட்டுப் பற்றுத் தான் இல்லையா எங்களை விட நாட்டுப் பற்று அதிகமானவர்கள் ஜப்பானியர்கள்.வெறும் கனவுகளில் தொடர்ந்தும் வாழாமல். மாவீர உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு. தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றிய ஜப்பானியர்களுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது
யூதர்களை எடுத்துக் கொள்வோம், கிட்லரின் நாசிகளின் இன அழிப்பில் அழிக்கப்பட்டாலும். இன்று மேற்கு நாடெங்கும் பரவி. பொருளாதார ரீதியாக வளர்ந்து. அரசியல் ரீதியான அழுத்தங்கள் மூலமாக தங்களுக்கு என ஒரு நாட்டை அமைத்திருக்கிறார்கள். இன்று அந்த நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க. மேற்கு நாட்டு அரசுகளின் ஆதரவைப் பெற அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரண்த்திற்கு ஜெரி ஸ்வாட்ஸ் என்ற கனடிய தொழிலதிபர் ஒனெக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், இவரது மனைவி தான் இன்டிகோ புத்தக விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர், இவர்கள் இருவரும் கனடிய லிபரல்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறது என்பதற்காக தங்கள் ஆதரவை மாற்றிக் கொண்டு கன்சர்வேட்டிவ் அரசுக்கு ஆதரவு கொடுத்து அதற்கு நிதி சேகரிக்க உதவி செய்து அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள். இதுவரையும் எந்தக் கனடிய அரசும் வழங்காத ஆதரவை தற்போதைய கனடிய அரசு இஸ்ரேலுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெளியில் தெரியாமல் நடத்தப்படுகிறது,
இந்த யூதர்கள் எல்லாம் ரொறன்ரோவில் என்ன மாபெரும் போரையா நடத்துகிறார்கள் இல்லை. சாலை மறியல் செய்கிறார்களா இங்குள்ள அரசியல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை கற்றுக் கொண்டு  காதும் காதும் வைத்தது போல வெளியில் தெரியாமல் அதற்குரிய முறைகளில் தங்கள் விருப்பங்களைச் சாதிக்கிறார்கள்.
இவர்களுக்கும் தெருவில் நின்று கூச்சல் போட்டு. எங்களிடம் இரண்டு லட்சம் வாக்குகள் இருக்கின்றன என்று மிரட்டும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கடவுள் தங்களுக்கு வாக்களித்த பூமி என்று நம்பி. மேற்கு நாடுகளில் வசதியான வாழ்க்கையையும் கைவிட்டு. பாலைவனத்தில் அடிப்படை வசதிகளோடு மட்டும் தங்கள் நாட்டைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு வாழும் யூதர்களுக்கும். எப்படியாவது வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற கனவோடு திரியும் தமிழர்களுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது.
அவர்களுக்கு மூளை இருக்கிறது; எங்களுக்கு வாய் இருக்கிறது; இது தான் வித்தியாசம்.
ஆனால் இவர்களை விட ஜெகோவாவின் சாட்சிகளுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது, அதிகாலையில் குளிரில் ஆளுக்காள் வேலைக்கு ஓடிக் கொண்டிருப்போம், சப்வே வாசலில் இரண்டு சஞ்சிகைகளைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டு பேர் நிற்பார்கள். கவனயீர்ப்பு கேட்டு கடைசி வரைக்கும் அமெரிக்க தூதுவரகத்தின் முன் கொடி பிடித்துக் கொண்டிருந்த தமிழர்கள் மாதிரி.
காவல் கோபுரம்? தேசியத் தலைவர் பிரபாகரன் எங்கள் காவல் கோபுரம்.
விழித்தெழு? புலிகளை அங்கீகரி.
முடிவு நெருங்கி விட்டது? மனம் திரும்புங்கள்?
யாழ்ப்பாணத்தவர்களுக்கு முடிவு ஏற்கனவே வந்து விட்டாலும் இன்னமும் மனம் திரும்பும் எண்ணம் கிடையாது,
இப்படியாக எவனுமே கவனிக்காமல் தன் பாட்டில் போய்க் கொண்டிருந்தாலும் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது, இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
மத நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கும் இவர்களுக்கும் புலிகளின் மிரட்டலுக்குப் பயந்து வருமானத்தைக் கொடுக்கும் தமிழர்களுக்கும் தான் ஒற்றுமை அதிகம்,
இப்படி ஒரு கனவில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இன்னமும் எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை,
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், பெரியம்மாவின் மகன், இவனுடைய சகோதரியின் மகளை கடைசிக்கட்டத்தில் தப்பி வரும் போது புலிகள் சுட்டுக் கொன்றது பற்றி தாயகத்தில் எழுதியிருக்கிறேன், இந்த அண்ணன் சுவையான கதைகள் சொல்வான், அதில் ஒன்று இது,
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதும் தொண்டமான் ஒரு சிங்களக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வார், அவர் சேர்ந்ததால் தான் அந்தக் கட்சி வென்றதா இல்லை வெல்லப் போகும் கட்சியுடன் தான் அவர் கூட்டு வைத்துக் கொள்வாரா என்பது தெரியாது, ஒன்று மட்டும் நிச்சயம் தோல்வியடைந்த கட்சி மலையத்தமிழர்களுக்கு அடிக்கும், கலவரம் வெடிக்கும், தோட்ட லயன்கள்,,, வீடுகள் எரிக்கப்படும், மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள்,
அகதிகளாக்கப்பட்டவர்கள் எங்கே போவார்கள் வடக்கில் சூரியன் உதித்தால் மலையகத்தில் சேவல் கூவும், எனவே தங்கள் தமிழ்ச் சகோதரர்கள் தங்களுக்கு தஞ்சம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் புகையிரதத்தில் ஏறி. வந்தாரை வாழ வைக்கும் யாழ்ப்பாணத்திற்கு வருவார்கள்,,, அவர்கள் என்ன யாழ்ப்பாணத்தவர்களா தலை மாற்றி ஜெர்மன் கனடா போக ஆனால் யாழ்ப்பாணத்திற்கு விசா கிடைக்காது, எனவே கிளிநொச்சியில் இறங்கி விடுவார்கள், போவதற்கு இடம் இல்லை, என்ன செய்வது என்பதும் தெரியாது, புகையிரத நிலையத்தில் வாழ்க்கை ஆரம்பமாகும், அருகில் உள்ள மரங்களில் கட்டப்பட்ட ஏணைகளில் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருப்பார்கள், கொண்டு வந்த சட்டி பானைகளுடன் ஓரமாய் சமையல் நடக்கும்,
அப்போது. வீட்டுத் தலைவர்கள் சுவரில் சாய்ந்து கொண்டு தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்களாம்,,,
மச்சான். நாம இப்ப என்னா பண்ணிறமுன்னா,,, முதல்ல ஒரு பாதையை அமைச்சிக்கிறம், அங்க வெளியில ஒரு கொட்டிலை கட்டிக்கிறம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் காட்டை வெட்டிறம், அதுக்கு அப்புறமாக நிலத்தைக் கொத்திறம், பிறகென்ன,,, நூறு கண்டுக்கு மொளவாய்க்கண்டு. நூறு கண்டுக்கு கத்தரி,, இன்னொரு நூறு கண்டுக்கு தக்காளி,,, நட்டுக்க வேண்டியது தான், நம்ம பெண்டாட்டி. புள்ளைங்களுக்கு என்ன வேலை,, அவங்க தண்ணியைப் பாய்ச்சி. பராமரிச்சிட்டுருப்பாங்க, நாங்க பீடியை அடிச்சிக்கிட்டு வரம்பு வழிய நடந்து கங்காணி வேலை பாத்துக்க வேண்டியது தான்,
அகதிகள், போக்கிடம் இல்லை, தங்கள் கனவு சாத்தியமானதா என்ற விபரமும் கிடையாது, நம்ம யாழ்ப்பாணி விதானைமார். டி,ஆர்,ஓ விடுவார்களா அனுமதி இல்லாமல் காட்டை வெட்டினால். சட்டவிரோதமாய் காட்டு மரம் தறித்ததற்காக பொலிசைக் கூப்பிட்டு உள்ளே தள்ள மாட்டார்களா
இதைப் போலத் தான் நாங்களும், இவ்வளவு மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது, அரசியல் எதிர்காலம் எந்த நம்பிக்கையும் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது,
நாங்கள் இங்கே இருந்து கொண்டு,,,
நூறு கண்டுக்கு,,, நாடு கடந்த தமிழீழம், நூறு கண்டுக்கு மக்களவை, நூறு கண்டுக்கு Global
Tamil Forum,  இன்னொரு நூறு கண்டுக்கு யுத்தக் குற்ற விசாரணை என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை, வெறும் கற்பனையில் எங்களை நாங்களே குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.அதாவது சுய இன்பம் கண்டு கொண்டிருக்கிறோம்.
எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது என்பார்கள், கூடை விழுந்தால் எல்லா முட்டைகளும் நொருங்கி விடும், எங்கள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் புலிகள் என்ற கூடைக்குள் வைத்ததால் தான் எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் கண்ப் பொழுதில் தகர்ந்து போனது.
நாங்கள் அடித்த திமிர்க்கூத்திற்கு நடந்த முடிவைக் கண்டு வெட்கப்பட்டு. அவமானம் தாள முடியாமல் எங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நியாயங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.
புலிகள் இல்லாட்டி சிங்களவன் தமிழனை அழிச்சுப் போடுவான் என்ற நாங்கள். தமிழர்கள் இன்று தங்கள் பாட்டில் வாழ்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் கொதித்துக் கொண்டிருக்கிறோம்,
புலிகள் தனியான அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் தீர்க்கதரிசி, புலிகள் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்கள்,,, சரணடைய மாட்டார்கள்.
இப்படியாக மார்தட்டிக் கொண்டிருந்த நாங்கள் தலைவர் போரில் விழுப்புண் பட்டு வீரமரணமடைந்தார் என்று மார் தட்ட முடியாமல் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறோம். தலைவர் சரண்டைந்து அவமானப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பதையும் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரண்டைந்தார்கள் என்பதையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இன்றைக்கு பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறோம்,
காரண்ம் என்ன எங்களுடைய யாழ்ப்பாண மனோபாவம் தான்.
உங்களுக்குத் தெரியும், உயர்தர வகுப்புப் படித்த பின்னால் வேலை தேடும் வரைக்கும் யாழ்ப்பாணப் பெருமகன் வீட்டில் இருப்பார், பொழுதுபோகாமல் நண்பர்களோடு ஊர் சுற்றப் போவார். சுற்றிப் போட்டு வருபவருக்கு வீட்டில் அர்ச்சனை நடக்கும், கண்ட கண்ட காவாலியளோடு சுத்துறான், அதாவது தன்னுடைய மகன் ஒரு அப்பாவி, மற்றவர்களுடைய பிள்ளைகள் தன் பிள்ளையைக் கெடுக்கிறார்கள் என்பது தான் இந்த தாயின் முடிவு, அப்படியானால். அந்த கண்ட கண்ட காவாலிகளின் தாய்மார் என்ன சொல்வார்கள்? அந்த படிக்கிற கெட்டிக்காரப் பெடியனை ஏன்டா கெடுக்கிறாய் என்றா சொல்வார்கள் இல்லை, கண்ட கண்ட காவாலிகளோட சுத்திறான் என்பது தான் அவர்களின் அர்ச்சனையாக இருக்கும், எல்லாருமே தங்கள் பிள்ளைகள் ஒண்ணும் தெரியாத பாப்பா. மற்றவர்கள் தான் தங்கள் பிள்ளைகளைக் கெடுக்கிறார்கள் என்ற தீர்மானமான முடிவோடு இருப்பார்கள்,
சுத்தித் திரிகின்ற தம்பிக்கு காதல் வரும், ஒரு தலைக்காதல் வயதுக் கோளாறால் இருதலைக்காதல் ஆக கூர்ப்படையும், வயதான இருவர்களுக்கு காதல் வந்து விட்டது. பெரியோர்கள் ஒன்று கலந்து பேசி திருமாணமா முடித்து வைக்கப் போகிறார்களா வழமை போல. யாழ்ப்பாணத்தார் லாப நட்டக் கணக்கு பார்ப்பார்கள், பெணணின் அம்மா திட்டுவா,,, ஐயோ. என்ரை பிள்ளையை ஏமாத்திப் போட்டான், தம்பியின் அம்மா திட்டுவா,,, என்ரை பிள்ளையை மயக்கிப் போட்டாள்,
இது நாங்கள் எங்கும் பார்க்கிற வழமையான விடயம், யாருமே தங்கள் தரப்பில் தவறு இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை,
புலிகள் என்பவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் செல்லம் கொடுத்துக் கெடுத்த. தறுதலைப் பிள்ளை, மற்ற இயக்கங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள், இதனால் தான் தங்கள் பிள்ளைகளின் தவறைக் கண்டும் காணாமல் பெருமை பேசித் திரிந்ததுடன். மாற்றாந்தாய் பிள்ளைகளை கேவலமாக நடத்தினார்கள், அவர்களையும் தங்கள் பிள்ளைகளாக இவர்கள் கணக்கெடுத்ததேயில்லை, மாற்று இயக்கங்களில் இருந்து வந்த நண்பர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்,
எனவே இந்த அழிவு வந்ததும் நாங்கள் செய்த முதல் வேலை என்ன யாரில் பழியைப் போடலாம் என்று ஆள் தேடிக் கொண்டிருக்கிறோம்,
ஐ,நா. பான் கி மூன். நோர்வே. எரிக் சொல்கெய்ம். அமெரிக்கா. ஒபாமா. இந்தியா. சோனியா. கருணாநிதி,,,, டக்ளஸ். கருணா,,, கே,பி, பிராந்திய அரசியலில் மட்டுமல்ல. சர்வதேச அரசியலிலும் சம்பந்தப்பட்ட எல்லாரையுமே நாங்கள் துரோகி என்றிருக்கிறோம், நல்ல காலம் புலிகள் மக்களை வெளியேற அனுமதித்து பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும் என்று தலாய் லாமா சொல்லியிருந்தால் அவரையும் எளிய பிக்கு. சிங்கள பௌத்தனுக்கு சைட் பண்ணுறான் என்று நாங்கள் திட்டியிருப்போம்.
ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியாரோஸ்டாமி Taste of cherry  ஒரு படத்தை இயக்கியிருந்தார், சங்கரும் எந்திரனும் மாதிரி உலக அளவுக்கு பெரும் புகழ் பெறவில்லை. இந்தப் படம் பிரான்சின் கான் பட விழாவில் தங்க இலை விருது பெற்றது, அதில் ஒரு வர்த்தகர் தற்கொலை செய்ய விரும்புகிறார், இதற்காக ஒரு புதை குழியையும் வெட்டி விட்டு. தற்கொலை செய்த தன் உடலைப் புதைப்பதற்கு ஆள் தேடித் திரிகிறார். இப்படி ஒரு வயதானவரைச் சந்தித்து அவரைக் காரில் ஏற்றிக் கொண்டு தன்னுடைய திட்டத்தை விளக்கும் திட்டத்தில் கூட்டிக் கொண்டு போகிறார், அப்போது அந்த வயதானவர் ஒரு ஜோக் ஒன்று சொல்வார்.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் இன்னொரு இனத்தவரை முட்டாள்கள் என்று மட்டம் தட்டி கேலிக் கதைகள் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும், கனடாவில் நியுபவுண்ட்லாந்துக் காரரைக் கிண்டல் அடிப்பார்கள், இங்கிலாந்தில் ஸ்கொட்டிஸ்காரரைக் கேலி செய்வார்கள், இந்தியாவில் சீக்கியர்களைக் கிண்டல் செய்வார்கள், வழமை போல. அதிபுத்திசாலிகளான தமிழர்கள் தங்களைத் தவிர எல்லாரையும் முட்டாள்கள் என்பார்கள், இந்த பட்டியலில் மோட்டுச்சிங்களவர்கள். மலையகத்தினர். முஸ்லிம்கள் மட்டுமன்றி. ஏழாலையார். தீவார்கள் என நிறையப் பேர் இருப்பார்கள், இதே போல. அரேபிய நாடுகளிலும் துருக்கியர் பற்றி கிண்டல் கதைகள் உள்ளன, அரேபிய நாடுகளை துருக்கியரின் ஒட்டோமான் சாம்ராஜ்யம் அடக்கி வைத்திருந்ததால் வந்த கோபமாகக்கூட இருக்கலாம்,
இந்தப்படத்தில் அந்த வயதானவர் சொல்லுகின்ற கதை இது தான்,
ஒரு துருக்கியர் டொக்டரிடம் போனராம், போய் சொன்னாராம்,,, டாக்டர். எனக்கு மூக்கைத் தொட்டால் நோகிறது, வயிற்றைத் தொட்டால் நோகிறது, முழங்காலைத் தொட்டால் நோகிறது, முதுகைத் தொட்டால் நோகிறது, உடம்பில் எங்கே தொட்டாலும் நோகிறது,
டாக்டர் பரிசோதித்து விட்டுச் சொன்னராம்,,, உனக்கு ஒரு இடமும் நோவில்லை, உன் சுட்டுவிரலில் தான் நோ இருக்கிறது என்று,
நாங்கள் உலகத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் துரோகமிழைத்து விட்டார்கள் என்று பெரும் பட்டியலே போடுகிறோம், யசூகி அகாசியை மட்டுமல்ல. அசினையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால். எங்களில் தவறு இருக்கும் என்ற உண்மையை நாங்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை, யார் மீதாவது பழியைப் போட்டு. அவர்கள் துரோகம் இழைக்காவிட்டால் எங்களுக்கு ஈழம் கிடைத்திருக்கும் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்கா. நோர்வே. ஐரோப்பிய சமுகம். இந்தியா. ஜப்பான். சீனா என்ற நாடுகளும் பான் கி முன் தொடக்கம் சொல்கெய்ம் வரைக்கும் துரோகம் இழைக்காவிட்டால் தலைவர் தமிழீழத்தைப் பெற்றிருப்பார் என்று எங்கட பிள்ளையைக் கண்ட கண்ட காவாலிகளும் கெடுத்துப் போட்டாங்கள் என்று பழியைப் போடுகிறோம், இவ்வளவு பேரும் ஆதரவு தந்தால் தான் தமிழீழம் கிடைக்கும் என்றால் அதற்கு தேசியத் தலைவரா வேண்டும் அதை யாழ்ப்பாண்த்தில் பஸ் ஸ்ராண்டில் சுவீப் டிக்கட் விற்ற வைரமாளிகையால் கூட பெற்றிருக்க முடியும். ஏனென்றால். வைரமாளிகைக்கு கொஞ்சம் இங்கிலிஸ் பேசத் தெரியும்.
இவ்வாறான தடைகளையும் மீறி இலட்சியங்களை அடைவதற்குத் தானே நாங்கள் தலைவர்களைத் தெரிவு செய்து ஆதரவு வழங்குகிறோம். தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் என்றால் இப்படி எல்லாம் அனாவசியமாக உயிர்ப் பலி கொடுத்து எதற்காகப் போராட வேணடும் இப்படி மற்றவர்கள் மீது நொண்டிச்சாட்டுச் சொல்லவா இவர் தன்னை தேசியத்தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்தத் தோல்வியின் இரண்டாவது கட்டமாக நாங்கள் எங்களைத் தோற்கடித்த ராஜபக்ச மீது தாங்கமுடியாத கோபத்தில் இருக்கிறோம்.
நீங்களும் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளைக் கண்டிருப்பீர்கள், இளவட்டங்கள் சில நேரங்களில் பெண்; பிள்ளைகளோடு சொறிச் சேட்டைகளில் ஈடுபடுவார்கள், ஒரு தலைக்காதல் சேட்டைகள், சில நேரங்களில் விசயம் தெரியாமல் பெண்ணின் அண்ணன்மாரிடமோ. அல்லது அந்தத் தெருவில் உள்ள மற்ற போட்டிக் காதலர்களிடமோ மாட்டிக் கொண்டு அடி வாங்குவார்கள், அதிலும் மிகவும் அவமானமானது. அந்தப் பெணணின் முன்னால் அடி வாங்குவது,
அடி வாங்கியவருக்கு உலகத்தில் இல்லாத கோபம் வரும், பெண்ணின் முன்னால் அடி வாங்கிய அவமானம், பழி வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பார், திருப்பி அடிக்க தனக்கு திராணி இருக்காது, யாரையாவது பிடித்து பழிவாங்க வேண்டும் என்று அலைவார், இத்தனைக்கும் இப்படி தேவையில்லாமல் அந்தப் பெண்ணோடு சொறிச் சேட்டை விட்டது தன்னுடைய பிழை என்பதை இவர் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இன்றைக்கு தமிழர்களின் ராஜபக்ச மீதான மனநிலையும் இவ்வாறானது தான். எங்களை அவமானப்படுத்தி விட்டான். அவனைப் பழிக்குப் பழி வாங்காமல் விடக் கூடாது. எந்தச் சண்டியனைப் பிடித்து என்றாலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தான் இன்றைக்கு பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இது கிட்டத்தட்ட obsessionஎன்ற நிலைக்கு வந்து விட்டது, யுத்தக் குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்பது முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் குழப்ப வேண்டும் என்பது வரைக்கும் நாங்கள் முறுகிக் கொண்டு நிற்கிறோம்.
இலக்கிய நண்பர்கள் வாசித்திருப்பார்கள், சுந்தர ராமசாமியின் ஜெ,ஜெ சில குறிப்புகள், இதில் ஜெ,ஜெ ஒரு இலக்கியப் பிரகிருதி பற்றிச் சொல்வான்,,, அவனுடைய நிலைப்பாட்டை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்று, அதாவது அவனுக்கு என்று சொந்தமான நிலைப்பாடு எதுவும் இல்லை, அவனது எதிரிகள் எடுக்கும் நிலைப்பாடு எல்லாவற்றுக்கும் எதிரான நிலைப்பாட்டைத் தான் இவன் எடுப்பான் என்று.
இந்த obsession இன்று எந்த அளவில் வந்து நிற்கிறது எங்களுடைய அரசியலை இவ்வளவு நாளும் பிரபாகரன் நிர்ணயித்து வந்தது போய். இப்போது மகிந்த தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்.
சரத் பொன்சேகாவை ஒரு விடுதலை வீரனாகச் சித்தரித்து. அவரது மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து நாங்கள் கண்ணீர் விடுவதில் வந்து நிற்கிறது. பிரபாகரனைக் கொன்றது நான் தான். ராஜபக்ச அல்ல என்று சிங்கள இனவாதிகளின் வாக்குகளை எடுப்பதற்காக சொன்ன ஒருவரை. தமிழர்கள் சம உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் என்று கருத்துச் சொன்ன ஒருவரை. எங்கள் எதிரி மீதான கோபம் காரணமாக. எதிரிக்கு எதிரி நண்பன் என்றும் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறோம்.
எங்களுக்கு அடித்து விட்டான் என்று நாங்கள் பழி வாங்க கூலிக்கு அழைக்கும் சண்டியன் எங்களிடம் தொடர்ந்து கப்பம் கேட்பான் என்ற உண்மை எங்களுக்குத் தெரியாத படிக்கு எதிரி மீதான கோபம் கண்ணை மறைத்து விட்டது.
ராஜபக்ச ஒன்றும் புனிதர் இல்லை. ஆனால் ராஜபக்ச மீது மட்டும் கோபம் கொள்வதன் காரணம் என்ன?
ராஜபக்சவை யதார்த்தவாதி என்று புகழ்ந்தது யார் எழுபது கோடி ருபா வாங்கி தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது யார்?  இவர்கள் சொல்லலாம், தாங்கள் பணம் வாங்கியதாக புலிகள் சொல்லவில்லையே என்று சப்பைக்கட்டு கட்டலாம், கீழ் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்று தமிழ்ச்செல்வனே ஒப்புக் கொண்டிருந்தார். எனவே புலிகள் புனிதர்கள் இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ரணிலை விட. மகிந்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் மட்டுமே வென்றார். யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க விட்டிருந்தால் ரணில் ஜனாதிபதியாகி இருப்பார் என்பது தெரிந்த உண்மை. எனவே. மகிந்த ஜனாதிபதியானதற்கு காரணம். புலிகளே. புலிகள் மட்டுமே. புலிகளின் உதவி இல்லாமல் மகிந்த பதவிக்கு வந்திருக்கவே முடியாது. புலிகளுக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஒப்பந்தம் இருந்தது. எனவே தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்று மதித்த ஒருவர் மீது இவர்கள் கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
புலிகள் கொள்கையை விட்டு விலகாதவர்கள். அவங்கள் ஈழத்தை கடைசி மட்டும் விடேலைத் தானே என்று தம்பட்டம் அடிக்கும் நாங்கள் புலிக்கும் ஒரு விலை இருக்கிறது. அது விலை போகும் என்பது மட்டுமல்ல. தமிழினத்தையும் விலை பேசி விற்கும் என்ற உண்மையை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?
நீங்கள் சொல்லலாம்  ஒப்பந்தம் இருந்தது உண்மை. எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினோம். மகிந்த தான் வாக்குறுதியை மீறித் துரோகம் இழைத்து விட்டார் என்று.
புலிகள் ஒப்பந்தம் செய்த ஒவ்வொருவரையும் என்ன செய்தார்கள் என்ற வரலாறு எங்கள் கண் முன்னே நிற்கிறது. இந்தியாவோடு புரிந்துணர்வோடு இருந்தார்கள்.பிரேமதாசாவோடு புரிந்துணர்வுடன் இருந்தார்கள்.சந்திரிகாவோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் அவர்களைக் கொலை செய்த விவகாரங்கள் மகிந்தவுக்கு தெரிந்திருக்காதா புலிகள் எந்தக் காலத்தில் செய்த ஒப்பந்தங்களுக்கு உண்மையாக இருந்தார்கள் நோர்வேயில் சமஷ்டிக்கு சம்மதம் என்று கையெழுத்து வைத்து விட்டு வந்து ரணிலின் காலை வாரியதில் இருந்து தானே புலிகளின் அழிவு ஆரம்பிக்கிறது.
மகிந்தவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய பெருமை புலிகளைச் சாருகிறது. சிங்கள இனவாதிகளை நம்பக் கூடாது என்று. அரசுடன் தொடர்பு கொண்ட சகலரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி மண்டையில் போட்ட புலிகள் என்ன நம்பிக்கையுடன் மகிந்தவை நம்பினார்கள் மகிந்த என்ன ரணில் போல பச்சோந்தி வேடமா போட்டார் தான் சிங்கள இனவாதி தான். சிங்கள இனவாதிகளின் ஆதரவுக்காக எதையும் செய்வேன் என்று பகிரங்கமாகத் தானே அரசியல் நடத்தினார். தமிழருக்குப் பிரச்சனை இல்லை என்று தீர்வு கிடைப்பதைச் சகல வழிகளிலும் தடுத்த ஜே.வி.பி. உறுமயவுடன் தானே கூட்டு வைத்தார் இதில் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது?
மகிந்தவை தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்ற போது. மகிந்த ஒரு இனவாதி. இனவாதியை நம்பி அரசியல் நடத்துவது ஆபத்தில் முடியும் என்று எந்த ஆய்வாளர். எந்த ஊடகவியலாளர் தலைவருக்குப் புத்திமதி சொன்னார்?
தவறு மற்றவர்களில் அல்ல. உங்களிடம் இருக்கிறது. உங்கள் நுனி விரலில் தான் நோ இருக்கிறது.
புலிகள் விட்ட தவறை மறைத்து. மகிந்தவை எப்படியாவது அவமானப்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறியில் எங்கள் இனத்தின் எதிர்காலத்தை சிந்திக்க மறந்து விடுகிறோம். இன்றைக்கும் தமிழ் ஊடகங்கள்; பத்திரிகைகள். வானொலிகள். இணைய‌த்தளங்கள்,,, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களைச் செய்யத் தொடங்கி கால் ஊன்றத் தொடங்குகிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இன்றைக்கும் வெள்ளைவான் கடத்தல். கற்பழிப்பு என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள், அங்கே போய் வந்தவர்கள் எல்லாம் அங்கே மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் நம்புகிறார்கள் இல்லை.
(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக